Sunday 1 January 2017
செல்வ வளம் லட்சுமி வசியம் தரும் நவகிரக தூப பொடி
1.அரசு, 2.மருதாணி, 3.கஸ்தூரி, 4.சாம்பிராணி,
5.செந்நாயுருவி,
6.இலுப்பை, 7.புனுகு, 8.புங்கன், 9.முந்திரி,
10.குங்கிலியம்,
11.வெள்ளெருகு, 12.ஏலக்காய், 13.வெண்கடுகு,
14.கோராசனை, 15.கோஷ்டம், 16.நொச்சி,
17.ரோஜா இதழ்,
18.ஆலமரம், 19.சந்தனம், 20.அகில், 21.தேவதாரு,
22.துளசி 23.தாமரை
மெற்கண்ட 23 மூலிகைகளையும் சம அளவு
எடுத்து சுத்தம் செய்து இடித்து
தூளாக்கவும்,இந்த
பொடியை தினந்தோறும் வீடு,தொழில் செய்யும்
இடத்தில் சாம்பிராணி புகை போல காட்டினால்
கெட்ட சக்தி விலகி, நல்ல சக்திகள்
உருவாகும்...செல்வவளம் உண்டாகும் தொழில்
செய்யும் இடத்தில் மக்கள் அதிகம் வருவார்கள்
வ்சியாபாரம் பெருகும். குடும்பத்தில் செல்வம் .
சந்தோசம் எப்போதும் இருக்கும்...
இது நவகிரக தோசத்தை போக்கும்...செல்வாக்கு
அதிகரிக்க செய்யும் வசியத்தை உண்டாக்கும்
நினைத்தை அடைய செய்யும்..வீட்டில்
தினம்தோறும் நவகிரக ஹோமம் வளர்த்ததுக்கு
ஒப்பான பலன்களை தரும்.கோர்ட் கேஸ்
பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வரும்
நோய் கிருமிகளை விரட்டி நோயாளிகளை
குணப்படுத்தும்..குழந்தைகள் இருக்கும் வீட்டில்
அவர்கள் ஆரோக்கியமாக வளர,கல்வி
சிறப்பாக
அமைய நினைவாற்றல் மேம்பட செய்யும் அரசு
,ஆலம் துகள்கள் இருப்பதால் குருவருள்
உண்டாகும் குரு தோசமும் விலகும்.
வெண்கடுகு இருப்பதால் சகல தோசமும்
நிவர்த்தியாகும்.தடைபட்ட சுபகாரியங்களும்
உடனே நடக்கும்..
பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கும் மாந்திரீக தந்திர ரகசியங்கள்
(1) கொடுத்த கடன் தொகைகள் திரும்ப கிடைக்காமல் இருப்பின்-ஆண்கள் தொடர்ந்து புதன்கிழமைகளில் காலை 6 மணிக்கு முன்னர்சவரம் செய்து வர கடன் வசூலாகும்.
(2) வியாபாரம் மற்றும் குழந்தைகள் கல்வியில் தடைகள் ஏற்பட்டால் ஆன்மீக புத்தகங்களை அச்சிட்டு இலவச விநியோகம் செய்ய தடைகள் விலகும்.
(3) சிவன் கோவிலுக்கு தொண்டுகள் செய்ய அரசாங்கத்தால் வியாபாரத்திற்கு ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.
(4) நவதானியங்களை மஞ்சள் துணியில் முடிந்து கடை / ஆபீஸ் வாசலில் கட்டி,கல்லாவிலும் போட்டு வைக்க வியாபாரம் நஷ்டம் என்பதே இருக்காது.
(5) பூர்வீக சொத்து கிடைக்க வீட்டிலேயே திருச்செந்தூர் முருகன் படம் வாங்கி வைத்து செவ்வாய் தோறும் செவ்வரளி பூவால் 27 வாரங்கள் (செவ்வாய்ககிழமைகள் மட்டும்) அர்ச்சித்து வர கிடைக்க வேண்டிய சொத்து கிடைக்கும்.
(6) சித்திரை நட்சத்திரத்தில் விரதமிருந்து முருக பெருமானையும் வள்ளியையும் வழிபட காதல் முயற்சிகள் கை கூடும்.
விளக்கு ஏற்றும் விதம்
(7)தாமரைத் தண்டு நார் திரி போட்டால் மூன்று ஜென்ம பாவங்கள் போகும்
(8)வாழைத் தண்டு நார் திரி போட்டால் குல தெய்வ குற்றம் சாபம் போகும், நாம் செய்த தெய்வ குற்றத்தை விலக்கி சாந்தி தரும்
(9)புது மஞ்சள் சேலை துண்டில் திரி போட்டால் தாம்பத்ய
புது வெள்ளை வஸ்திரத்தில் பன்னீர் விட்டு நனைத்து காய வைத்து திரி போட்டால் லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு ,மூதேவி விலகிவிடும்
(10)சிகப்பு துணி திரி போட்டால் திருமணத் தடை மலடு நீங்கும்
(11)பஞ்சு பருத்தி திரியினால் விளக்கேற்றினால் அனைத்து நலனையும் தரும்
(12)கணபதிக்கு தேங்காய் எண்ணெயினால் விளக்கு ஏற்ற வேண்டும்
(13)மகாலட்சுமிக்கு பசும் நெய்யிணால் விளக்கு ஏற்ற வேண்டும்
(14)பராசக்திக்கு வேப்பெண்ணை, பசும் நெய், இலுப்பெண்ணை கலந்து விளக்கு ஏற்ற வேண்டும்
(15)குல தெய்வத்திற்கு வேப்பெண்ணை, பசும் நெய், இலுப்பெண்ணை கலந்து விளக்கு ஏற்ற வேண்டும்
(16)நெய், விளக்கெண்ணை ,வேப்ப எண்ணெய் ,இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இந்த ஐந்து எண்ணெய்களையும் கலந்து விளக்கு ஏற்றி ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் தொடர்ந்து வழிபட்டால் தேவியின் அருள் கிடைக்கும்; நினைத்தது நடக்கும்; மந்திர சக்தி கிடைக்கும்
(17)நல்லெண்ணெயில் விளக்கேற்றினால் சகல பீடைகளும் விலகும்
(18)விளக்கெண்ணையில் விளக்கேற்றினால் உறவு காரர்களால் சுகம் உண்டாகும்
(19)வேப்பெண்ணை, பசும் நெய், இலுப்பெண்ணை கலந்து விளக்கு ஏற்றுவதால் செல்வம் உண்டாகும்
(20)ஐந்து முகம் வைத்து விளக்கேற்ற செல்வத்தைப் பெருக்கும்
கிழக்கு திசை – நோக்கி விளக்கேற்றினால் துன்பம் கடன் பகை விலகும்
வடக்கு திசை – நோக்கி விளக்கேற்றினால் சர்வ மங்களம் திரவியம் கிட்டும்
மேற்கு திசை – நோக்கி விளக்கேற்றினால் கடன் இராது சனி தோஷம் விலகும்
அதிகாலை 03.00 மணிமுதல் அதிகாலை 05.00 மணிக்குள் பிரம்ம முகூர்த்தம் விளக்கு ஏற்றினால் வீட்டில் சர்வ மங்களமும் உண்டாகும்;
வேலை வேண்டுவோர்;நல்ல கணவன் வேண்டுவோர்;
குடும்ப சுகம் புத்ர சுகம் வேண்டுவோர்;
சாயங்கால வேளை தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட இப்பலனை அடையலாம்
Subscribe to:
Posts (Atom)