1008 திருமுறை போற்றி திரட்டு (முழுப்பகுதி-1)
எல்லாஞ்
சிவனென்ன நின்றாய் போற்றி
எரிசுடராய்
நின்ற இறைவா போற்றி
கொல்லார்
மழுவாட் படையாய் போற்றி
கொல்லுங்கூற்றொன்றை உதைத்தாய் போற்றி
கல்லாதார் காட்சிக் கரியாய் போற்றி
கற்றா ரிடும்பை களைவாய் போற்றி
வில்லால் வியனரணம் எய்தாய் போற்றி
வீரட்டங் காதல் விமலா போற்றி.
கொல்லுங்கூற்றொன்றை உதைத்தாய் போற்றி
கல்லாதார் காட்சிக் கரியாய் போற்றி
கற்றா ரிடும்பை களைவாய் போற்றி
வில்லால் வியனரணம் எய்தாய் போற்றி
வீரட்டங் காதல் விமலா போற்றி.
பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி
பல்லூழி யாய படைத்தாய் போற்றி
ஓட்டகத்தே ஊணா உகந்தாய் போற்றி
உள்குவார் உள்ளத் துறைவாய் போற்றி
காட்டகத்தே ஆடல் மகிழ்ந்தாய் போற்றி
கார்மேக மன்ன மிடற்றாய் போற்றி
ஆட்டுவதோர் நாகம் அசைத்தாய் போற்றி
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.
முல்லையங் கண்ணி முடியாய் போற்றி
முழுநீறு பூசிய மூர்த்தி போற்றி
எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி
ஏழ்நரம்பி னோசை படைத்தாய் போற்றி
20
சில்லைச் சிரைத்தலையில் ஊணா போற்றி
சென்றடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய்
போற்றி
தில்லைச்சிற் றம்பல மேயாய் போற்றி
திருவீரட் டானத்தெஞ் செல்வா போற்றி.
சாம்பர் அகலத் தணிந்தாய் போற்றி
தவநெறிகள் சாதித்து நின்றாய் போற்றி
கூம்பித் தொழுவார்தங் குற்றே வலைக்
குறிக்கொண் டிருக்குங் குழகா போற்றி
பாம்பும் மதியும் புனலுந் தம்மிற்
பகைதீர்த் துடன்வைத்த பண்பா போற்றி
ஆம்பல் மலர்கொண் டணிந்தாய் போற்றி
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.
நீறேறு நீல மிடற்றாய் போற்றி
நிழல்திகழும் வெண்மழுவாள் வைத்தாய்
போற்றி
கூறே றுமையொருபாற் கொண்டாய் போற்றி
கோளரவம் ஆட்டுங் குழகா போற்றி
ஆறேறு சென்னி யுடையாய் போற்றி
அடியார்கட் காரமுத மானாய் போற்றி
ஏறேற என்றும் உகப்பாய் போற்றி
இருங்கெடில வீரட்டத் தெந்தாய் போற்றி.
40
பாடுவார் பாட லுகப்பாய் போற்றி
பழையாற்றுப் பட்டீச் சுரத்தாய் போற்றி
வீடுவார் வீடருள வல்லாய் போற்றி
வேழத் துரிவெருவப் போர்த்தாய் போற்றி
நாடுவார் நாடற் கரியாய் போற்றி
நாகம் அரைக்கசைத்த நம்பா போற்றி
ஆடுமா னைந்தும் உகப்பாய் போற்றி
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.
மண்டுளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி
மால்கடலு மால்விசும்பு மானாய் போற்றி
விண்டுளங்க மும்மதிலும் எய்தாய் போற்றி
வேழத் துரிமூடும் விகிர்தா போற்றி
பண்டுளங்கப் பாடல் பயின்றாய் போற்றி
பார்முழுது மாய பரமா போற்றி
கண்டுளங்கக் காமனைமுன் காய்ந்தாய் போற்றி
கார்க்கெடிலங் கொண்ட கபாலி போற்றி.
வெஞ்சினவெள் ளேறூர்தி யுடையாய் போற்றி
விரிசடைமேல் வெள்ளம் படைத்தாய் போற்றி
துஞ்சாப் பலிதேருந் தோன்றால் போற்றி
தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
60
நஞ்சொடுங்குங் கண்டத்து நாதா போற்றி
நான்மறையோ டாறங்க மானாய் போற்றி
அஞ்சொலாள் பாகம் அமர்ந்தாய் போற்றி
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.
சிந்தையாய் நின்ற சிவனே போற்றி
சீபர்ப்ப தஞ்சிந்தை செய்தாய் போற்றி
புந்தியாய்ப் புண்டரிகத் துள்ளாய் போற்றி
புண்ணியனே போற்றி புனிதா போற்றி
சந்தியாய் நின்ற சதுரா போற்றி
தத்துவனே போற்றியென் தாதாய் போற்றி
அந்தியாய் நின்ற அரனே போற்றி
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி
முக்கணா போற்றி முதல்வா போற்றி
முருகவேள் தன்னைப் பயந்தாய் போற்றி
தக்கணா போற்றி தருமா போற்றி
தத்துவனே போற்றியென் தாதாய் போற்றி
தொக்கணா வென்றிருவர் தோள்கை கூப்பத்
துளங்கா தெரிசுடராய் நின்றாய் போற்றி
எக்கண்ணுங் கண்ணிலேன் எந்தாய் போற்றி
எறிகெடில வீரட்டத் தீசா போற்றி.
80
அரவணையான் சிந்தித் தரற்றும்மடி போற்றி
அருமறையான் சென்னிக் கணியாமடி போற்றி
சரவணத்தான் கைதொழுது சாரும்மடி போற்றி
சார்ந்தார்கட் கெல்லாஞ் சரணாமடி போற்றி
பரவுவார் பாவம் பறைக்கும்மடி போற்றி
பதினெண் கணங்களும் பாடும்மடி போற்றி
திரைவிரவு தென்கெடில நாடன்னடி போற்றி
திருவீரட் டானத்தெஞ் செல்வனடி போற்றி
கொடுவினையா ரென்றுங் குறுகாவடி போற்றி
குறைந்தடைந்தார் ஆழாமைக் காக்கும்மடி
போற்றி
படுமுழவம் பாணி பயிற்றும்மடி போற்றி
பதைத்தெழுந்த வெங்கூற்றைப் பாய்ந்தவடி
போற்றி
கடுமுரணே றூர்ந்தான் கழற்சேவடி போற்றி
கடல்வையங் காப்பான் கருதும்மடி போற்றி
நெடுமதியங் கண்ணி யணிந்தானடி போற்றி
நிறைகெடில வீரட்டம் நீங்காவடி போற்றி
வைதெழுவார் காமம்பொய் போகாவடி போற்றி
வஞ்சவலைப் பாடொன் றில்லாவடி போற்றி
கைதொழுது நாமேத்திக் காணும்மடி போற்றி
கணக்கு வழக்கைக் கடந்தவடி போற்றி
100
நெய்தொழுது நாமேத்தி யாட்டும்மடி போற்றி
நீள்விசும்பை ஊடறுத்து நின்றவடி போற்றி
தெய்வப் புனற்கெடில நாடன்னடி போற்றி
திருவீரட் டானத்தெஞ் செல்வனடி போற்றி
அரும்பித்த செஞ்ஞாயி றேய்க்கும்மடி
போற்றி
அழகெழுத லாகா அருட்சேவடி போற்றி
சுரும்பித்த வண்டினங்கள் சூழ்ந்தவடி
போற்றி
சோமனையுங் காலனையுங் காய்ந்தவடி போற்றி
பெரும்பித்தர் கூடிப் பிதற்றும்மடி
போற்றி
பிழைத்தார் பிழைப்பறிய வல்லவடி போற்றி
திருந்துநீர்த் தென்கெடில நாடன்னடி
போற்றி
திருவீரட் டானத்தெஞ் செல்வனடி போற்றி
ஒருகாலத் தொன்றாகி நின்றவடி போற்றி
ஊழிதோ றூழி உயர்ந்தவடி போற்றி
பொருகழலும் பல்சிலம்பும் ஆர்க்கும்மடி
போற்றி
புகழ்வார் புகழ்தகைய வல்லவடி போற்றி
இருநிலத்தார் இன்புற்றங் கேத்தும்மடி
போற்றி
இன்புற்றார் இட்டபூ ஏறும்மடி போற்றி
திருவதிகைத் தென்கெடில நாடன்னடி போற்றி
திருவீரட் டானத்தெஞ் செல்வனடி போற்றி.
120
திருமகட்குச் செந்தா மரையாமடி போற்றி
சிறந்தவர்க்குத் தேனாய் விளைக்கும்மடி
போற்றி
பொருளவர்க்குப் பொன்னுரையாய் நின்றவடி
போற்றி
புகழ்வார் புகழ்தகைய வல்லவடி போற்றி
உருவிரண்டு மொன்றோடொன் றொவ்வாவடி போற்றி
உருவென் றுணரப் படாதவடி போற்றி
திருவதிகைத் தென்கெடில நாடன்னடி போற்றி
திருவீரட் டானத்தெஞ் செல்வனடி போற்றி.
உரைமாலை யெல்லா முடையவடி போற்றி
உரையால் உணரப் படாதவடி போற்றி
வரைமாதை வாடாமை வைக்கும்மடி போற்றி
வானவர்கள் தாம்வணங்கி வாழ்த்தும்மடி
போற்றி
அரைமாத் திரையில் லடங்கும்மடி போற்றி
அகலம் அளக்கிற்பார் இல்லாவடி போற்றி
கரைமாங் கலிக்கெடில நாடன்னடி போற்றி
கமழ்வீரட் டானக் கபாலியடி போற்றி.
நறுமலராய் நாறு மலர்ச்சேவடி போற்றி
நடுவாய் உலகநா டாயவடி போற்றி
செறிகதிருந் திங்களுமாய் நின்றவடி போற்றி
தீத்திரளா யுள்ளே திகழ்ந்தவடி போற்றி
140
மறுமதியை மாசு கழுவும்மடி போற்றி
மந்திரமுந் தந்திரமு மாயவடி போற்றி
செறிகெடில நாடர் பெருமானடி போற்றி
திருவீரட் டானத்தெஞ் செல்வனடி போற்றி.
அணியனவுஞ் சேயனவு மல்லாவடி போற்றி
அடியார்கட் காரமுத மாயவடி போற்றி
பணிபவர்க்குப் பாங்காக வல்லவடி போற்றி
பற்றற்றார் பற்றும் பவளவடி போற்றி
மணியடி பொன்னடி மாண்பாமடி போற்றி
மருந்தாய்ப் பிணிதீர்க்க வல்லவடி போற்றி
தணிபாடு தண்கெடில நாடன்னடி போற்றி
தகைசார் வீரட்டத் தலைவனடி போற்றி.
அந்தாம ரைப்போ தலர்ந்தவடி போற்றி
அரக்கனையும் ஆற்றல் அழித்தவடி போற்றி
முந்தாகி முன்னே முளைத்தவடி போற்றி
முழங்கழலாய் நீண்டவெம் மூர்த்தியடி
போற்றி
பந்தாடு மெல்விரலாள் பாகன்னடி போற்றி
பவளத் தடவரையே போல்வானடி போற்றி
வெந்தார் சுடலைநீ றாடும்மடி போற்றி
வீரட்டங் காதல் விமலனடி போற்றி .
160
கற்றவர்க ளுண்ணுங் கனியே போற்றி
கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி
அற்றவர்கட் காரமுத மானாய் போற்றி
அல்லலறுத் தடியேனை ஆண்டாய் போற்றி
மற்றொருவ ரொப்பில்லா மைந்தா போற்றி
வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி
திருமூலட்டா னனே போற்றி போற்றி.
வங்கமலி கடல்நஞ்ச முண்டாய் போற்றி
மதயானை ஈருரிவை போர்த்தாய் போற்றி
கொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி
கொல்புலித்தோ லாடைக் குழகா போற்றி
அங்கணனே அமரர்கள்தம் இறைவா போற்றி
ஆலமர நீழலறஞ் சொன்னாய் போற்றி
செங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி
திருமூலட்டா னனே போற்றி போற்றி.
மலையான் மடந்தை மணாளா போற்றி
மழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி
நிலையாக என்னெஞ்சில் நின்றாய் போற்றி
நெற்றிமே லொற்றைக்கண் ணுடையாய் போற்றி
180
இலையார்ந்த மூவிலைவே லேந்தி போற்றி
ஏழ்கடலு மேழ்பொழிலு மானாய் போற்றி
சிலையாலன் றெயிலெரித்த சிவனே போற்றி
திருமூலட்டா னனே போற்றி போற்றி.
பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி
பூதப் படையுடையாய் போற்றி போற்றி
மன்னியசீர் மறைநான்கு மானாய் போற்றி
மறியேந்து கையானே போற்றி போற்றி
உன்னுமவர்க் குண்மையனே போற்றி போற்றி
உலகுக் கொருவனே போற்றி போற்றி
சென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி
திருமூலட்டா னனே போற்றி போற்றி.
நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி
நற்றவனே நின்பாதம் போற்றி போற்றி
வெஞ்சுடரோன் பல்லிறுத்த வேந்தே போற்றி
வெண்மதியங் கண்ணி விகிர்தா போற்றி
துஞ்சிருளி லாட லுகந்தாய் போற்றி
தூநீறு மெய்க்கணிந்த சோதி போற்றி
செஞ்சடையாய் நின்பாதம் போற்றி போற்றி
திருமூலட்டா னனே போற்றி போற்றி.
200
சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி
சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி
பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி
புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி
அங்கமலத் தயனோடு மாலுங் காணா
அனலுருவா நின்பாதம் போற்றி போற்றி
செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி
திருமூலட்டா னனே போற்றி போற்றி.
வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி
வான்பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி
கொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி
குரைகழலாற் கூற்றுதைத்த கோவே போற்றி
நம்புமவர்க் கரும்பொருளே போற்றி போற்றி
நால்வேத மாறங்க மானாய் போற்றி
செம்பொனே மரகதமே மணியே போற்றி
திருமூலட்டா னனே போற்றி போற்றி.
உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி
உகப்பார் மனத்தென்றும் நீங்காய் போற்றி
வள்ளலே போற்றி மணாளா போற்றி
வானவர்கோன் தோள்துணித்த மைந்தா போற்றி
220
வெள்ளையே றேறும் விகிர்தா போற்றி
மேலோர்க்கு மேலோர்க்கு மேலாய் போற்றி
தெள்ளுநீர்க் கங்கைச் சடையாய் போற்றி
திருமூலட்டா னனே போற்றி போற்றி.
பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி
புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி
தேவார்ந்த தேவர்க்குந் தேவே போற்றி
திருமாலுக் காழி யளித்தாய் போற்றி
சாவாமே காத்தென்னை யாண்டாய் போற்றி
சங்கொத்த நீற்றெஞ் சதுரா போற்றி
சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி
திருமூலட்டா னனே போற்றி போற்றி.
பிரமன்றன் சிரமரிந்த பெரியோய் போற்றி
பெண்ணுருவோ டாணுருவாய் நின்றாய் போற்றி
கரநான்கும் முக்கண்ணு முடையாய் போற்றி
காதலிப்பார்க் காற்ற எளியாய் போற்றி
அருமந்த தேவர்க் கரசே போற்றி
அன்றரக்கன் ஐந்நான்கு தோளுந் தாளுஞ்
சிரம்நெரித்த சேவடியாய் போற்றி போற்றி
திருமூலட்டானனே போற்றி போற்றி
240
வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஓவாத சத்தத் தொலியே போற்றி
ஆற்றாகி யங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி
காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
பிச்சாடல் பேயோ டுகந்தாய் போற்றி
பிறவி யறுக்கும் பிரானே போற்றி
வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி
மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
பொய்ச்சார் புரமூன்று மெய்தாய் போற்றி
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
கச்சாக நாக மசைத்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
மருவார் புரமூன்று மெய்தாய் போற்றி
மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி யென்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி யொளித்தாய் போற்றி
260
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி யோடு முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
வானத்தார் போற்றும் மருந்தே போற்றி
வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி
ஊனத்தை நீக்கு முடலே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
தேனத்தை வார்த்த தெளிவே போற்றி
தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி
கானத்தீ யாட லுகந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
ஊராகி நின்ற உலகே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
பேராகி யெங்கும் பரந்தாய் போற்றி
பெயராதென் சிந்தை புகுந்தாய் போற்றி
நீராவி யான நிழலே போற்றி
நேர்வா ரொருவரையு மில்லாய் போற்றி
காராகி நின்ற முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
280
சில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி
தேவ ரறியாத தேவே போற்றி
புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய்
போற்றி
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய்
போற்றி
பற்றி உலகை விடாதாய் போற்றி
கல்லுயிராய் நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவ மறுப்பாய் போற்றி
எண்ணு மெழுத்துஞ்சொல் லானாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
இமையா துயிரா திருந்தாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
உமைபாக மாகத் தணைத்தாய் போற்றி
ஊழியே ழான ஒருவா போற்றி
300
அமையா அருநஞ்ச மார்ந்தாய் போற்றி
ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
கமையாகி நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
மூவாய் பிறவாய் இறவாய் போற்றி
முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி
தேவாதி தேவர்தொழுந் தேவே போற்றி
சென்றேறி யெங்கும் பரந்தாய் போற்றி
ஆவா அடியேனுக் கெல்லாம் போற்றி
அல்லல் நலிய அலந்தேன் போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
நெடிய விசும்போடு கண்ணே போற்றி
நீள அகல முடையாய் போற்றி
அடியும் முடியும் இகலி போற்றி
அங்கொன் றறியாமை நின்றாய் போற்றி
கொடிய வன்கூற்ற முதைத்தாய் போற்றி
கோயிலா என்சிந்தை கொண்டாய் போற்றி
கடிய உருமொடு மின்னே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
320
உண்ணா துறங்கா திருந்தாய் போற்றி
ஓதாதே வேத முணர்ந்தாய் போற்றி
எண்ணா இலங்கைக்கோன் றன்னைப் போற்றி
இறைவிரலால் வைத்துகந்த ஈசா போற்றி
பண்ணா ரிசையின்சொற் கேட்டாய் போற்றி
பண்டேயென் சிந்தை புகுந்தாய் போற்றி
கண்ணா யுலகுக்கு நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
பொறையுடைய பூமிநீ ரானாய் போற்றி
பூதப் படையாள் புனிதா போற்றி
நிறையுடைய நெஞ்சின் இடையாய் போற்றி
நீங்காதென் னுள்ளத் திருந்தாய் போற்றி
மறையுடைய வேதம் விரித்தாய் போற்றி
வானோர் வணங்கப் படுவாய் போற்றி
கறையுடைய கண்ட முடையாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
336
(336-690)
முன்பாகி நின்ற முதலே போற்றி 337
மூவாத மேனிமுக் கண்ணா போற்றி
அன்பாகி நின்றார்க் கணியாய் போற்றி
ஆறேறு சென்னிச் சடையாய் போற்றி
340
என்பாக வெங்கு மணிந்தாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
கண்பாவி நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
மாலை யெழுந்த மதியே போற்றி
மன்னியென் சிந்தை யிருந்தாய் போற்றி
மேலை வினைக ளறுப்பாய் போற்றி
மேலாடு திங்கள் முடியாய் போற்றி
ஆலைக் கரும்பின் தெளிவே போற்றி
அடியார்கட் காரமுத மானாய் போற்றி
காலை முளைத்த கதிரே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
உடலின் வினைக ளறுப்பாய் போற்றி
ஒள்ளெரி வீசும் பிரானே போற்றி
படருஞ் சடைமேல் மதியாய் போற்றி
பல்கணக் கூத்தப் பிரானே போற்றி
சுடரிற் றிகழ்கின்ற சோதி போற்றி
தோன்றியென் னுள்ளத் திருந்தாய் போற்றி
கடலி லொளியாய முத்தே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
360
மைசேர்ந்த கண்ட முடையாய் போற்றி
மாலுக்கும் ஓராழி ஈந்தாய் போற்றி
பொய்சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி
போகாதென் னுள்ளத் திருந்தாய் போற்றி
மெய்சேரப் பால்வெண்ணீ றாடி போற்றி
மிக்கார்க ளேத்தும் விளக்கே போற்றி
கைசேர் அனலேந்தி யாடீ போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
ஆறேறு சென்னி முடியாய் போற்றி
அடியார்கட் காரமுதாய் நின்றாய் போற்றி
நீறேறு மேனி யுடையாய் போற்றி
நீங்காதென் னுள்ளத் திருந்தாய் போற்றி
கூறேறு மங்கை மழுவா போற்றி
கொள்ளுங் கிழமையே ழானாய் போற்றி
காறேறு கண்ட மிடற்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
அண்டமே ழன்று கடந்தாய் போற்றி
ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
பண்டை வினைக ளறுப்பாய் போற்றி
பாரோர்விண் ணேத்தப் படுவாய் போற்றி
380
தொண்டர் பரவு மிடத்தாய் போற்றி
தொழில்நோக்கி யாளுஞ் சுடரே போற்றி
கண்டங் கறுக்கவும் வல்லாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
பெருகி யலைக்கின்ற ஆறே போற்றி
பேராநோய் பேர விடுப்பாய் போற்றி
உருகி நினைவார்தம் முள்ளாய் போற்றி
ஊனந் தவிர்க்கும் பிரானே போற்றி
அருகி மிளிர்கின்ற பொன்னே போற்றி
ஆரு மிகழப் படாதாய் போற்றி
கருகிப் பொழிந்தோடு நீரே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
செய்ய மலர்மேலான் கண்ணன் போற்றி
தேடி யுணராமை நின்றாய் போற்றி
பொய்யாநஞ் சுண்ட பொறையே போற்றி
பொருளாக என்னையாட் கொண்டாய் போற்றி
மெய்யாக ஆனஞ் சுகந்தாய் போற்றி
மிக்கார்க ளேத்துங் குணத்தாய் போற்றி
கையானை மெய்த்தோ லுரித்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
400
மேல்வைத்த வானோர் பெருமான் போற்றி
மேலாடு புரமூன்று மெய்தாய் போற்றி
சீலத்தான் தென்னிலங்கை மன்னன் போற்றி
சிலையெடுக்க வாயலற வைத்தாய் போற்றி
கோலத்தாற் குறைவில்லான் றன்னை யன்று
கொடிதாகக் காய்ந்த குழகா போற்றி
காலத்தாற் காலனையுங் காய்ந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
பாட்டான நல்ல தொடையாய் போற்றி
பரிசை யறியாமை நின்றாய் போற்றி
சூட்டான திங்கள் முடியாய் போற்றி
தூமாலை மத்த மணிந்தாய் போற்றி
ஆட்டான தஞ்சு மமர்ந்தாய் போற்றி
அடங்கார் புரமெரிய நக்காய் போற்றி
காட்டானை மெய்த்தோ லுரித்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
அதிரா வினைக ளறுப்பாய் போற்றி
ஆல நிழற்கீழ் அமர்ந்தாய் போற்றி
சதுரா சதுரக் குழையாய் போற்றி
சாம்பர் மெய்பூசுந் தலைவா போற்றி
420
எதிரா உலக மமைப்பாய் போற்றி
என்றுமீ ளாவருள் செய்வாய் போற்றி
கதிரார் கதிருக்கோர் கண்ணே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி
செல்லாத செல்வ முடையாய் போற்றி
ஐயாய் பெரியாய் சிறியாய் போற்றி
ஆகாச வண்ண முடியாய் போற்றி
வெய்யாய் தணியா யணியாய் போற்றி
வேளாத வேள்வி யுடையாய் போற்றி
கையார் தழலார் விடங்கா போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
ஆட்சி யுலகை யுடையாய் போற்றி
அடியார்க் கமுதெலாம் ஈவாய் போற்றி
சூட்சி சிறிது மிலாதாய் போற்றி
சூழ்ந்த கடல்நஞ்ச முண்டாய் போற்றி
மாட்சி பெரிது முடையாய் போற்றி
மன்னியென் சிந்தை மகிழ்ந்தாய் போற்றி
காட்சி பெரிது மரியாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
440
முன்னியா நின்ற முதல்வா போற்றி
மூவாத மேனி யுடையாய் போற்றி
என்னியா யெந்தை பிரானே போற்றி
ஏழி னிசையே யுகப்பாய் போற்றி
மன்னிய மங்கை மணாளா போற்றி
மந்திரமுந் தந்திரமு மானாய் போற்றி
கன்னியார் கங்கைத் தலைவா போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
உரியாய் உலகினுக் கெல்லாம் போற்றி
உணர்வென்னு மூர்வ துடையாய் போற்றி
எரியாய தெய்வச் சுடரே போற்றி
ஏசுமா முண்டி யுடையாய் போற்றி
அரியாய் அமரர்கட் கெல்லாம் போற்றி
அறிவே அடக்க முடையாய் போற்றி
கரியானுக் காழியன் றீந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
எண்மேலும் எண்ண முடையாய் போற்றி
ஏறரிய வேறுங் குணத்தாய் போற்றி
பண்மேலே பாவித் திருந்தாய் போற்றி
பண்ணொடுயாழ் வீணை பயின்றாய் போற்றி
460
விண்மேலு மேலும் நிமிர்ந்தாய் போற்றி
மேலார்கண் மேலார்கண் மேலாய் போற்றி
கண்மேலுங் கண்ணொன் றுடையாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
முடியார் சடையின் மதியாய் போற்றி
முழுநீறு சண்ணித்த மூர்த்தி போற்றி
துடியா ரிடையுமையாள் பங்கா போற்றி
சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி
அடியா ரடிமை அறிவாய் போற்றி
அமரர் பதியாள வைத்தாய் போற்றி
கடியார் புரமூன்று மெய்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
போற்றிசைத்துன் னடிபரவ நின்றாய் போற்றி
புண்ணியனே நண்ண லரியாய் போற்றி
ஏற்றிசைக்கும் வான்மே லிருந்தாய் போற்றி
எண்ணா யிரநுறு பேராய் போற்றி
நாற்றிசைக்கும் விளக்காய நாதா போற்றி
நான்முகற்கும் மாற்கு மரியாய் போற்றி
காற்றிசைக்குந் திசைக்கெல்லாம் வித்தே போற்றி
கயிலைமலையானேபோற்றிபோற்றி.
480
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே
நின்ற
நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
நச்சு அரவு ஆட்டிய நம்பன் போற்றி
பிச்சு எமை ஏற்றிய பெரியோன் போற்றி
நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி
இன்றெனக்
கெளிவந்து
இருந்தனன் போற்றி
அளிதரும்
ஆக்கை
செய்தோன் போற்றி
ஊற்றிருந்
துள்ளங்
களிப்போன் போற்றி
ஆற்றா இன்பம் அலர்ந்தலை போற்றி
சாயா அன்பினை நாள்தொரும் தழைப்பவர்போற்றி
தாயே ஆகி வளர்த்தனை போற்றி
மெய் தரு வேதியன் ஆகி வினைகெடக்
கைதரவல்ல
கடவுள்
போற்றி
ஆடக மதுரை அரசே போற்றி
கூடல் இலங்கு குருமணி போற்றி
தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்று எனக்கு ஆரமுது ஆனாய் போற்றி
500
மூவா நான்மறை முதல்வா போற்றி
சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி
மின் ஆர் உருவ விகிர்தா போற்றி
கல் நார் உரித்த கனியே போற்றி
காவாய் கனகக் குன்றே போற்றி
ஆ ஆ என்தனக்கு அருளாய் போற்றி
படைப்பாய்
காப்பாய்
துடைப்பாய் போற்றி
இடரைக் களையும் எந்தாய் போற்றி
ஈச போற்றி இறைவா போற்றி
தேசப் பளிங்கின் திரளே போற்றி
அரைசே போற்றி அமுதே போற்றி
விரை சேர் சரண விகிர்தா போற்றி
வேதி போற்றி விமலா போற்றி
ஆதி போற்றி அறிவே போற்றி
கதியே போற்றி கனியே போற்றி
நதி சேர் செஞ்சடை நம்பா போற்றி
உடையாய்
போற்றி
உணர்வே போற்றி
கடையேன்
அடிமை
கண்டாய் போற்றி
ஐயா போற்றி அணுவே போற்றி
சைவா போற்றி தலைவா போற்றி
520
குறியே போற்றி குணமே போற்றி
நெறியே போற்றி நினைவே போற்றி
வானோர்க்கு
அரிய
மருந்தே போற்றி
ஏனோர்க்கு
எளிய
இறைவா போற்றி
மூவேழ் சுற்றமும் முரண் உறு நரகு இடை
ஆழாமே அருள் அரசே போற்றி
தோழா போற்றி துணைவா போற்றி
வாழ்வேபோற்றி என்வைப்பேபோற்றி
முத்தா போற்றி முதல்வா போற்றி
அத்தா போற்றி அரனே போற்றி
உரைஉணர்வு இறந்த ஒருவ போற்றி
விரி கடலுலகின் விளைவே போற்றி
அருமையில் எளிய அழகே போற்றி
கருமுகிலாகிய கண்ணே போற்றி
மன்னிய திருவருள் மலையே போற்றி
என்னையும்
ஒருவன்
ஆக்கி இருங்கழல்
சென்னியில் வைத்த சேவக போற்றி
தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
அழிவிலா ஆனந்த வாரி போற்றி
அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி
முழுவதும் இறந்த முதல்வா போற்றி
மான்நேர் நோக்கி மணாளா போற்றி
540
வான்அகத்து அமரர் தாயே போற்றி
பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை
இரண்டாய்
மகிழ்ந்தாய்போற்றி
வெளியிடைஒன்றாய்
விளைந்தாய்
போற்றி
அளிபவர்
உள்ளத்து
அமுதே போற்றி
கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி
நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி
இடைமருது
உறையும்
எந்தாய் போற்றி
சடைஇடைக்
கங்கை
தரித்தாய் போற்றி
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீர் ஆர் திருவையாறா போற்றி
அண்ணாமலை எம் அண்ணா போற்றி
கண் ஆர் அமுதக் கடலே போற்றி
ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி
பாகம் பெண் உரு ஆனாய் போற்றி
பராய்த்
துறை
மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
மற்றுஓர்
பற்று
இங்கு அறியோன்போற்றி 560
குற்றாலத்து எம் கூத்தா போற்றி
கோகழி மேவிய கோவே போற்றி
ஈங்கோய் மலை எந்தாய் போற்றி
பாங்கு ஆர் பழனத்து அழகா போற்றி
கடம்பூர்
மேவிய
விடங்கா போற்றி
அடைந்தவர்க்கு
அருளும்
அப்பா போற்றி
இத்தி தன்னின் கீழ் இருமூவர்க்கு
அத்திக்கு அருளிய அரசே போற்றி
தென்னாடுடைய சிவனே போற்றி
என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஏனக் குருளைக்கு அருளினை போற்றி
மானக் கயிலை மலையாய் போற்றி
அருளிட வேண்டும் அம்மான் போற்றி
இருள் கெட அருளும் இறைவாபோற்றி
தளர்ந்தேன்
அடியேன்
தமியேன்போற்றி
களம் கொளக் கருத அருளாய் போற்றி
அஞ்சேல்
என்றுஇங்குஅருளாய்போற்றி
நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி
அத்தா போற்றி ஐயா போற்றி
நித்தா போற்றி நிமலா போற்றி
பத்தா போற்றி பவனே போற்றி
580
பெரியாய் போற்றி பிரானே போற்றி
அரியாய்
போற்றி
அமலா போற்றி
மறையோர் கோல நெறியே போற்றி
முறையோ தரியேன் முதல்வா போற்றி
உறவே போற்றி உயிரே போற்றி
சிறவே போற்றி சிவமே போற்றி
மஞ்சா போற்றி மணாளா போற்றி
பஞ்சு ஏர் அடியான் பங்கா போற்றி
அலந்தேன் நாயேன் அடியேன்போற்றி
இலங்கு சுடர் எம் ஈசா போற்றி
சுவைத்தலை மேவியகண்ணேபோற்றி
குவைப்பதி
மலிந்த
கோவே போற்றி
மலை நாடு உடைய மன்னே போற்றி
கலை ஆர் அரிகேசரியாய் போற்றி
திருக்கழுக் குன்றில் செல்வா போற்றி
பொருப்புஅமர்பூவணத்துஅரனேபோற்றி
அருவமும் உருவமும் ஆனாய் போற்றி
மருவிய கருணை மலையே போற்றி
துரியமும் இறந்த சுடரே போற்றி
தெரிவு அரிதுஆகிய தெளிவே போற்றி 600
தேளா முத்தச் சுடரே போற்றி
ஆள் ஆனவர்களுக்கு அன்பா போற்றி
ஆரா அமுதே அருளே
போற்றி
பேர் ஆயிரம் உடைப் பெம்மான் போற்றி
தாளி அறுகின் தாராய் போற்றி
நீள் ஒளி ஆகிய நிருத்தா போற்றி
சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி
சிந்தனைக்கு
அரிய
சிவமே போற்றி
மந்திர மாமலை மேயாய் போற்றி
எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி
புலிமுலை புல் வாய்க்கு அருளினை போற்றி
அலைகடல் மீ மிசை நடந்தாய் போற்றி
கரும் குருவிக்கு அன்று அருளினை போற்றி
இரும் புலன் புலர இசைந்தனை போற்றி
படி உறப் பயின்ற பாவக போற்றி
அடியொடு
நடு
ஈறு ஆனாய் போற்றி
நரகொடு சுவர்க்க நானிலம் புகாமல்
பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி
ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி
செழு மலர்ச் சிவபுரத்து அரசே போற்றி 620
கழு நீர் மாலைக் கடவுள் போற்றி
தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி
பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன்
குழைத்த
சொல்மாலை
கொண்டருள் போற்றி
புரம்பல எரித்த புராண போற்றி
பரம் பரம் சோதிப் பரனே போற்றி
புயங்கப் பெருமான் போற்றி போற்றி
புராண காரண போற்றி போற்றி
சய சய போற்றி
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம்
மார்கழிநீர்
ஆடேலோர் எம்பாவாய்
போற்றியென் வாழ்முதலாகிய பொருளே
தரிக்கிலேன்
காய
வாழ்க்கை சங்கரா போற்றி
வான விருத்தனே
போற்றி
640
எங்கள் விடலையே போற்றி
ஒப்பில் ஒருத்தனே போற்றி
உம்பர் தம்பிரான் போற்றி
தில்லை
நிருத்தனே
போற்றி
எங்கள் நின்மலா போற்றி போற்றி
போற்றிஓம்நமச்சிவாயபுயங்கனேமயங்குகின்றேன்
போற்றிஓம்நமச்சிவாயபுகலிடம்பிறிதொன்றில்லை
போற்றிஓம்நமச்சிவாயபுறமெனைப்போக்கல்கண்டாய்
போற்றி ஓம் நமச்சிவாய சயசய போற்றி போற்றி.
போற்றியென்
போலும்பொய்யர்
தம்மைஆட் கொள்ளும் வள்ளல் போற்றி
நின் பாதம் போற்றி நாதனே போற்றி போற்றி
போற்றி நின்கருணைவெள்ளப் புதுமதுப்புவனம்
காற்றியமானன்
வானம்
இருசுடர்க்கடவுளேபோற்றி
என்னைக் கண்டு கொண்டருளு போற்றி
விடவுளே உருக்கியென்னைஆண்டிடவேண்டும்போற்றி
உடலிது களைந்திட்டொல்லை உம்பர்தந்தரளு போற்றி
சடையுளே கங்கை வைத்த சங்கரா போற்றி போற்றி.
சங்கராபோற்றி மற்றோர் சரணிலேன் போற்றி 660
வெண் நகைக்கரிய வாட்கண் மங்கையோர் பங்கபோற்றி
மால்விடை யூர்தி போற்றி
இழித்தனன் என்னை யானே எம்பிரான்போற்றிபோற்றி
பழித்தனன் உன்னை என்னைஆளுடைப் பாதம்போற்றி
பிழைத்தவைபொறுக்கைஎல்லாம்பெரியவர்கடமைபோற்றி
ஒழித்திடு வ்வாழ்வு போற்றி உம்பர்நாட்டெம்பி ரானே.
எம்பிரான் போற்றி வானத் தவரவர் ஏறு போற்றி
கொம்பரார் மருங்குல்மங்கை கூறவெண் நீற போற்றி
விடவுளே உருக்கியென்னைஆண்டிடவேண்டும்போற்றி
உடலிது களைந்திட்டொல்லை உம்பர்தந்தரளு போற்றி
சடையுளே கங்கை வைத்த சங்கரா போற்றி போற்றி.
சங்கராபோற்றி மற்றோர் சரணிலேன் போற்றி 660
வெண் நகைக்கரிய வாட்கண் மங்கையோர் பங்கபோற்றி
மால்விடை யூர்தி போற்றி
இழித்தனன் என்னை யானே எம்பிரான்போற்றிபோற்றி
பழித்தனன் உன்னை என்னைஆளுடைப் பாதம்போற்றி
பிழைத்தவைபொறுக்கைஎல்லாம்பெரியவர்கடமைபோற்றி
ஒழித்திடு வ்வாழ்வு போற்றி உம்பர்நாட்டெம்பி ரானே.
எம்பிரான் போற்றி வானத் தவரவர் ஏறு போற்றி
கொம்பரார் மருங்குல்மங்கை கூறவெண் நீற போற்றி
செம்பிரான்போற்றி
தில்லைத்திருச்சிற்றம்பலவபோற்றி
உம்பரா
போற்றி
என்னை ஆளுடை ஒருவ போற்றி.
ஒருவனே போற்றி ஒப்பில் அப்பனே போற்றி
வானோர் குருவனே போற்றி
எங்கள் கோமளக் கொழுந்து போற்றிவருக என்றென்னைநின்பால்வாங்கிடவேண்டும்போற்றி
தருகநின்
பாதம்
போற்றி
தீர்ந்தஅன்
பாய
அன்பர்க்கு அவரினும் அன்ப போற்றி
|
பேர்ந்தும் என் பொய்மைஆட்கொண்டு அருளிடும் பெருமை போற்றி
வார்ந்தநஞ்சயின்று வானோர்க்கமுதம்ஈ வள்ளல்போற்றி
ஆர்ந்தநின்பாதம்
நாயேற்
கருளிட வேண்டும் போற்றி.
போற்றி இப்புவனம் நீர்தீக் காலொடு வானமானாய்
போற்றி
எவ்வுயிர்க்கும்தோற்றமாகிநீதோற்றமில்லாய்
போற்றி
எல்லாஉயிர்க்கும்
ஈறாய் ஈறின்மையானாய்
போற்றி ஐம்புலன்கள் நின்னைப் புணர்கிலாப்
புணர்க்கையானே
|
செங்கணா
போற்றி
! திசைமுகாபோற்றி !
சிவபுர நகருள்வீற் றிருந்த
அங்கணா போற்றி ! அமரனே போற்றி !
அமரர்கள்
தலைவனே
போற்றி !
தங்கள் நான்மறை நூல் சகலமும் கற்றோர்
சாட்டியக்
குடியிருந்
தருளும்
எங்கள்நா
யகனே
போற்றி !
ஏழ் இருக்கைஇறைவனே போற்றியே போற்றி. 690
இமையோர்
பெருமானே போற்றி
எழில்சேர்உமையாள் மணவாளா போற்றி
எமையாளும்தீயாடி போற்றி
சிவனே
அடிபோற்றி
ஈசனே எந்தாய்
இறைபோற்றி
தூயசீர்ச்சங்கரனே
போற்றி
சடாமகுடத்
தாய்போற்றி
பொங்கரவா
பொன்னங் கழல்போற்றி
அருச்சுனர்க்குப் பாசுபதம் ஈந்த பதம்போற்றி
தூயமலைமேலாய்
போற்றி
மயானத்தாய்
வானோர்தலைமேலாய்போற்றி
தாள் போற்றி
நிலைபோற்றி
நின்றவா நின்ற
நிலைபோற்றி
கோணாது நின்ற குறிபோற்றி
காலன்உரத்தில் உதைத்த உதை போற்றி காமன் அழகழித்த கண்போற்றி |
|||||
முயலகன்தன் மொய்ம்பைஅடங்க மிதித்தஅடி போற்றி
ஆலமுண்ட கண்டம் அதுபோற்றி
தோளிருபதும்நெரியமெத்தனவே
வைத்தவிரல் போற்றி 710
அயன்சிரத்தைவெட்டிச் சிரித்த விறல்போற்றி
பூமாலைபோனகமும்நற்கோலம்ஈந்தநலம்போற்றி
மிக்கஅ தீந்த விறல்போற்றி செங்கைத் திறத்த திறல்போற்றி வரமன் றளித்தவலி போற்றி |
|||||
மாகாளி
கோபந்
தவிரஎடுத்த
நடத்தியல்பு போற்றி
|
எத்தகைய அரும்பணி இது! பணிவன்புடன் தங்களது திருவடிகளை வணங்குகிறேன் ஐயா. சிவசிவ!
ReplyDeleteஒரு ஐயம். 21 முதல் 40 முடிய இருப்பதில் 18 போற்றிகள்தாமே இருக்கின்றன? வரிகளைத்தான் கணக்கில் கொள்ளணுமா? தயவு செய்து விளக்கவும் ஐயா. வணக்கம்
ReplyDeleteஆயினும் 100 என வருகையில் கணக்கு சரியாகவே இருக்கிறது ஐயா. குறையொன்றுமில்லை சிவனே!
ReplyDeleteதிரு vsk அவர்களே வணக்கம்..
ReplyDeleteபதிவை படித்தமைக்கு நண்றி ..
ஐயா சிவஞான போத விலக்கதின் படி பார்தால் அனைத்து ஆன்மாக்களையும் வழி நடத்துவது சிவமே(சிவசத்து).அவ் வாய்மையின் படி பார்பின் நாம் அனைவருள்ளும் சிவபெருமனே ஆன்மாக்களை வழினடத்துகின்றார் . எனவே நாம் அனைவரும் திருவடி பனிய வேண்டியது “எந்நாட்டவர்க்கும் இரைவனாம் சிவபெருமானையே”
ReplyDeleteநன்றி
தங்களது கூற்றின்படியே தங்களுள்ளிருக்கும் சிவனையே அடி பணிந்தேன் , பணிகிறேன் ஐயா. வணக்கம்.
ReplyDeleteஇந்தப் பதிவை, போற்றி எனும் ஈர்ச்சொல்லால் பிரித்தப்போது, மொத்தம் 1053 போற்றிகள் கிடைத்தன ஐயா.
ReplyDeleteதிரு vsk ஐயா அவர்களே..
ReplyDeleteஅடியேன் நிலையற்ற (அசத்து) .சத்தானவன் தேவாதி தேவன் ! சிரு தெய்வனங்கள் எல்லம் தொழும் தெய்வம் சிவபெருமானே!
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி--என்பதற்கு ஏற்ப அவன் அருளால் நான் பதிந்தேன் நீங்கள் படிக்கின்றீர்கள்..
சர்வம் சிவம்...எனவே அல்லல் பிறவி அறுப்பானை,கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானை,சொல்லற்கு அரியானை,தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானை,
தென்னாடுடய சிவனை,எந்னாட்டவருக்கும் இரைவனாம்
“பரசிவனை இமை காலம் கழியமால் தொழுவோம்’’
நன்றி..