Friday 30 May 2014

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றார் ஒளவையார். ஆலயம் என்பது ஆ+லயம் எனப் பிரிக்கலாம். ஆ என்பதற்கு ஆன்மா என்று பொருள். லயம் என்பதற்கு லயமாவதற்கு அல்லது சேருவதற்குரிய இடம் என்பது பொருள். ஆகவே கடவுள் திருவடியில் ஆன்மா லயிப்பதற்குரிய இடம் எனப் பொருள் கூறலாம். ஆ என்பது ஆணவ மலத்தையும், லயம் என்பது அடங்கி இருத்தலையும் குறிக்கும். அதனால் ஆலயம் ஆணவ மலம் அடங்குவதற்குரிய இடம் எனவும் கூறுவர், இதனை கோயில் எனவும் கூறுவர் கோ-கடவுள் இல் தங்குமிடம். கோயில்-கடவுள் தங்குமிடம் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. ஆகவேதான் ஆலய வழிபாடு என்பது இறைவழிபாடு என்று பொருள்படும். அது பற்றியே மெய்கண்ட தேவநாயனாரும். ஆலயந்தானும் அரனெனத் தொழுமே என்றருளினார். எங்கும் நீக்கமற்ற நிறைந்துள்ள இறைவனை ஆலயங்களில் மட்டும் ஏன் வழிபட வேண்டும் எனச் சிலர் கருதுவர். இறைவன் எங்கும் நிறைந்துள்ளான் என்பதில் ஐயமில்லை. ஆனால் இறையருள் எல்லா இடங்களிலும் விளங்கித் தோன்றுவதில்லை.

பால் முழுவதும் நெய் கலந்துள்ளது. எனினும் தயிரிலிருந்தே விளங்கித் தோன்றும். பூமியின் அடியில் எங்கும் தண்ணீர் வியாபித்திருந்தாலும், நாம் அதை உபயோகப்படுத்த வேண்டுமானால் ஒரு கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு போன்றவற்றின் மூலம்தான் பயன்படுத்த முடிகிறது. இவற்றைப்போல் கடவுள் எங்கும் நிறைந்திருந்தாலும் ஆலயங்களில் சிறப்பாக நின்று அருள் செய்கின்றார். பசுவின் உடம்பெல்லாம் பால் வியாபித்திருந்தாலும் அது அகடுகளின் (மடி) வழியாகவே நமக்குக் கிடைக்கிறது. அதுபோல் இறைவன் எங்கும் வியாபித்திருந்தாலும் ஆலயங்களில் உள்ள மூர்த்திகளின் வழியாகவே அருளைச் சுருக்கிறான்.

ஆலயம் மனிதவடிவம்
கோயில்கள் நமது உடம்பின் வடிவில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனை சேஷத்திரம் சரீரப்பிரஸ்தாரம் என்பர். ஆலயம் மனிதர் உடம்புபோல் அமைக்கப்பட்டிருக்கிறது என்பது இதன் பொருள். இதனை திருமூலரின் பின்வரும் பாடல் மூலம் உணரலாம்.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பாலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே!

இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும், (மந்திரம், பாவனை கிரியைகளால்) அவனருள் ஆலயத்தில் விளங்கித் தோன்றும். சிவஞான யோகிகளும், மாயை காரிய உருக்களும் எம்பிரான் வடிவம் ஆயவேல் அவை அருள் மயமாகும்? என்றருளினார். எனவே ஆலய வழிபாடு மிக அவசியம் என்பது உணரப்படும்.

ஆலய அமைப்பும் எல்லா இடங்களிலும் ஒரே முறையாக இருந்து வருகின்றது. பொதுவாக எல்லா சிவாலங்களிலும் கர்ப்பக்கிருகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், நீராட்டு மண்டபம், தம்ப மண்டபம், நிருத்த மண்டபம் முதலியனவும்; ஐந்து அல்லது மூன்று பிராகாரங்களும், கோபுரமும், யாகசாலை, நந்தி, பலிபீடம், கொடிமரம் முதலியவையும் முக்கியமாகக் காணப்படுவனவாகும். இவ்வமைப்பு உடலமைப்பை ஒட்டியது என்பர் ஆன்றோர். தேகமாகிய ஆலயத்துள்ளும் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என ஆறு ஆதாரங்களும் அறியப்படும்.  இவ்வுடலில் அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் என்று ஐந்து கோசங்கள் உள்ளன. (கோசம்-சட்டை). கோயிலிலுள்ள ஐந்து பிராகாரங்களும் இவற்றைக் குறிக்கின்றன. அன்னமய கோசம் முதலியவற்றைத் தூல சரீரம், சூக்கும சரீரம், குண சரீரம், கஞ்சுக சரீரம், காரணச் சரீரம் என அறிக.

ஆலயத்தில் தரிசிக்க வேண்டியவை ஏழு
1. சிவாலயக் கோபுரம் (இது தூலலிங்கம் எனப்படும்) 2. சிவாலயத்தின் வாயில். 3. பலிபீடம்(இது பத்ரலிங்கம் எனப்படும்)4. பிராகாரம். 5.கர்ப்பக்கிருக விமானம்(இது தூயலிங்கம் எனப்படும்) 6. அர்ச்சகர். 7. சிவலிங்கப் பெருமான்(சதாசிவ மூர்த்தி என்றும், பார்த்தலிங்கம் என்றும் கூறப்படும்).

ஆலய தரிசனம் செய்ய விரும்புவோர் நீராடி, தோய்த்துவந்த உடைகளை அணிந்து செல்லவேண்டும். ஆலயத்தை நெருங்கியதும் கால்களைக் கழுவிக் கொண்டு பின் தூலலிங்கமாகிய திருக்கோபுரத்தை தரிசித்து. இரண்டு கைகளையும் தலைக்குமேலே குவித்த வண்ணம் சிவநாமங்களை உச்சரித்துக் கொண்டு உள்ளே செல்லவேண்டும். உள்ளே சென்றதும். பலிபீடத்தையும் கொடிமரத்தையும். இடபதேவரையும் வணங்கவேண்டும். பின் பலிபீடத்திற்கு இப்பால் மும்முறை விழுந்து வணங்கவேண்டும்(கிழக்கு, மேற்கு நோக்கிய சன்னிதகளாயின் வடக்கே தலைவைத்தும், தெற்கு, வடக்கு நோக்கிய சன்னிதிகளாயின் கிழக்கே தலைவைத்தும் வணங்கவேண்டும். கிழக்கிலும் வடக்கிலும் கால்நீட்டி வணங்கக்கூடாது) ஆண்கள் எட்டுறுப்புகளும், பெண்கள் ஐந்துறுப்புகளும் நிலத்தில் தோய வணங்கவேண்டும். (தலை, கையிரண்டு, செவி இரண்டு, மேவாய், புயங்கள் இரண்டு என்பன எட்டுறுப்புகள். தலை, கையிரண்டு, முழந்தாள் இரண்டு என்பன ஐந்துறுப்புகள்.)

பின்னர், தலையிலேனும் மார்பிலேனும் கைகளைக் குவித்துக்கொண்டு, குறைந்தது மூன்று முறை பிராகாரத்தை மெதுவாக வலம் வர வேண்டும். (கைகளைத் தொங்கவிட்டுக் கொண்டோ, கட்டிக்கொண்டோ வலம் வரக்கூடாது) மீண்டும் பலிபீடத்திற்கு இப்பால் விழுந்து வணங்கவேண்டும். (இந்த இடத்தைத் தவிர வேறு எந்த இடத்திலும் விழுந்து வணங்குதல் குற்றமாகும்) பின்பு துவார பாலகர்களை வணங்கி உள்ளே சென்று கணநாத ராகிய திருநந்திதேவரை வணங்கி, பகவானே, உம் திருவடிகளை அடைந்து அடியேன் உள்ளே சென்று சிவபெருமானை தரிசித்துப் பயன்பெறும் பொருட்டு அனுமதி செய்தருளும் என வேண்டிக் கொண்டு உள்ளே செல்லவேண்டும்.

உள்ளே சென்றதும் விக்னேசுவரனை வணங்க வேண்டும். (இரண்டு கைகளையும் முட்டியாகப் பிடித்து நெற்றியில் மூன்றுமுறை குட்டி, வலச்செவியை இடக்கையினாலும், இடச் செவியை வலக்கையினாலும் பிடித்து மூன்று முறை தாழ்ந்து எழுவேண்டும்) பின்னர் சிவலிங்கப் பெருமான் சன்னிதியை அடைந்து வணங்கியபின்., உமாதேவியார் சன்னிதி அடைந்து வணங்கி விபூதி, குங்குமம் வாங்கித் தரித்துக் கொள்ளவேண்டும். பின்பு சபாபதி, தட்சிணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், சந்திசேகரர், சுப்பிரமணியர்யும், சமயக்குரவர் நால்வரையும் தரிசனம் செய்தல் வேண்டும், பின்னர் உள்பிராகாரத்தில் வலம்வந்து, சண்டீசர் சன்னிதி அடைந்து தாளத்திரயம் செய்து சிவதரிசன பலத்தைத் தரும்படிப் பிரார்த்திக்க வேண்டும். (தாளத்திரயம் என்பது மெல்லிய ஒலி எழும்படி வலது கை விரல்கள் இடது உள்ளங்கையில் மூன்று முறை தட்டுதல். பின் வலமாக வந்து இடபதேவரை வணங்கி, அங்கிருந்தே சிவலிங்கப் பெருமானை தரிசித்து பலிபீடத்திற்கு இப்பால் மும்முறை விழுந்து வணங்கவேண்டும், பின்பு ஓரிடத்தில் வடக்கு நோக்கி அமர்ந்து சிவமந்திரத்தை செபித்துப் பின் எழுந்து வீட்டிற்குச் செல்லவேண்டும். சிவாலயத்திற்குச் செல்வோர் தங்கள் தகுதிக்கேற்ப பழம் முதலியன கொண்டு சென்று அர்ச்சிப்பித்து விபூதி பிரசாதம் பெறவேண்டும். ஒன்றும் இயலாதவர் சன்னிதியில் கிடக்கும் குப்பை முதலியவற்றை நீக்குதல் அலகிடுதல், கோலமிடுதல் முதலிய தொண்டுகள் செய்யவேண்டும். தினந்தோறும் ஆலய தரிசனஞ்செய்ய இயலாதவர்கள் திங்கள், செவ்வாய், வெள்ளி, பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை, திருவாதிரை, சிவராத்திரி, நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, கந்த சஷ்டி முதலிய புண்ணிய காலங்களில் தரிசனம் செய்தல் வேண்டும்.

விரதத்தின் போது கடைப்பிடிக்க வேண்டியவை!






கடவுளை எண்ணி விரதம் மேற்கொள்வதால் நமது உள்ளம் தூய்மை அடைவதுடன் அறியாமையினால் நாம் செய்த தீவினைகளும், பாவங்களும் நம்மை விட்டு விலகும். விரதம் மேற்கொள்ளும்போது கீழ்கண்டவற்றை தவறாது கடைப்பிடிக்கவேண்டும்.

*சதாசர்வ காலமும் மனதில் இறைவனை மட்டுமே எண்ணி துதித்தல் வேண்டும்.
*தம்மை விதவிதமாக அலங்காரம் செய்து கொள்ளாமலும், நாவிற்கு சுவையான உணவு வகைகளை உண்ணாமலும் இருத்தல் வேண்டும்.
*கேளிக்கைச் செயல்களிலோ, வீண் விவாதங்களிலோ ஈடுபடக்கூடாது.
*பிறரைப்பற்றி புறம் பேசுவதோ, குறை கூறுவதோ கூடாது.
*அடுத்தவர் மனம் துன்பப்படும்படியான தீய சொற்களைப் பேசக்கூடாது.
*மனதில் தான் என்ற கர்வத்தை அறவே அகற்ற வேண்டும்.
*விரும்பத்தகாத செயல்களை செய்யக்கூடாது.
*அதிகமாக தானம் செய்ய வேண்டும். அவ்வாறு, தானம் செய்யும்போது எவ்வளவு பொருள் கொடுத்தாலும், இவ்வளவு குறைவாகவே கொடுக்கிறோமே!  என்ற எண்ணத்துடன் கொடுக்கவேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் எளிதில் இறைவனின் அருளை எளிதில் பெறலாம்.

என்ன கிழமையில் என்ன மூச்சு?

எல்லோருக்கும் எல்லாவற்றையும் அடைய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. மோட்டார் பைக்கா, சி.டி.பிளேயரா, கேமராவுடன் இணைந்த செல்போனா எதுவானாலும் நம்மிடம் இருக்க வேண்டும். இதையே இன்னும் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லப் போனால் உயர்ந்ததான பொருள் நம்மிடம் இருக்க வேண்டும். நம்மிடம் ‘மட்டும்’தான் இருக்க வேண்டும் என்ற எண்ணமும் உண்டு. இந்த எண்ணம் தவறா என்ற கேள்வி எழுந்தால், ‘தவறில்லை’ என்பதுதான் பதிலாக இருக்கும். அது நியாயமான பதிலும் கூட! ஆனால், பிரச்னை எங்கு வருகிறது என்றால், அவ்வாறு ஆசைப்படுவர்களில் 99.9 சதவீதத்தினர் அஸ்திவாரமே இல்லாமல் கட்டிடம் கட்டிக் கொண்டிருக்கிறோம். பிரச்னையே இங்குதான் வருகிறது. இதை, முன்னோர்கள் நகைச்சுவையாக, ஒரு சிறிய கதையின் மூலம் அறிவுறுத்துவார்கள்:
ஒரு பெரிய கோடீஸ்வரர், நாலு மாடிக் கட்டிடம் கட்டத் தீர்மானித்தார். கட்டிடம் வேலையை ஐந்து ஒப்பந்தக்காரர்களிடம் பொறுப்பாக ஒப்படைத்தார். பூமி பூஜை போட்டார். ஒப்பந்தக்காரர்களில் நால்வர் மட்டும் வந்திருந்தனர். ஒருவர் வரவில்லை. அதற்காகப் பணக்காரர் கவலைப்படவில்லை. அவர் பூமி பூஜையை முடித்தார். அது முடிந்ததும், வந்திருந்த ஒப்பந்தக்காரர்களிடம், ‘‘ம், பூமி பூஜை போட்டாச்சு. வேலையை ஆரம்பியுங்கள்’’ என்றார்.
ஒப்பந்தக்காரர்களோ, ‘‘அது எப்படிங்க முடியும்? அஸ்திவாரத்துக்குப் பொறுப்பு ஏத்துக்கிட்டவர் வர்லீங்களே! அவர் இல்லாம, நாங்க என்னத்தச் செய்ய முடியும்?’’ என்றார்கள்.
பணக்காரர் அசரவில்லை. ‘‘அட! அதனால் என்ன? அஸ்திவாரம் வெளியில் தெரியவா போகிறது? அது பாட்டுக்கு அடியில் கிடக்கப்போகிறது. அதனால், அஸ்திவாரத்தைப் பிறகு கட்டிக் கொள்ளலாம். முதலில் நீங்கள் நான்கு பேர்களும் உங்கள் வேலையை முடியுங்கள்!’’ என்றார். அதைக் கேட்டதும் ஒப்பந்தக்காரர்கள் சிரித்து விட்டார்கள். பிறகு? சிரிக்காமல் என்ன செய்வதாம்? அந்தப் பணக்காரரைப் போல்தான் நாமும் இருக்கிறோம். அஸ்திவாரத்தை பற்றிக் கவலையே படாமல், மேன்மேலும் கட்டிடங்களைக் கட்டிக் கொண்டிருக்கிறோம். அதாவது, உடம்பைப் பற்றிக் கவலைப்படாமல், அதே சமயம் உடல்பினால் அடையக் கூடிய அனைத்தையும் அடைய விரும்புகிறோம். வேட்டையாடுகிறோம். விளைவு?
உடம்பு கெட்டுப் போகிறது. அதன் பிறகு, எது கிடைத்து, எது இருந்துதான் என்ன பலன்? ஆரோக்கியம் இல்லாவிட்டால் அகில உலகமுமே நமக்குக் கிடைத்தும் பலனில்லை. அதை அடைய வழி? ‘காலைப் பிடி! காயம் நன்றாக இருக்கும்‘’என்றார்கள் நமது முன்னோர்கள். இதில், ‘கால்’ என்பது, நாம் நடந்து செல்ல உதவுகிறதே, அந்தக் கால்களைக் குறிக்காது; காற்றைக் குறிக்கும். தமிழில் ‘கால்’ என்றால் ‘காற்று’ என்று பொருள். ‘மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே’ என இப்பொருளில்தான். ஔவையார் விநாயகர் அகவலில் கூறி இருக்கிறார். ராமாயணத்தில், ஆஞ்சநேயர் கடலைத் தாண்டி இலங்கைக்குச் சென்றார். அங்கே அவர் சீதையைச் சந்தித்தார். அப்போது சீதை, ‘‘ஆஞ்சநேயா! நீ எப்படி கடலைத் தாண்டி வந்தாய்’’ எனக் கேட்டார்.
அதற்கு ஆஞ்சநேயர் ‘‘இக் கருங் கடல் கடந்தது என் காலினால்’’ என்று பதில் கூறினார்(கம்ப ராமாயணம்-சுந்தரகாண்டம்.) ஆஞ்சநேயர் என்ன காலால் நடந்தா கடலைத் தாண்டினார்? ஆகாய வீதி வழியாகப் பறந்தல்லவா வந்தார்? மூச்சுக் காற்றை முறையாக அடக்கிப் பிராணாயாமப் பயிற்சியில் ஈடுபட்டவர்களுக்கு, அதில் சித்தி பெற்றவர்களுக்கு, ஆகாயத்தில் பறக்கும் சக்தி உண்டாகும். இதைத்தான் ஆஞ்சநேயர், காலால் கடலைக் கடந்ததாகக் குறிப்பிட்டார். இவ்வாறு கம்ப ராமாயணத்திலும் ‘கால்’ என்பது காற்றையே குறிக்கிறது. இதையே நமது முன்னோர்கள் ‘காலைப்பிடி, காயம் நன்றாக இருக்கும்’ என்று கூறினார்கள். காற்றைப் பிடித்தால், உடம்பு (காயம்) நன்றாக இருக்கும். என்பதே அதன் பொருள்.
அந்தக் காற்றைப் பிடித்து, உடம்பை நன்றாக வைத்துக் கொள்ளும் வழி வகைகளைப் பற்றித் திருமூலர் சொல்வதைச் சிந்திக்கலாம், வாருங்கள்!
ஒரு நாளைக்கு நாம் 21600 தடவை மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த மூச்சுக் காற்று, பிராணவாயு எனப்படும். அந்தப் பிராணவாயுவை இடகலை-பிங்கலை என்னும் இரண்டு நாடிகளில் மாறி மாறி இழுத்து வாங்கி இருத்தி விட்டால், நாடிகள் தூய்மையாகும். இடகலை-பிங்கலை என்பவை, இடது நாசித்துவாரம் வலது நாசித்துவாரம் ஆகியவற்றைக் குறிக்கும். இவற்றின் வழியாக நாம் சுவாசிக்கும் காற்றையும் வெளியே விடும் காற்றையும் அதன் போக்கிலே தான் செயல்பட வைத்திருக்கிறோம்.
அவ்வாறு விடாமல், இடகலையில் மூச்சை இழுத்து, பிங்கலையில் விட வேண்டும். பிங்கலையில் மூச்சை இழுத்து, இடகலையில் விட வேண்டும். இப்படிச் செய்வது சுழற்றிக் கொடுத்தல் எனப்படும். இவ்வாறு மாற்றி மாற்றி சுழற்றிக் கொடுக்கும்போது மூச்சுக் காற்றை உள்ளமெனும் தாமரையில் நிறுத்தி, அந்தத் தூய காற்றை நம் உடம்பில் உள்ள எல்லா நாடிகளிலும் பரவச் செய்ய வேண்டும். இப்படிச் செய்வது ‘பூரித்தல்’ எனப்படும். இவ்வாறு செய்தால் நாடிகள் தூய்மையாகும். உள்ளே உள்ள அசுத்தம் எல்லாம் நீங்கி விடும். தூயகாற்று உள்ளத்தில் நிறைந்தால், நாடி-நரம்புகளில் பரவினால், உடம்பு தானே உறுதியாகும். உறுதியான அந்த உடம்பிற்குத் திருமூலர் ஓர் அற்புதமான உவமை சொல்கிறார். உடம்பு மை போல ஆகி விடுமாம்!
மாந்திரீக மையை, வசியம் முதலான விருப்பங்கள் நிறைவேறுவதற்காக உபயோகிப்பார்கள். அந்த மையை ஹோம அக்கினி மூலம் தயாரிப்பார்கள். அவ்வாறு தயாரிக்கப்பட்ட மையைக் கொண்டு பலப் பல காரியங்களைச் சாதிப்பார்கள். அதுபோல, நம் உடம்பு, ஹோம அக்கினியால் தயாரிக்கப்படாமலேயே, மை போல ஆகிவிடும். அதாவது, ஹோமத் தீயில் தயாரிக்கப்பட்ட மையைக் கொண்டு பலப்பல காரியங்களைச் சாதித்துக் கொள்வதைப்போல, ஹோமத் தீயில் தயாரிக்கப்படாத மை போன்ற இந்த உடம்பைக் கொண்டு நாமும் பலப்பலக் காரியங்களைச் சாதித்துக் கொள்ளலாம் என்பது கருத்து.
சூழற்றிக் கொடுக்கவே சுத்தி கழியுங்
கழற்றி மலத்தைக் கமலத்தைப் பூரித்து
வழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்கு
அழற்றித் தவிர்ந்துடல் அஞ்சனமாமே
(திருமந்திரம்)
இவ்வாறு இடகலை, பிங்கலை, மூச்சுக் காற்றை இதயத்தில் நிறுத்துவது என்றெல்லாம் சொல்லிக் கொண்டு வந்த திருமூலர், அடுத்ததாக ஓர் அற்புதமான தகவலைச் சொல்கிறார். நமக்குத் தெரியாத, தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் அது. எந்த சீரியல் எத்தனை மணிக்கு, எந்தக் கடையில் எது கிடைக்கும், என்றைக்குப் போனால், தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்பதெல்லாம் நமக்கு நன்றாகவே அத்துபடியாக இருக்கிறது. இப்படி வெளி விவகாரங்களில் திறமைசாலிகளாக இருக்கும் நம்மை உள் விவகாரங்களில், அதாவது மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடும் செயல்களில், திறமைசாலிகளாக இருக்கச் சொல்கிறார் திருமூலவர். மூச்சுக்காற்றின் இயக்கத்தை நாம் சாதாரணமாக நினைத்திருந்தாலும் எந்தெந்த நாட்களில் எப்படியெப்படி மூச்சுக்காற்று இயங்குகிறது என்பதை திருமூலர் தெளிவாகவே சொல்கிறார்.
வெள்ளி வெண் திங்கள் விளங்கும்புதன்இடம்
ஒள்ளிய மந்தன் இரவி செவ்வாய் வலம்
வள்ளிய பொன்னே வளரும் பிறையிடம்
எள்ளிய தேய்பிறைதான் வலம் ஆமே
(திருமந்திரம்)
வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை, புதன்கிழமை ஆகிய நாட்களில் இடகலை(இடது மூக்கின்) வழியாகவும், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை ஆகிய நாட்களில், பிங்கலை(வலது மூக்கின்) வழியாகவும் மூச்சுக் காற்றின் இயக்கம் இருக்கும். வியாழக்கிழமையில், வளர்பிறை நாளாக இருந்தால், இடகலை வழியாகவும் தேய்பிறை நாளாக இருந்தால் பிங்கலை வழியாகவும் மூச்சுக் காற்றின் இயக்கம் இருக்கும். இவ்வாறுதான் இயங்க வேண்டும்.
எந்தெந்தக் கிழமைகளில் எப்படியெப்படி மூச்சுக்காற்று இயங்கும், இயங்க வேண்டும் என்று கூறிய திருமூலர், அவ்வாறு இயங்குவதால் உண்டாகும் பலன்களையும் கூறுகிறார்.
வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை, புதன்கிழமை ஆகிய நாட்களில் இடகலை (இடது மூக்கு) வழியாக சுவாசம் இயங்கினால் உயர்ந்ததான இந்த உடம்புக்கு ஒரு குறையும் இல்லை எனப் பரம்பொருளின் அருட்கருணை, மகிழ்வோடு எனக்குக் கூறியது என்கிறார். மற்ற நாட்களில் மூச்சுக் காற்றை ஏற்கனவே சொன்ன முறைப்படி இயக்கத் தெரிந்தவன் யோகியாவான். இறைவனாவான், ஆனந்தப் பரவச நிலையை அடைவான்.
செவ்வாய் வியாழன் சனி ஞாயிறு என்னும்
இவ்வாறு அறிகின்ற யோகி இறைவனே
ஒவ்வாத வாயு வலத்தே புரியவிட்டு
அவ்வாறு அறிவார்க்கு ஆனந்தம் ஆமே
(திருமந்திரம்)
நாம் ஆனந்தமாக வாழ்வதற்காக, இவ்வாறு வழிவகைகளைச் சொல்லி வந்த திருமூலர். அந்த வழிவகைகளைச் செயல்படுத்தும் காலத்தையும் கூறுகிறார். ‘சுழற்றிக் கொடுக்கவே’ என்ற பாடலின்படி, உடம்பு உறுதி பெற்றாலும் அனைத்து நோய்களுக்கும் மூல காரணங்களான கபம், வாதம், பித்தம் என்னும் மூன்றும் வந்து தாக்குமே; அவை நீங்க வேண்டாமா? இதுவரை சொன்ன முறைப்படி மூச்சு இயக்கப் பயிற்சிகளை, மாலை நேரத்தில் செய்தால், கப நோய் நீங்கும்; நடுப் பகலில் செய்தால், வஞ்சகமான வாதநோய் நீங்கும்; விடியற்காலையில் செய்தால், பித்த நோய் நீங்கும் என நேரத்தையும் அறிவுறுத்தினார், திருமூலர்.
அதுமட்டுமல்ல ‘‘இவ்வாறெல்லாம் செய்தால் கப, வாத, பித்தங்கள் மட்டும்தான் நீங்கும் என எண்ண வேண்டாம். நரை, திரை (பார்வைக்குறைவு) கூட நீங்கும். இவ்வளவும் உங்கள் உடம்பில் உள்ள விஷத்தன்மை நீங்குவதற்காகத்தான் சொன்னோம்’’ என்கிறார், திருமூலர்.
அஞ்சனம் போன்றுடல் ஐ அறும் அந்தியில்
வஞ்சக வாதம் அறும் மத்தியானத்தில்
செஞ்சிறு காலையில் செய்திடில் பித்தனும்
நஞ்சறச் சொன்னோம் நரை திரை நாசமே
(திருமந்திரம்)
அனைத்திற்கும் காரணமானது அடிப்படையானது உடம்பு. அது நன்றாக இருக்க வேண்டுமானால் இடகலை-பிங்கலை என்னும் மூச்சுக் காற்றின் வழிவகைகளை அறிய வேண்டும். மூச்சுக்காற்று எந்தெந்தக் கிழமைகளில் எவ்வாறெல்லாம் இயங்குகிறது, இயங்க வேண்டிய அந்த முறைப்படி இயங்கினால், என்னென்ன நோய்கள் விலகும் என்றெல்லாம் நமது நன்மைக்காகவே திருமூலர் சொல்லியிருக்கிறார். திருமூலர் சொன்ன இந்த யோகப் பயிற்சி முறைகளை, நல்ல குருநாதரிடம் கற்றுக் கொள்ள வேண்டும். நூல்களில் கூறியிருப்பதை நாம் தனியாகப் பயிற்சி மேற்கொள்ளக் கூடாது. ஏதேனும் தவறு நேர்ந்தால், அதை அறிவுறுத்தி, திருத்த நூல்களால் இயலாது. ஆகையால் தகுந்த குருநாதர் ஒருவர் மூலம் மூச்சுக்கலை பயிற்சியை மேற்கொள்வோம்! முழுமையான ஆரோக்கியத்தை அடைய முயல்வோம்!

முருகனை விநாயகரின் தம்பி என்றும் சிவனின் மகன் என்றும் சிலர் கூறுவர்

முருகனை விநாயகரின் தம்பி என்றும் சிவனின் மகன் என்றும் சிலர் கூறுவர். உன்மை அதுவல்ல என்பதே சைவத்தின் கொள்கை. உண்மை, அறிவு, இன்பமா...ய் விளங்கும் சிவத்தின் இன்னொரு அருள் வடிவமே தமிழ்க் கடவுள் என்று போற்றப்படும் முருகன். எல்லாவற்றையும் கடந்தும் உள்ளும் இருக்கின்ற சிவம் என்கின்ற பரம்பொருள் தனது சிறப்பு நிலையிலிருந்து பொதுநிலைக்கு உயிர்களுக்கு அருள் புரிவதற்கு எடுத்து வந்த இன்னொரு வடிவமே முருகனின் வடிவம். அச்சிவம் ஓசை வடிவமாக, பிரணவ வடிவமாக, ‘ஓம்’ வடிவமாக வந்தபோது விநாயகர் என்று கூறப்படுகிறது. அதேபோன்று, அச்சிவம் அறிவு வடிவாக, ஒளி வடிவாக வருகின்றபோது அதை முருகன் அல்லது ஞானபண்டிதன் என்கிறோம். எனவேதான் முருகனுக்கு அருவுருவமாக ஆழ்ந்து அகன்று நுண்ணியதாக இருக்கின்ற வேலைச் சமமாகச் சொல்கின்றோம்.
உலகைத் தோற்றுவித்து உயிர்களுக்கு அருள்புரிய இறைவன் முதலில் ஓசையாகவும் பின்பு ஒளியாகவும் தன் திருவருளை வெளிப்படுத்தியதாகச் சைவம் குறிப்பிடும். எனவேதான் ஓசையாக இருக்கின்ற விநாயகர் வடிவத்தை அண்ணன் என்றும் அடுத்து வந்த ஒளிவடிவத்தை முருகனாகக் கூறி தம்பி என்றும் அழைக்கும் வழக்கு வந்தது. முருகனும் சிவமும் வேறு அல்ல என்று பாமர மக்களுக்குப் புராணம் மூலம் கூற வந்ததே கச்சியப்ப முனிவரின் கந்த புராணம். முருகனும் சிவமும் வேறு அல்ல என்பதை, இப்படிக் கூறுவர்.
‘அருவமும் உருவுமாகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பது ஓர் மேனியாகிக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே
ஒருதிருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய ‘
- கந்தபுராணம்

செல்வ வளத்தை அள்ளித் தரும் மூன்றாம் பிறை தரிசனம்!!!

சந்திரனுக்கு தட்சன் தனது 27 மகள்களையும் திருமணம் செய்து கொடுத்தார்;அவர்களில் ரோகிணி,கார்த்திகை ஆகிய மனைவிகள் மீது மட்டும் அதிக பாசம் கொண்டார் சந்திரன்;இதனால் மனம் வருந்திய மற்ற மனைவிகள் தனது தந்தையிடம் புகார் செய்தனர்;
தட்சன் தனது மருமகன் சந்திரனைச் சந்தித்து, “நீ அழகாக இருப்பதால் தான் ஆட்டம் போடுகிறாய்;உன் முகத்தின் பிரகாசம் மறையட்டும்” என்று சாபம் இட்டார்;
இதனால் சந்திரனின் கலைகள் தேயத் துவங்கின;இதுவே வளர்பிறை,தேய்பிறை என்று உருவாகக் காரணமாகவும் அமைந்தது;
ரோகிணியும்,கார்த்திகையும் தட்சனிடம் சென்று அவரது சாபத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தினர்;தட்சனுக்கு அப்போது தவவலிமை குறைந்ததால்,சாபத்தைத் திரும்பப் பெற முடியவில்லை;
உடனே ரோகிணியும்,கார்த்திகையும் சிவனை நினைத்து தவம் செய்யத் துவங்கினர்;அவர்களது நீண்ட கடும் தவத்தினால் சிவன் அவர்களுக்கு காட்சியளித்து அவர்களின் கோரிக்கையை செவிமடுத்தார்;
கார்த்திகை,ரோகிணி இருவரின் கோரிக்கையை ஏற்று,அவர்களின் கணவன் சந்திரனின் சாபம் தீர,சந்திரன் தனது தலை மீது அமரும் பாக்கியத்தை அருளினார்;
ஒவ்வொரு தமிழ் மாதமும் அமாவாசைக்கு மூன்றாவது நாளன்று வரும் திதி த்ரிதியை ஆகும்;மூன்றாம் பிறையைத் தரிசனம் செய்தால்,சிவனின் சிரசையே நேரில் தரிசனம் செய்ததாக அர்த்தம்;தொடர்ந்து மூன்றாம் பிறையை தரித்து வருபவர்கள் வற்றாத செல்வ வளத்தைப் பெறுவார்கள்;

உலகின் ஆதி சமயம் சைவமே!!

உலகின் ஆதி சமயம் சைவமே!
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
என்ற போற்றியானது நமது தமிழ்நாட்டில் கடந்த 20,000 ஆண்டுகளாகச் சொல்லப்பட்டு வரும் நிரந்தர உண்மை ஆகும்;இதற்கான ஆதாரங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் ஆன்மீக அரசு குழுமம் பெருமை கொள்கிறது;
இன்றைக்கு உலகம் முழுவதும் இருக்கும் 220 நாடுகளிலும் பின்பற்றப்படும் அனைத்து மதங்களின் எண்ணிக்கை சுமார் 76 ஆகும்.இந்த 76 மதங்களும் இறைவன் ஒருவனே என்று போதிக்கின்றன;அந்த இறைவன் ஆதி சிவனே ஆவார்; “யார் எந்த தெய்வ உருவிலும் என்னை வழிபட்டாலும்,அந்த பக்தி உணர்வு என்னையே வந்து சேரும்” என்று நாம் பகவத் கீதையில் வாசித்திருக்கிறோம்;இந்த உண்மையானது நிஜத்தில் 5111 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய பகவத் கீதையில் இடைச்செருகல் செய்யப்பட்டதே.
இத்தவம் அத்தவம் என்றிரு பேரிடும்
பித்தரைக் காணின் நகுமெங்கள் பேர்நந்தி
எத்தவ மாகிலென் எங்குப் பிறக்கிலென்
ஒத்துணர் வார்க்கொல்லை யூர்புக லாமே 
என்ற திருமூலரின் திருமந்திரம் 1568 ஆம் பாடலில் இருந்து இடைச்செருகல் செய்யப்பட்டிருக்கிறது.இப்பாடலின் கருத்து என்னவெனில், யார் எந்த தெய்வத்தை வழிபட்டாலும்,எங்கோ பிறந்திருந்து,எந்த விதமான சமயமுறைப்படி இறை நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும்,அவர்களின் பக்தி உணர்வுக்கு வரமாக,பிரார்த்தனை பலன்களாக தருபவர் ஆதிசிவன் என்ற சதாசிவனே!
சிவபெருமானின் உடுக்கை ஒலியில் இருந்து உலகத்தின் மூலமொழிகள் தோன்றின;உடுக்கையின் வலது பக்க ஒலியில் இருந்து தமிழ் மொழி தோன்றியது;இடது பக்க ஒலியில் இருந்து சமஸ்க்ருதம் தோன்றியது;தமிழ் மொழியை ஆதிசிவன், சித்தர்களின் தலைவரான அகத்தியமகரிஷிக்குப் போதித்தார்;சமஸ்க்ருத மொழியை பாணினி என்ற ரிஷிக்கு ஆதிசிவன் போதித்தார்;
தமிழ் மொழியை அகத்திய மகரிஷி இன்றைய தமிழ்நாடு,இலங்கை,இந்து மஹாசமுத்திரத்தினுள் மூழ்கியிருக்கும் குமரிக்கண்டம் என்ற லெமூரியக் கண்டம் ஆகிய பகுதிகளில் பரப்பினார்;தமிழ் மொழிக்கான இலக்கணத்தொகுப்பை தொல்காப்பியர் வகுத்தார்;தொல்காப்பியரின் குரு அகத்தியமகரிஷியே!
தமிழ் மொழியின் உயிர் எழுத்துக்களுக்குள் சிவனும் சக்தியும் சேர்ந்து சிவசக்தியாக வாழ்ந்து வருகின்றனர்;இதை திருமந்திரத் தொகுப்பு எனப்படும் திருமந்திரம் பாடல்  எண்:910 மூலமாக நாம் உணர்ந்துகொள்ளலாம்;
ஆனந்தம் ஆனந்தம் ஒன்றென் றறைந்திட
ஆனந்தம் ஆனந்தம் ஆ=ஈ=ஊ=ஏ=ஓமென் றறைந்திடம்
ஆனந்தம் ஆனந்தம் அஞ்சும தாயிடும்
ஆனந்தம் ஆனந்தம் அம்=ஹ்ரீம்= அம்=க்ஷம் ஆம் ஆகுமே.
தமிழ் மொழியின் உயிர் எழுத்துக்களில் குற்றெழுத்துக்களான அ,இ,உ,எ,ஓ ஆகியன ஆதியில் தோன்றின;பின்னர் இவையே தீர்க்கமானபோது ஆ,ஈ,ஊ,ஏ,ஓ என்று நெட்டு எழுத்துக்களாகவும் வளர்ந்தன;இதில் குற்றெழுத்துக்கள் சிவமாகச் செயல்பட்டு வருகின்றன;நெட்டு எழுத்துக்கள் சக்தியாகச் செயல்பட்டு தமிழ் மொழியையும் தமிழ் சமுதாயத்தையும் பாதுகாத்து வருகின்றன;
பரமசிவனை, நாராயணன் வழிபட்டு,பூஜை புரிந்து சாபநிவர்த்தி ஆன சிங்கபுரம் என்ற இடமே இன்றைய சிங்கப்பூர் ஆகும்;
பராசக்தி மயிலாக வந்து புன்னை மரத்தினடியில் லிங்கப்பரம் பொருளை பல நூற்றாண்டுகளாக பூஜை செய்து சாபவிமோசனம் பெற்ற திருத்தலம் அக்காலத்தில் மயிலைபுரி.அதுவே இக்காலத்தில் சென்னையின் ஒரு பகுதியான மயிலாப்பூர் ஆகும்;
மூன்று கோட்டைகளை அழிப்பதற்காக சர்வேஸ்வரன் இமய மலையை வில்லாக வளைத்த இடமே திருவாரூர் அருகே அமைந்திருக்கும் திருவிற்குடி;
ராமபிரான் வனவாசம் இருந்த காலத்திலும் தந்தை தசரதனுக்கு திவசம் செய்து வந்திருக்கிறார்;அவ்வாறு திவசம் செய்த பித்ரு கடன் நிறைவேற்றி வழிபட்ட கோவில்களில் திருக்குறுக்கை(அக்காலத்தில் கொற்கை)யும் ஒன்று;இந்த திருக்குறுக்கை மயிலாடுதுறைக்கு அருகில் அமைந்திருக்கும் கிராமங்களில் ஒன்று;அட்டவீரட்டானங்களில் முக்கியமானது திருக்குறுக்கை;
இன்றைய மீரட்டில் பிறந்த பிராமணனே அன்றைய ராவணன்;செல்வச் செழிப்பு மிக்க நாடாக லங்கா என்ற ஸ்ரீலங்கா அக்காலத்தில்(17,50,000 ஆண்டுகளுக்கு முன்பு) இருந்ததால்,அங்கே சென்று அரச பதவியை பிடித்தான் ராவணன்;தனது மனைவி சீதாபிராட்டியை ராவணன் கவர்ந்து சென்றதால்,அவனைக் கொன்று தனது மனனவி சீதாபிராட்டியை மீட்டான் ராமபிரான்;
பசு,குழந்தைகள்,பச்சை தாவரங்கள்,பிராமணன் ஆகியவற்றைக் கொல்வது கொடூரமான பஞ்சமா பாதகங்களில் ஒன்று;ராவணன் சிறந்த சிவபக்தன்;இருந்த போதிலும்,பெண்ணாசையால் மஹாவிஷ்ணுவின் அவதாரமான ராமபிரானால் இறக்க நேரிட்டது;இந்த பஞ்சாமாபாதகம் நீங்கிட சிவவழிபாடே சிறந்தது என்பதை அறிந்தான்;எனவே,ராமபிரான் லிங்கப் பரம்பொருளான ஆதிசிவனை வழிபட்டதால்,அந்த இடமே இராமேஸ்வரம் என்ற பெயராகியது;ராமேஸ்வரர் என்றால் ராமனுக்கு இறைவன் என்று அர்த்தம்;அதுவே தற்காலத்தில் ராமநாதசுவாமி என்று மருவியிருக்கிறது;
அயன் என்ற பிரம்மா தனது பதவியை தக்க வைப்பதற்காக பல நூற்றாண்டுகளாக சிவ வழிபாடு செய்த இடமே அயனீஸ்வரம் என்று பெயர் பெற்றது;அயனீஸ்வரமே இன்று அயர்லாந்து என்ற பெயரில் வட கோளத்தில் இன்றைய நார்வே நாட்டிற்கு வடமேற்கே அமைந்திருக்கிறது;
குவைப்பதி லிங்கம் என்ற பெயரில் மிகப் பிரம்மாண்டமான சிவாலயமும்,அதே பெயரில் இருந்த நகரமுமே இன்றைய குவைத் என்று நாட்டின் பெயராக உருவாகியிருக்கிறது;
எகிப்தில் ஆண்ட ஒரு மன்னர் வம்சத்தின் கொடி நந்திக் கொடியாகும்;
தமிழ்நாட்டில் உள்ள திருமால்பேறு என்ற ஊரின் சாயலில் இன்றைய தென் அமெரிக்கக் கண்டத்தில் உருவாக்கப்பட்ட சிவாலயமே பேறு ஆகும்; அதுவே இன்றைய தென் அமெரிக்க நாட்டின் பெயராக பெரு என்று உருமாறியிருக்கிறது;
அகஸ்தியர் ஆலயா என்பது இன்று ஆஸ்திரேலியா என்று வழங்கப்படுகிறது;மக்கீஸ்வரம்,மத்தீஸ்வரம் என்பவை முறையே மக்கா,மதீனா என்று வழங்கப்படுகிறது.(ஆதாரம்:முழு முதல் பரம்பொருள் மகிமை,பக்கம் 350)மக்கீ என்ற சமஸ்க்ருதச் சொல்லுக்கு ஈ என்று பொருள்;தமிழ்நாட்டில் ஈங்கோய்மலை திருக்கோவில் போன்று சவுதி அரேபியாவில் மக்கீஸ்வரம் என்ற புகழ்பெற்ற சிவாலயமாக சிறப்படைந்திருந்தது;இன்றும் கூட மக்காவிற்குச் செல்லும் முகம்மதியர்கள் அங்கு உள்ள ஏழடி உயரமான லிங்கப் பரம்பொருளையே சைத்தான் என்று சொல்லி கல்லெறிந்துவிட்டு வருகின்றனர்;
ஆமூர்,தைமூர் என்ற தமிழ்நாட்டுத் திருத்தலங்களைப் போன்றே தைமூர் என்ற தலம் ரஷ்யாவில் இருந்ததை இன்றும் வழங்குகின்ற இப்பெயர் எடுத்துக் காட்டுகிறது;
படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் என்னும் ஐந்து தொழில்கள் புரிபவர் பரமசிவன் என்ற ஆதிசிவன்;இவரை பிரம்மன்,விஷ்ணு,ருத்ரன் ஆகிய மூன்று தெய்வங்களும் ஒன்றாக வந்து பூஜை செய்து தத்தமக்குரிய உலகங்களையும்(பிரம்ம லோகம்,விஷ்ணு லோகம்,சிவலோகம்) வாழ்க்கையையும்,பதவியையும் பெற்றுக்கொண்ட திருத்தலமே திரியம்பகேஸ்வரம்;இவ்வாறு மூன்று மூர்த்திகளும் ஒன்றாக வந்து மும்மூர்த்தி நாயகனைப் பூஜை செய்த திருத்தலம் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள திரிநாடு(த்ரிநாட் என்ற டிரினிடாட்).
வட அமெரிக்கக் கண்டத்தில் கொலாடோ என்ற ஆற்றங்கரையின் அருகே உள்ள குன்றின் மீது ஒரு சிவாலயம் கண்டெடுக்கப்பட்டது;அதன் வயது 10,000 ஆண்டுகள்!
இத்தாலியில் ஒரு பழமையான சிவாலயம் வீடு கட்டும் போது கிடைத்தது;அதன் வயது 5,000 ஆண்டுகள்!!தற்போது அங்கே இருக்கும் பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டிருக்கிறது;
எகிப்தின் முக்கிய நகரமான அலெக்ஸாண்டிரியாவில் 129 அடி உயரமுள்ள சிவலிங்கம் பாலைநிலத்தில் புதைந்திருப்பதைக் கண்டெடுத்துள்ளனர்;
பாபிலோனியாவில் கிடைத்திருக்கும் களிமண் பட்டயங்களில் சிவன் என்ற திருநாமம் பல இடங்களில் காணப்படுகிறது;அங்கே நடைமுறையில் இருக்கும் மாதங்களில் சிவன் என்ற மாதமும் இருக்கிறது;
எகிப்து நாட்டில் சிவன் என்ற பெயரில் ஒரு நகரம் இருந்திருக்கிறது;அந்த நகரில் இருந்த பழமையான சிவாலயத்தில் சிவலிங்கம்,நந்தி,பாம்பு,புலி,சிங்கம் ஆகியவைகளுடன் தனித்தனியே சிவலிங்கங்கள் இருந்திருக்கின்றன;
சிறிய ஆசியாவில் சிவன் என்ற பெயரில் ஒரு நகரமே இருந்திருக்கிறது;அழிந்துபோன இந்த நகரத்தின் எஞ்சியுள்ள பகுதிகள் லிங்கப் பரம்பொருளையும் நந்தியும் இங்கே வழிபடப்பட்டதைக் காட்டுகின்றன;
சிரியா நாட்டின் ஒரு நாணயத்தில் சிவவடிவம் இருக்கிறது;ஜப்பானில் சந்திகளிலும்,சதுக்கங்களிலும் சிவாலயத்தை நிர்மாணித்து வழிபட்டு வந்துள்ளனர்;திபத்,சீனா,பூட்டான்,மெக்ஸிகோ ஆகிய நாடுகளிலும் பல நூற்றாண்டுகளாக சிவவழிபாடு செய்து வந்துள்ளதற்கான சான்றுகள் கிட்டியுள்ளன;
போர்னியா நாட்டுக் குகைகளில் இருந்து ஈசன் திருவுருவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன;சுமத்ராவில் பெரிய அளவிலான சிவலிங்கங்களும்,அர்த்தநாரீஸ்வர வடிவங்களும் கிடைத்துள்ளன;நடராஜர் திருவுருவம் மலேஷியாவில் கிடைத்துள்ளது;சேரம் என்ற ஊரில் ஆடல் நாயகனும் தங்கத்தால் ஆன சிவலிங்கமும் கிடைத்திருக்கின்றன;பொன் லிங்க வழிபாட்டை அரசர்கள் பல நூற்றாண்டுகளாக பின்பற்றிவந்துள்ளனர் என்பதை திருமூலரின் திருமந்திரம் தெரிவிக்கிறது;
சிறிய லிங்கங்கள் வீட்டில் வைத்து பூசை செய்யப்படும் கிரியை வழிபாட்டுக்குரியவை;பெரிய லிங்கங்கள் சரியை எனப்படும் கோவில் வழிபாட்டிற்கு உரியவை;சிறிய லிங்கங்களும்,பெரிய லிங்கங்களும் மொகஞ்சோதராவில் கிடைத்துள்ளன;முகம் அஞ்சு ஓதரன் என்ற வார்த்தைக்கு விளக்கம் ஐந்து முகங்களால் ஓதுபவன் என்பதாகும்;இந்த முகம் அஞ்சு ஓதரன் என்ற பெயரே மொகஞ்சோதரா ஆயிற்று;ஐந்து தொழில்(படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல்) புரியும் ஐந்தொழில் நாயகன் ஐந்து முகங்களால் ஆகமங்கள் ஓதி அருளினார்;
மாவேட்டாகிய ஆகமம் வாங்கியும்
மற்று அவை தன்னை மகேந்திரத்து இருந்து
உற்ற ஐம்முகங்களால் பணித்து அருளியும்
என்று பழம்பெரும் திருவாசகம்,ஆகமங்களை ஓதிய மொகஞ்சோதரனைப் போற்றுகிறது; ஹர என்ற வடமொழிச் சொல்லும்,அப்பா என்ற தமிழ்ச்சொல்லும் சேர்ந்து ஹரப்பா என்று ஆயிற்று;வேத ஆகமங்களை ஓதியருளியதால் விஸ்வேஸ்வரனுக்கு ஓதீஸ்வரர் என்று பெயர்;பஞ்சாக்கை என்ற சிவத்தலைத்தை அப்பர் தேவாரம் போற்றியுள்ளது;பஞ்சாக்கையே இன்று பஞ்சாப்பாக மருவியிருக்கிறது;ஓங்காரேஸ்வரரின் சுருக்கமே ஓமன் என்று ஆகியிருக்கிறது;திருவல்லிக்கேணி என்பது ட்ரிப்பிளிகேண் என்று ஆனது போல பிள்ளைப்பண் என்பதே பிலிப்பைன்ஸாக மாறியிருக்கிறது;சூரிநாம்,சகாரா,ருமேனியா,யமன்(ஏமன்),மங்கோலியா ஆகியவையெல்லாம் ஆரிய மொழிச் சொற்களே;ப்ரம்மதேசமே பர்மா ஆகியிருக்கிறது;
திருச்செந்தூருக்கும் இலங்கைக்கும் இடையே கந்தமாதனம் என்ற சிவாலயம் இருந்திருக்கிறது;
திருவடி யேசிவ மாவது தேரில்
திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில்
திருவடி யேசெல் கதியது செப்பில்
திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே (திருமந்திரம் 25)

எட்டு வகையான சிவ விரதங்கள்


சிவபெருமானை எட்டு வகையான விரதங்கள் இருந்து வழிபட்டு அவரது பரிபூரணஅருளைப்பெறலாம்.
1. சோமவார விரதம் - திங்கள் கிழமைகளில் இருப்பது
2. உமா மகேஸ்வர விரதம் - கார்த்திகை பவுர்ணமியில் இருப்பது
3. திருவாதிரை விரதம் - மார்கழி மாதத்தில் வருவது
4. சிவராத்திரி விரதம் - மாசி மாதம் அமாவாசை தினத்தில் வருவது
5. கல்யாண விரதம் - பங்குனி உத்திரத்தன்று கடைபிடிப்பது
6. பாசுபத விரதம் - தைப்பூச தினத்தில் வருவது
7. அஷ்டமி விரதம் - வைகாசி மாதத்தில பூர்வபட்ச அஷ்டமி தினத்தில் அனுஷ்டிப்பது
8. கேதார கவுரி விரதம் - ஐப்பசி அமாவாசையை ஒட்டி (தீபாவளி தினத்தில்) இருக்கும் விரதம்.

சைவ சமய விரதங்கள் (நோன்புகள்) மனம் ஐம்பொறிகளின் தன்மைக்கு ஆட்பட்டு அலைபாயாது, பொய்யான ஆகைகளுக்கு ஆட்படாமல் மெய்ஞான வழியில் தங்களது நினைவை செலுத்த, நெறி பிறழாத நினைவால் இறைவனை ஒரு நிலைப்படுத்திய வழக்காக சில நியமங்களைக் கைக் கொள்ள வேண்டியுள்ளது.

முதலாவது மனக்கட்டுப்பாட்டுடன் உணவுக் காட்டுப்பாட்டினையும் கடைப்பிடித்திட வேண்டும். உணவின் தன்மைக் கேற்ற நமது சிந்தனைகள் மென்மை, கடினம் என்ற நிலையைப் பாதிப்பதால் நமது முன்னோர்கள் விரதங்களை கடைப்பிடித்தனர் - உணவுகட்டுப்பாடு ஒழுக்கத்துடன். சிவ விரதங்களாக கையாளப்படும் நமது விரதங்கள் ஒன்பது ஆகும்.அவையாவின,

1)சோமவாரவிரதம்,
2)திருவாதிரை விரதம்,
3)உமா மகேஸ்வரி விரதம்,
4)சிவசாத்திரி விரதம்,
5)கேதார விரதம்,
6{கல்யாண சுந்தர விரதம்,
7)சூல விரதம்,
8)இடப விரதம்,
9)பிரதோஷ விரதம்,
10) கந்த சஷ்டி விரதம் ஆகும்.


சோம வார விரதம்:
சோம வார விரதம் - கார்த்திகை மாதம் முதல் சோம வாரத்திலிருந்து 
இருத்தல் வேண்டும் சோமா வாரத்தில் உண்ணா நோன்பு மேற்கொள்வது முறை இவ்விரதம் வாழ்நாள் முழுமையோ, ஓராண்டு, மூன்று ஆண்டுகள், 12 ஆண்டுகள் என்ற கணக்கில் அனுஷ்டிப்பதே முறை.
திருவாதிரை விரதம்:

மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்று இருவேளை உண்ணா நோன்பும். இரவு பால், பழத்துடன் முடித்துக் கொள்வது.

 உமா மகேஸ்வரி விரதம்:
இவ்விரதம் கார்த்திகை பௌர்ணமியில் இருக்க வேண்டும். இந்நாளில் ஒரு பொழுது பகல் உணவு அருந்தலாம். இரவு பலகாரம்,பழம் சாப்பிடலாம். 


 சிவசாத்திரி விரதம்:
இவ்விரதம் மாசி கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று இருத்தல் வேண்டும். அன்று உண்ணா நோன்பு மேற்கொள்வது சிறப்பு. நான்கு ஜாமங்களும் உறங்காது சிவபூஜை செய்வது மிக நல்லது.

 கேதார விரதம்:
 இந்த விரதம் புரட்டாசி மாதம் சுக்கிலபட்ச அட்டமி முதல் 21 நாட்களும் கிருஷ்ணபட்ச பாதமை முதல் 14 நாட்களும் கிருஷ்ணபட்சத்து அட்டமி முதல் 7 நாட்களும் கிருஷ்ணபட்சத்து சதுர்த்தியன்றும் இருத்தல் வழக்கம். இந்த விரதம் அனுஷ்டிக்கும் போது இருபத்தொரு நூலிழைகளினால் காப்புகட்டிக் கொள்வது முறை ஆண்கள் வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டுதல் வேண்டும். இவ்விரதம் நிகழ்முறை முதல் 20 நாட்கள் ஒருபொழுது மட்டும் உணவு கொள்ள வேண்டும். இறுதி நாளன்று உண்ணாவிரதம் இருத்தல் முறை. 
 கல்யாண சுந்தர விரதம்:
இவ்விரதம் பங்குனி உத்திரத்தன்று மேற்கொள்ளப்படும் ஒரு பொழுது மட்டும் உணவு கொள்ளலாம் இரவில் பால் அருந்தலாம். 

 சூல விரதம்::  இந்த விரதம் தை மாசம் அமாவாசையன்று இருக்க வேண்டும். ஒரு பொழுது மட்டும் பகல் உணவு உட்கொள்ளலாம். இரவு உண்ணா நோன்பு இருக்க வேண்டும்.
 இடப விரதம்:
இவ்விரதம் சுக்கிலபட்சம் அஷ்டமியன்று மேற்கொள்ள வேண்டும். ஒரு பொழுது பகல் உணவு மட்டும் உண்ணலாம்.
பிரதோஷ விரதம்
:

 இவ்விரதம் சுக்கிலபட்ச திரியோதசி, கிருஷ்ணபட்ச திரியோசி ஐப்பசி அல்லது கார்த்திகை அல்லது வைகாசி மாதங்களில் சனி பிரதோஷம் முதல் மேற்கொள்ள வேண்டும். பகலில் உணவு உட்கொள்ளக்கூடாது. பிரதோஷம் கழிந்த பின் உணவு அருந்தலாம்.

விரும்பியதைக் கொடுக்கும் பைரவ வழிபாடு



கீழே பைரவ அஷ்டகம் வடமொழியிலும், தமிழிலும் கொடுத்துள்ளேன் இதைத் தினமும் படித்து வந்தால் தீராத கடன்கள் தீரும். கையில் பணம் இல்லையே என நினைத்து வருந்தும்போது குறைந்த அளவுக்கான தேவைக்காவது பணம் கிடைக்கும்.


ஸ்ரீ காலபைரவ பஞ்சரத்னம்
======================

கட்கம் கபாலம் டமருகம் த்ரிசூலம்
ஹஸ்தாம்புஜே ஸ்ந்நதம் த்ரிணேத்ரம்
திகம்பரம் பஸ்ம விபூஷிதாங்கம்
நமாம்யஹம் பைரவமிந்துசூடம்

கவித்வதம் ஸத்வரமேவ மோதான்
நதாலேய ஸம்பு மனோபிராமம்
நமாமி யானீக்ருத ஸார மேயம்
பவாப்தி பாரம் கம்யந்த மாஸ¥

ஜராதி துக்கௌக விபேத தக்ஷம்
விராகி சமஸேவ்ய பாதாரவிந்தம்
நரபதிபத்வ ப்ரதமாஸ¥ நந்த்ரே
ஸ¥ராதிபம் பைரவ மானதோஸ்மி

ஸமாதி ஸம்பத் ப்ரதமான தேப்யோ
ரமா தவாத்யாசித பாதபத்மம்
ஸமாதி நிஷ்டை ஸ்தரஸாதிகம்யம்
நமாம்யஹம் பைரவமாதிநாதம்

கிராமகம்யம் மனஸாபி தூரம்
சராசாஸ்ய ப்ரபாவதி ஹேதும்
கராக்ஷிபச் சூன்ய மாதாபிரம்யம்
பராவரம் பைரவமான தோஸ்மி

http://www.youtube.com/watch?v=ASa08VbK5V4&feature=player_embedded


ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் =========================== 
தனந்தரும் வயிரவன் தளிரடிபணிந்திடின் 
தளர்வுகள் தீர்ந்து விடும் 
மனந் திறந் தவன்பதம் மலரிட்டு வாழ்த்திடின்
 மகிழ்வுகள்வந்து விடும் சினந்தவிர்த் தன்னையின்
 சின்மயப்புன்னகை சிந்தையில் ஏற்றவனே
 தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (1)


 வாழ்வினில் வளந்தர வையகம்
நடந்தான் வாரியே வழங்கிடுவான்
 தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட
 தானெனவந்திடுவான் காழ்ப்புகள் தீர்த்தான் 
கானகம் நின்றான் காவலாய் வந்திடுவான் 
தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (2)


முழுநில வதனில் முறையொடு
பூஜைகள் முடித்திட அருளிடுவான் 

உழுதவன்விதைப்பான் உடைமைகள் காப்பான்
 உயர்வுறச்செய்திடுவான் முழுமலர்த்
 தாமரை மாலையை ஜெபித்து முடியினில் சூடிடுவான்
 தனக்கிலை யீடு யாருமேஎன்பான் தனமழை பெய்திடுவான் (3)


 நான்மறை ஓதுவார் நடுவினில்இருப்பான்
 நான்முகன் நானென்பான் தேனினில் பழத்தைச் 
சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள்
நிறைத்திடுவான் வான்மழை எனவே 

வளங்களைப்பொழிவான் வாழ்த்திட வாழ்த்திடுவான்
 தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (4)


பூதங்கள் யாவும் தனக்குள்ளே
வைப்பான் பூரணன் நான் என்பான் நாதங்கள்

ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில்
பூட்டிடுவான் காதங்கள் கடந்து கட்டிடும்
மாயம் யாவையும் போக்கிடுவான் 
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (5)


பொழில்களில் மணப்பான் பூசைகள்ஏற்பான்
பொன்குடம் ஏந்திடுவான் கழல்களில்
தண்டை கைகளில் மணியணி கனகனாய் இருந்திடுவான்
நிழல்தரும் கற்பகம் நினைத்திட

பொழிந்திடும் நின்மலன் நானென்பான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (6)


சதுர்முகன் ஆணவத் தலையினைக்
கொய்தான் சத்தொடு சித்தானான் புதரினில்
பாம்பைத் தலையினில் வைத்தான் புண்ணியம்
செய்யென்றான் பதரினைக் குவித்து 

செம்பினை எரித்தான் பசும்பொன் இதுவென்றான்
தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (7)


ஜெய ஜெய வடுக நாதனே சரணம் வந்தருள் 
செய்திடுவாய் ஜெய ஜெய ஷேத்திர பாலனே சரணம் 
ஜெயங்களைத் தந்திடுவாய்
ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா 

செல்வங்கள் தந்திடுவாய் 
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (8)


பைரவ அஷ்டகம் : -

த்ரினேத்ரம் வரதம் சாந்தம் குமாரஞ்ச திகம் பரம்,
பாசம் வஜ்ரம் ததாகட்கம் பானபாத்ரஞ்ச தாரிணம்,
இந்திராணி சக்திஸஹிதம் கஜவாஹன ஸூஸ்திகம்,
கபால பைரவம் வந்தே பத்ம  ராகப்ரபம் சுபம்.

விரும்பியதைக் கொடுக்கும் பைரவ வழிபாடு :

எட்டாவது திதிநாள் எனப்படும் வளர்பிறையிலும் தேய்பிறையிலும் வரும் எட்டாவது திதிநாட்கள் பைரவ வழிபாட்டிற்குரியவை.

இவ்விரு அஷ்டமிகளில் தேய்பிறை அஷ்டமி விரதம் இருந்து சிவனை வழிபடுவதற்குரிய நாள். ஆடித்தேய்பிறை அஷ்டமிக்கு நீலகண்ட அஷ்டமி என்ற பெயரும் உண்டு.  இந்த நாளில் பழங்கள் மட்டுமே உண்டு அர்ச்சிக்க வேண்டும். தட்சிணாமூர்த்தியை மேட்கொண்டு நடத்தும் விரதம் இது.  ஞாயிறு பைரவ வழிபாட்டிற்கு உகந்த நாள். திரிபுவனம் ஸ்ரீ சரபர் - திருவிசலூர் சதுர்கால பைரவர் அல்லது அருகில் இருக்கும் ஆலயத்து பைரவரை வழிபடலாம்.

நவக்கிரக தோஷங்கள் நீங்க சதுர்கால பைரவருக்கு செவ்வரளி பூவால் 9 வாரங்கள் ஸ்கஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும்.

குழந்தைப்பேறு கிட்ட தம்பதியர் ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் சிவப்பு நிறப் பூக்களால் ஸ்கஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும்.

வறுமை நீங்க வளர்பிறை அஷ்டமிகளில்  மாலை நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரமே ஸ்கஸ்ரநாமமோ அர்ச்சனை செய்யது 11 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். அஷ்டமிகளில் தொடர்ந்து வழிபடவேண்டும்.

இழந்த சொத்தைத் திரும்பப் பெற 11 அஷ்டமிகள் பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும் மிளகை சிறு மூட்டையாகக் கட்டி நெய் அல்லதி நல்லெண்ணை இட்டு தீபம் ஏற்றுவது பைரவ தீபமாகும்.

சனி தோஷம் நீங்க பைரவருக்கு 9 சனிக்கிழமைகள் சிவப்பு நிறப் பூக்களால்அர்ச்சனை செய்யது 4 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும்.

திருமணத் தடை நீங்க ஞாயிறு இராகு காலத்தில் திருநீறு அபிஷேகம் செய்து மிளகு வடை மாலை சாத்தி அர்ச்சனை செய்ய வேண்டும்.

பகைபயம் நீங்க 9 முறை பைரவருக்கு அர்ச்சனை செய்யது வசதிக்கு ஏற்ப நிவேதனங்கள் செய்ய வேண்டும். இப்படி 9 கிழமைகள் செய்தால் வியாபார நஷ்டம் விலகும், எல்லாத் தொல்லைகளும் அகலும்.

தீராத் நோய்கள் தீர பைரவ ஹோமமும், அபிஷேகமும் செய்ய வேண்டும். அந்த அபிஷேக தீர்த்தத்தை உட்கொள்ள பிணிகள் தீரும்.

செல்வம் செழிக்க வளர்பிறை அஷ்டமிகளில் சதுர்கால பைரவருக்கு சொர்ணபுஷ்பம் அல்லது 108 காசுகளால் அர்ச்சிக்க வேண்டும். அந்தக்காசுகளை அலுவலகம் அல்லது வீட்டில் பணப் பெட்டியில் வைக்க செல்வம் செழிக்கும்.

தினந்தோறும் காலையில் " ஓம் ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷணபைரவாய நமஹ " என்று ஜெபிப்பது நல்லது