Tuesday 22 April 2014

சைவ யாகச் சிறப்பு




யக்ஞம், யாகம், ஹோமம், வேள்வி என்ற சொற்கள் ஒரே பொருளைத் தருவனவாகும். இறைவனுக்கு யாகம் செய்து வழிபடுவதும் ஒரு கடமையாகும். யாக மூலமாக முழுப்பலனையும் பெறலாம் என்பது அன்று முதல் இன்று வரை இருந்து வருகின்ற நம்பிக்கையாகும். ஆகவே சிவ சம்பத்தப்பட்ட யாகச் சிறப்பினை இங்கு காண்போம்.

ஹோம குண்டங்கள்...

பொருளை வைக்கப் பாத்திரம் வேண்டும். அது போலவே சிவாக்னியை வைத்து வளர்க்கும் பாத்திரங்கள் ஹோம குண்டங்கள் ஆகும். அவைகள் சதுர குண்டம், திரிகோண குண்டம், அர்த்தசந்திர குண்டம், விருத்த குண்டம், எண்கோண குண்டம், யோனி குண்டம், பத்ம குண்டம், அறுகோண குண்டம் முதலாயின. குண்டங்களை அமைத்தும் அதில் சிவாக்னியை வளர்த்தும் சிவனைப் பற்றிய மூல மந்திரம், காயத்ரி, மாலா மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு “சிருக்” {யாகக்கரண்டி அல்லது நெய்யினை ஊற்ற உபயோகிக்கும் கருவி.} மூலமாக நெய்யினை ஆஹுதி {ஹோமம்} செய்தல் போன்ற செய்திகளை சைவ ஆகமங்கள் தெரிவிக்கின்றன.

ஐவகை யாகங்கள்.

மானிடர்களுக்கு இன்பமும் துன்பமும் மாறி மாறி வருகின்றன. சிலருக்குத் துன்பமானது தொடர்ந்து வந்தமயமாய் இருந்து வருகின்றன. இதனைப்போக்க ஞானிகள் பலவழிகளை மேற்கொண்டு உள்ளனர். இறைவனது திருக்கோயிலை வணங்குதல், அவனது திருவுருவத்திற்கு அபிஷேகம், அர்ச்சனை முதலான ஆராதனைகளைச் செய்தல், பிரதோசம், சிவராத்திரி, கிருத்திகை, சோமவாரம், வியாழன், வெள்ளி முதலிய நாட்களில் விரதத்தை மேற்கொள்ளுதல், இறுதியில் இறைவனுக்கு உரிய பொருள்களை யாகத்தின் மூலமாக செலுத்தி முழுப்பலனையும் பெறுதல் என்ற முறையைக் கையாளுகின்றனர்.

ராஜசூன்ய யாகம், அஸ்வமேத யாகம், சோம யாகம் இந்த சோம யாகத்திற்கு மூல மூர்த்தி ஸ்ரீ.தக்ஷினாமூர்த்தியே ஆவார். இந்த யாகத்திற்கு அதிமுக்கியமாகக் கருதப்படும் சோமக்கொடியின் சாற்றினை எடுத்து ஆஹுதி செய்தால் நல்ல மழை பெய்யும். இந்த யாகம் 1986.ல் கேரள மாநிலத்தில் நடந்தது. இந்த யாகம் செய்தமையால் நல்ல மழையும் பெய்தது. இந்த யாகாதி நிகழ்ச்சிகளில் அயல்நாட்டு அறிஞர்கள் கலந்துகொண்டு ஆய்வும் செய்தனர் என்பதைப் பலரும் அறிவர். தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்கள் உடல் நிலை மோசமாக இருந்த தருணத்தில் ஆர்.எம்.வி மூலமாக சென்னை அப்பல்லோ ஆஸ்பிட்டலில் அதிருத்ர யாகம் என் தாத்தா ஜி.எஸ்.விஸ்வநாத சிவாச்சார்யார் தலைமையில் நடைப்பெற்றது. அவரும் உடல் நிலை முன்னேற்றம் கண்டு சென்னை வந்தார். அதேமாதிரி 20.வருடங்கள் முன் இலங்கை யால்பானம் பகுதியை காப்பாற்ற பிரம்மாண்ட அளவில் அஸ்வமேதயாகம் என் தாத்தா தலைமையில் 1500 சிவாச்சார்யார்கள் களந்துகொண்டு சிறப்பாக நடைப்பெற்றன. நடிகர் சிவாஜிகனேசன் மற்றும் அவரது மகன் பிரபு அவர்களுக்காக அதிருத்ர யாகம் அவர்களது இல்லத்தில் நடத்தி அவர்கள் காரியம் வெற்றியடைந்தது இதல்லாம் அனுபவத்தில் கண்ட உண்மை. { இம்மூன்று யாகங்களும் மன்னர்கள் காலத்தில் செய்யப்பட்டன} கணபதி ஹோமம், சிவ ஹோமம், அதிருத்ர ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், {இவைகள் சிவ சம்பத்தப்பட்ட யாகங்கள்} துர்க்கா ஹோமம், சண்டி ஹோமம், நவசக்தி ஹோமம், {இவைகள் சக்திக்குறிய ஹோமங்கள்} இவைகளை தவிர புத்திர காமேஷ்டி யாகம், நவக்ரஹ யாகம், தனாகர்ஷ்ன யாகம், சத்ருசம்ஹார யாகம், முதலிய எண்ணற்ற ஹோமங்கள் செய்யப்படுகின்றன. சௌரமானவர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் இதுபோலவே தனித்தனியாக ஹோமங்கள் இருக்கின்றன.



மெய்ஞானத்தில் விஞ்ஞானம்...

திருக்கோயில் வழிபாடு, திருவிழாக்கள், அபிஷேக ஆராதனைகள், வேத மந்திரங்களை உச்சரித்தல், வேள்வி சம்பத்தப்பட்ட காரியங்கள் எல்லாம் விஞ்ஞான அடிப்படையில் அமைந்துள்ளன. ஆகவேதான் இன்று வரை நம் சமயமானது நிலைத்து நிற்கின்றது என்பது வெளிநாட்டு விஞ்ஞானிகள் கருத்தாகும்.

யாகத்தில் போடப்படும் பொருள்கள் அனைத்தும் நறுமணப் பொருள்களும், மருந்துப் பொருள்களும், விஷத்தை முறிக்கும் கொடி வகைகளும், தேவ சமித்துகளுமே, யாகம் செய்யும் காலத்தில் சுபிக்ஷத்திற்கும், காரிய சித்திக்குண்டான மந்திரங்களைச் சொல்லியும் மருந்துப் பொருள்களைத் தனித்தனியாக அக்னியில் சேர்ப்பித்தும் பசு நெய்யினை ஆஹுதியாகக் கொடுக்கப்படுகிறது.

யாகம் செய்கின்ற காலத்தில் எழும் யாகப் புகையானது வானத்தினைச் சுத்தம் செய்து மழைக்கு ஏதுவாகக் கர்ப்ப நீரோட்டத்தை அமைக்கிறது. மழையினால் தானிய உற்பத்தியும் செழுமையும் ஏற்படுகிறது. சமித்து மற்றும் மூலிகை மருந்துகளால் யாகம் செய்யப்படுவதால் ஓசோன் மண்டலம் பாதுகாக்கப்படுகிறது. யாகப்புகையினால் ஓசோன் மண்டலத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்க இது உதவுகிறது என்று நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றன.

ஹோமத்திலிருந்து வருகின்ற புகையும் எடுக்கப்பட்ட சாம்பலும் தோல் வியாதிகளை நீக்குகின்றன. {பிரான்ஸ் நாட்டில் சில பள்ளிக்குழந்தைகளுக்கு ஏற்பட்ட “ காக்காய் வலிப்பு “ நோய் வேள்விப் புகையின் மூலமாக நிவர்த்தியாயிற்று. என்ற 1981 – ஆம் ஆண்டுச் செய்தி கூறுகிறது. உதாரணமாக நாயுருவி என்ற செடியின் புகையானது சருமத்தில் உள்ள கெட்ட நீரினை அகற்றுகிறது. தோல் வியாதிகளைப் போக்குகிறது. ஆகவே இதனை யாகசாலைகளில் முக்கிய சமித்தாகக் கையாளுகின்றனர்.} மேலும் உடலிள்ள கெட்ட நீரினை அகற்றுகிறது. எலுமிச்சம் பழச்செடி, நாரத்தம்பழச்செடி, முல்லைச்செடி முதலான செடிகளுக்கு ஹோமச்சாம்பல் எருவாக இடப்படுதலினால் அவை பழங்களையும், பூக்களையும் அதிக அளவில் கொடுக்கின்றன என்பது தாவரவியல் விஞ்ஞானத்தில் கண்ட உண்மையாகும்.

இறைவனுக்குச் செய்யப்படும் யாகங்களில் 94.விதமான மருந்து பொருள்களைத் தனித் தனியே கொடுத்தும் அத்துடன் பசு நெய்யினால் ஆஹுதியும் கொடுப்பதனால் இறைவன் {சிவபிரான்} ஆனந்தம் கொண்டு அருள் என்ற பாலைக்கொடுக்கிறான் என்பது சமய கருத்து.

மேற்கூறிய மருந்துப் பொருள்களைத் தனித்தனியாக இடித்து, வஸ்த்திர காயம் செய்து நெய் விட்டுக்காய்ச்சி லேகியமாக்கித் தாயானவன் உண்டு தன் குழந்தைக்குப் பாலினைக் கொடுத்து உறுதியான குழந்தையை உருவாக்குகின்றாள். இந்நுட்பத்தை மேற்கூறியவாறு தெய்வ காரியமாக நம்மவர்கள் திருக்கோயிலில் நடத்தி வருவது கண்கூடாகும்.
ஸ்ரீ.ருத்ரம்...


எல்லா தெய்வங்களுக்கும் தனித்தனியே ஹோமங்கள், சைவ ஆகமங்களில் தெரிய வருகின்றன. சிவனைப் போற்றும் பல ஆராதனைகள் இருப்பினும் யாகமே சிறந்தது என முன்னோர்கள் கண்ட முடிவு ஆகும். “ நம சிவாய ச சிவதராய ச” {ஸ்ரீ.ருத்ரம் 8-1} சிவன் என்னும் சொல் “மங்களம்” எனப் பொருள்படும். சிவதரன் என்பது தன்னையடைந்தாரை சிவமாக்குகிறவன் என்பது பொருள்படும். 121.பேர் பதினோறு நாள் 1331.முறை சொன்னால் அதுதான் “ அதி ருத்ர மஹா யக்ஞம் “ உலக நலனுக்காக நிகழ்த்தப்படும் இந்த மஹா யக்ஞம் அனந்தகோடி மங்களங்களையும் சுபிட்சத்தையும் மக்களுக்கு தரவல்லது என்பது நிருபிக்கப்பட்ட உண்மை. இன்றைய அளவில் “ஸ்ரீ.ருத்ரம்” எல்லாச் சிவாலயங்களிலும் நித்திய, நைமித்திக காலங்களில் சொல்லப்பட்டு வருகின்றது. யாகத்தில் சிறந்ததும் மங்களத்தைக் கொடுக்கச் செய்வதுமாகிய ஹோமம் அதிருத்ர ஹோமமாகும்.

ரிக்,யஜுர்,சாம,அதர்வன என்ற நான்கு வேதங்களில் அதர்வணம் நீக்கி, மற்ற மூன்று வேதங்களின் நடுநாயகமாக விளங்கும் யஜுர் வேதத்தில் உள்ள அத்தியாயத்தின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ.ருத்ரம் என்ற “நமசிவாய” மந்திரமாகும்.

சிவனை வணங்க இந்த ருத்திரத்தை விடச் சிறந்த மந்திரம் வேறில்லை. “சிவாயநம: எனும் மந்திரத்தின் சிறப்பைத் திருமுறைப் பாடல்களில் காணலாம், ரிஷிகளும், நாயன்பார்களும், சமயாச்சாரியர்களும், சந்தானச்சார்யார்களும் தன்னகத்தே கொண்ட மந்திரம் “சிவாயநம” என்ற பஞ்சாட்சரமாகும். பஞ்சாட்சரமாகவே ஸ்ரீ,நடராஜப்பெருமானின் திருவுருவம் அமைந்துள்ளது என்பது ஆன்றோர் வாக்கு. அபிஷேகம், அர்ச்சனை, நமஸ்காரம், யாகக்காலம், விரதகாலம் அனைத்திலும் சொல்லத்தக்கது நமசிவாய மந்திரமான ஸ்ரீ.ருத்ரமாகும்.

இதை பாராயணம் செய்யச் செய்ய செய்பவர் ஆற்றல் கூடுகிறது. பாராயணம் செய்கின்ற ஒருவர் 11.முறை இதை பாராயணம் செய்தால் “ஸ்ரீ.ருத்ரம்” 11.பேர் சேர்ந்து 121.முறை சொன்னால் அது “ ருத்ர ஏகாதசி “ பதினோரு பேர் 1331 முறை சொன்னால் அது “ மஹா ருத்ரம் “ 121.பேர் 11.நாள் 1331.முறை சொன்னால் அது “ அதிருத்ரம் “

சிவபெருமானுக்கு “யக்ஞாய” “யக்ஞரூபாய” என்ற எண்ணற்ற சிறப்பு நாமாக்கள் இருக்கின்றன. திருக்கோயிலின் கும்பாபிஷேக நாட்களில் இறைவனை :அக்னி” ரூபமாகவே வழிபடுகின்றனர். யாகத்தின் முடிவில் “ மஹா பூர்ணாஹுதி “ செய்யப்படும் சமயத்தில் யாகாக்க்னியை நன்றாக வளர்த்தும் வணங்கியும், அவ்வேள்வி மூலமாக 36. தத்துவங்களையும் ஒன்று சேர்த்து இறைவனை ஆவாஹனம் செய்த கும்பத்திலே சேர்ப்பித்தும் ஷோடச உபசாரங்கள் முதலியன செய்தும் வழிபடுவது இன்று வரை நிகழ்ந்த வண்ணமாய் இருந்து வருகின்றது.

யாக சம்பத்தப்பட்ட செய்திகள் வேதங்களில் சூக்ஷ்மமாகக் கூறப்பட்டாலும் சிவாகமங்களில் செயல் முறைக்கு ஏற்ப விரிவாகவும் விளக்கமாகவும் கூறப்படுகிறது. இந்தச் சைவயாகாதி செயல்முறைகளை எல்லாம் ஆகமம் வழிநின்று ஒழுகும் பெரியோர்கள் மூலம் நேரிடையாகக் கேட்டு அறிந்து தெளிதல் சாலப் பொருத்தமாகும்... ஓம் நமசிவாய... . .



எந்தந்த யாகத்தினால் என்னன்ன பலங்கள் நமக்கு கிடைக்கப் பெரும்

கார்ய சித்திக்கு – கணபதி யாகம்.
க்ரஹ ப்ரீதிக்கு – நவக்ரஹ யாகம்.
ஐஸ்வர்யத்துக்கும்,தனப்ராப்திக்கும் – மஹா லக்ஷ்மி யாகம்.
ஆயுள் விருத்திக்கு – அமிருத முருத்யுஞ்ஜய யாகம்.
ஆரோக்யமான வாழ்விற்கு – ஆயுர்தேவதா,மற்றும் ஆயுஷ்ய ஹோமம்.
சத்ரு உபாதைகள் நீங்க – சுதர்சன யாகம் மற்றும் சத்ரு சம்ஹாரயாகம்.
கல்விக்கு – மஹா சரஸ்வதி யாகம்,மற்றும் ஹயக்ரீவர் யாகம்.
செய்வினை,மாந்ரீக வினை நீங்க – ப்ரத்யங்கிரா மற்றும் சூலினி யாகம்.
சகல கார்ய வெற்றிக்கு – மஹா சண்டி யாகம்.
பித்ரு தோஷம் நீங்க – தில ஹோமம்
நாக தோஷம் நீங்க – சர்ப சாந்தி.
திருமண தடை நீங்க – ஹரித்ரா கணபதி யாகம்.
ஆசைகள் பூர்த்தி அடைய – வாஞ்சா கல்ப கணபதி யாகம்.
புத்ர சந்தானம் கிடைக்க – புத்ர காமேஷ்டி யாகம்.
சகல தோஷமும் நீங்கி நலமடைய – ஸ்ரீ.ருத்ர யாகம்,
அம்பிகை அருள் பரிபூர்ணமாக கிடைக்க – ஸ்ரீ.வித்யா யாகம்.
ஆபத்து,விபத்துகள் அகல – அஸ்த்ர ஹோமம்.


தகுந்த ஆசார்யர்களை கொண்டு செய்தால் நிச்சயம் பலன் உண்டு என்பது பல சமயம் நிருபிக்கப்பட்ட உண்மை...

சூட்சுமம் திறந்த திருமந்திரம் ...

பிணி, திரை, மூப்பு இல்லாத வாழ்க்கை வேண்டும் என்பதே நீண்ட நெடுங்காலமாக மனித குலத்தின் ஆசையாக உள்ளது. அதற்கான வழிமுறைகளைத் தேடும் முயற்சிகளும் காலங் காலமாக நடைபெற்று வருகின்றன. நவீன மருத்துவ விஞ்ஞானமும் இதற்கான விடையை முனைந்து தேடி வருகிறது; இதுவரையில் வெற்றி கிடைக்கவில்லை.

ஆனால் நமது முன்னோர்கள் இதற்கான வழிமுறைகளைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடித்து விட்டனர். யோகாசனம், பிராணாயாமம், முத்திரைகள் என நம் முன்னோர்கள் வகுத்து வைத்த வழிமுறைகள் அனைத்துமே மூப்பு, திரை, பிணி என அனைத் தையுமே வெற்றி கொள்ளும் மார்க்கங்களாகும்.

திருமந்திரத்தின் மூன்றாம் தந்திரம் (மூன்றாம் பாகம்) முழுக்க முழுக்க "அஷ்டாங்க யோகம்' என்பதைக் குறித்தே விவரிக்கிறது. பல சூட்சும ரகசியங்களை விளக்குகிறது. "அஷ்டாங்கம்' என்ற வடமொழிச் சொல்லுக்கு "எட்டு பிரிவுகள்' என்பது பொருள். முழுமையான யோகக் கலையானது எட்டு அம்சங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. அவை முறையே-

1. இயமம்
2. நியமம்
3. ஆசனங்கள்
4. பிராணாயாமம்
5. பிரத்தியாகாரம்
6. தாரணை
7. தியானம்
8. சமாதி

இந்த ஒவ்வொன்றையும் குறித்து மிக விரிவாக திருமூலர் தனது திருமந்திரத்தில் விளக்கியுள்ளார். அவை அனைத்தையும் விவரிக்க வேண்டுமென் றால் பல பாகங்கள் கொண்ட ஒரு தனிப் புத்தகமே எழுத வேண்டியதிருக்கும். தற்போது "பிராணாயாமம்' எனும் மூச்சுப் பயிற்சி குறித்து திருமூலர் கூறியுள்ள சில உண்மைகளையும், சூட்சும ரகசியங்களையும் மட்டும் காணலாம்.

உயிருக்கு ஆதாரமாக இருப்பது மூச்சுதான். எனவேதான் அதை "உயிர் மூச்சு' என்கிறோம். மனிதன் உணவின்றி பல நாட்கள் உயிர் வாழ முடியும். நீர் இல்லாமற்கூட சில நாட்கள் உயிர் வாழலாம். ஆனால் காற்று (பிராணவாயு) இல்லாமல் போனால் எட்டு நிமிடங்களில் மரணம் நிச்சயம்! உடலின் இயக்கங்கள் அனைத்திற்கும் இந்த மூச்சுக் காற்றே ஆதாரம்.

"ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்
உய்யக்கொண்டு ஏறும் குதிரைமற்று
ஒன்றுண்டு
மெய்யர்க்கு பற்றுக் கொடுக்கும் கொடாது போய்ப்
பொய்யரைத் துள்ளி விழுந்திடும் தானே.'

(திருமந்திரம்)

நாம் நமது ஐம்பொறிகளாலேயே இந்த உலகை அளக்கிறோம். ஐம்பொறிகளின் வழியாகக் கிடைக்கும் செய்திகளின், உணர்வு களின் அடிப்படையிலேயே நமது செயல்பாடு களும் அமைகின்றன. கண், காது, மூக்கு, வாய், மெய் (தோல்) ஆகிய இந்த ஐம்பொறிகளையே திருமூலர் "ஐவர்' என்று குறிக்கிறார்.

இந்த ஐவர்க்கும் நாயகனாகவும், இந்த ஐம்பொறிகளும் உறையும் ஊருக்குத் (உடலுக்கு) தலைவனாகவும் ஒருவன் இருக்கிறானாம். நமது மனம்தான் (அல்லது சித்தம்) இந்தத் தலைவன்! தலைவன் வலுவாக இருந்தால் ஐம்பொறிகளும், இந்தப் பருவுடலும் அவனுக்கு அடங்கி நடக்கும். தலைவன் வலுவற்றவனாக இருக்கும் பட்சத்தில் ஐம்பொறிகளும் தம் இச்சைக்குச் செயல்படத் துவங்கிவிடும். உடலும் (ஊரும்) அந்தத் தலைவனின் கட்டுப்பாட்டிற்குள் இராது.

இந்த மனம் எனும் தலைவன் ஏறி வரும் குதிரை ஒன்று உள்ளதாம். சித்தர் இலக்கியங்க ளில் பல சங்கேத மொழிகள் உபயோகத்தில் உள்ளன. அவற்றுள் இந்த "குதிரை' என்பதும் ஒன்று. வேகம், உறுதி, இடைவிடாத ஓட்டம் ஆகியவை குதிரையின் தனிக்குணங்களாகும். குதிரைகள் தூங்கும்போதுகூட நின்று கொண்டேதான் தூங்கும்; படுப்பதில்லை. நோய்வாய்ப்படும்போது மட்டுமே குதிரைகள் படுத்துக்கொள்ளும். இந்த குணநலன்கள் அனைத்துமே நமது மூச்சுக் காற்றுக்கும் (பிராணன்) பொருந்துகின்றன. எனவேதான் சித்தர் இலக்கியங்களில் பல இடங்களில் மூச்சு அல்லது பிராணனைக் குறிக்க "குதிரை' என்ற சங்கேதச் (ரகசியம்) சொல்லை உபயோகப் படுத்துகின்றனர்.

குதிரை அடிப்படையில் ஒரு காட்டு விலங்கு. எளிதில் கட்டுப்படாது. ஒரு குதிரையைக் கட்டுக்குள் கொண்டு வருவது என்பது மிகவும் கடினமான ஒரு காரியம். அதில் தேர்ச்சி பெற்ற நிபுணர்கள் பல நாட்கள் போராடித்தான் குதிரையை அடக்கி அதன் மேல் ஏறி சவாரி செய்ய முடியும். ஒவ்வொரு முறையும் அதன் மேல் ஏற முயற்சி செய்யும்போதும் அது குப்புறத் தள்ளிவிடும். படிப்படியாகவே அதை அடக்க முடியும். ஒருமுறை அதை அடக்கி வெற்றி கொண்டு சேணத்தைப் பூட்டிவிட்டால், தனது வாழ்நாள் முழுவதும் அந்தக் குதிரை தனது எஜமானனுக்கு விசுவாசமுள்ள துணையாக இருக்கும். மூச்சுக் காற்றும் அவ்வாறே! அடக்குவதும் ஆள்வதும் மிக மிகச் சிரமமான காரியம். இந்த மூச்சு எனும் குதிரை யாருக்கு அடங்கும்?

இறைவனின் திருவடிகளையே பற்றிக் கொண்டு மெய்ஞ்ஞான வழியில் செல்லும் மனிதர்களுக்கே (மெய்யர்க்கு) இந்த குதிரை வசப்படுமாம்! உலக மாயைகளில் சிக்கி, இறை நாட்டம் கொள்ளாது வாழும் பொய்யர்களை இந்த சண்டிக் குதிரை கீழே தள்ளிவிடுமாம்.

இந்த ஒரு பாடலில் திருமூலர் பல சூட்சுமமான விஷயங்களை விளக்கியிருக்கிறார். அவற்றை சுருக்கமாகக் காண்போம்.

* ஐம்பொறிகளையும் ஆளும் தலைவன்- சித்தம் (மனம்).
* இந்த மனம் ஒருநிலைப்பட்டு உறுதியா னால் மட்டுமே ஐம்புலன்களும், பருவுடலும் அந்த சித்தத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.

இதுவரையில் படைப்பின் சூட்சுமங்களை யும் கரு உருவாவதில் இருக்கும் ரகசியங்களையும் குறித்து திருமூலரின் சில கருத்துகளைக் கண்டோம். இனி வேறு சில சூட்சும ரகசியங் களைக் காணலாம்.

பிணி, திரை, மூப்பு இல்லாத வாழ்க்கை வேண்டும் என்பதே நீண்ட நெடுங்காலமாக மனித குலத்தின் ஆசையாக உள்ளது. அதற்கான வழிமுறைகளைத் தேடும் முயற்சிகளும் காலங் காலமாக நடைபெற்று வருகின்றன. நவீன மருத்துவ விஞ்ஞானமும் இதற்கான விடையை முனைந்து தேடி வருகிறது; இதுவரையில் வெற்றி கிடைக்கவில்லை.

ஆனால் நமது முன்னோர்கள் இதற்கான வழிமுறைகளைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடித்து விட்டனர். யோகாசனம், பிராணாயாமம், முத்திரைகள் என நம் முன்னோர்கள் வகுத்து வைத்த வழிமுறைகள் அனைத்துமே மூப்பு, திரை, பிணி என அனைத் தையுமே வெற்றி கொள்ளும் மார்க்கங்களாகும்.

திருமந்திரத்தின் மூன்றாம் தந்திரம் (மூன்றாம் பாகம்) முழுக்க முழுக்க "அஷ்டாங்க யோகம்' என்பதைக் குறித்தே விவரிக்கிறது. பல சூட்சும ரகசியங்களை விளக்குகிறது. "அஷ்டாங்கம்' என்ற வடமொழிச் சொல்லுக்கு "எட்டு பிரிவுகள்' என்பது பொருள். முழுமையான யோகக் கலையானது எட்டு அம்சங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. அவை முறையே-

1. இயமம்

2. நியமம்

3. ஆசனங்கள்

4. பிராணாயாமம்

5. பிரத்தியாகாரம்

6. தாரணை

7. தியானம்

8. சமாதி

இந்த ஒவ்வொன்றையும் குறித்து மிக விரிவாக திருமூலர் தனது திருமந்திரத்தில் விளக்கியுள்ளார். அவை அனைத்தையும் விவரிக்க வேண்டுமென் றால் பல பாகங்கள் கொண்ட ஒரு தனிப் புத்தகமே எழுத வேண்டியதிருக்கும். தற்போது "பிராணாயாமம்' எனும் மூச்சுப் பயிற்சி குறித்து திருமூலர் கூறியுள்ள சில உண்மைகளையும், சூட்சும ரகசியங்களையும் மட்டும் காணலாம்.

உயிருக்கு ஆதாரமாக இருப்பது மூச்சுதான். எனவேதான் அதை "உயிர் மூச்சு' என்கிறோம். மனிதன் உணவின்றி பல நாட்கள் உயிர் வாழ முடியும். நீர் இல்லாமற்கூட சில நாட்கள் உயிர் வாழலாம். ஆனால் காற்று (பிராணவாயு) இல்லாமல் போனால் எட்டு நிமிடங்களில் ப் மனதை இயக்குவது மூச்சுக் காற்று (பிராணன்).

*இந்த மூச்சுக் காற்றை வசப்படுத்து பவர்களுக்கு மட்டுமே மனம் ஒருமுகப்படும்.

* இறைவனைப் பற்றிக் கொண்டு மெய்ஞ் ஞான வழியில் செல்பவர்களுக்கு மட்டுமே மூச்சு கட்டுப்படும்.

* பொய்ஞானம் எனும் மாயைகளில் சிக்குண்டு உழலுபவர்களுக்கு மூச்சு, மனம், ஐம்பொறிகள், பருவுடல் ஆகிய எதுவுமே வசப்படாது. முக்தி நிலையும் இவர்களுக்கு சாத்தியப்படாது.

குருவின் துணை

நாம் பிறந்தது முதல் இறப்பது வரையில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்றைப் புதிதாகக் கற்றுக்கொள்கிறோம். பல விஷயங்களைப் பிறர் சொல்லிக் கொடுக்கக் கற்றுக்கொள்கிறோம். சிலவற்றை பிறரைப் பார்த்துக் கற்றுக்கொள்கி றோம். இவை தவிர சிலவற்றை இயற்கையை உற்று நோக்கியும்கூட கற்றுக்கொள்கிறோம். புதிதாக ஒன்றைக் கற்றுத்தரும் ஒவ்வொருவருமே நமக்கு ஒரு குருதான்!

கல்விக்கு குருவின் துணை மிக அவசியம். அதைவிடவும் ஞானத் தேடலில்- ஞானம் தேடிய பயணத்தில் ஒரு குரு மிக மிக அவசியம். பிராணா யாமம் எனும் மூச்சுப் பயிற்சியை முறையாகக் கற்றுக்கொள்ள ஒரு குரு கட்டாயமாகத் தேவை. இதை கீழ்க்கண்ட திருமந்திரப் பாடல் வலியுறுத்துகிறது.

"ஆரியன் நல்லன் குதிரை இரண்டுள

வீசிப் பிடிக்கும் விரகு அறிவார் இல்லை

கூரிய நாதன் குருவின் அருள் பெற்றால்

வாரிப் பிடிக்க வசப்படும் தானே.'

(திருமந்திரம்)

"மனம்' என்பதை "ஆரியன்' என்ற சொல்லால் திருமூலர் குறிப்பிடுகிறார். இந்த மனமானது மிக நல்லதாம். இந்த மனதிடம் இரண்டு குதிரைகள் உள்ளதாம். முதல் பாடலில் ஒரு குதிரை உண்டு எனக் கூறிய திருமூலர் அடுத்த பாடலிலேயே இரண்டு குதிரைகள் உள்ளதாகக் கூறுகிறாரே, இது என்ன முரண்பாடு என்ற கேள்வி எழுகிற தல்லவா? இங்கேதான் மூச்சு குறித்த அடுத்த சூட்சும ரகசியம் பொதிந்து கிடக்கிறது.

முதல் பாடலில் "குதிரை' என்பது மூச்சு அல்லது பிராணனைக் குறிக்கிறது. இந்தப் பாடலில் அது நமது இடது நாசி, வலது நாசி ஆகிய இரண்டையும் குறிப்பதாக எடுத்துக் கொள்ளாம். இதுவே இரண்டு குதிரைகள். அல்லது இடது நாசி வழியாகச் செல்லும் மூச்சுக் காற்றை ஒரு குதிரை எனவும், வலது நாசி வழியாகச் செல்லும் மூச்சுக் காற்றை மற்றொரு குதிரை எனவும் பொருள் கொள்ளலாம்.

பிராணன் என்பது ஒன்றுதானே? வலது நாசியில் செல்லும் மூச்சுக்கும், இடது நாசியில் செல்லும் மூச்சுக்கும் வித்தியாசம் இருக்க முடியுமா என்ற கேள்வி உங்கள் மனதில் இப்போது எழுந்திருக்கும். ஆம்; இரண்டு நாசிகளிலும் செல்லும் மூச்சுக் காற்றுக்கு தனித்தனித் தன்மைகளும், செயல்பாடுகளும் உள்ளன. எனவேதான் திருமூலர் அதைப் பாகுபடுத்திக் காட்ட இரண்டு குதிரைகள் என்றார்.

நாம் நமது இரண்டு நாசித் துவாரங்களின் வழியாகவும் ஒரே நேரத்தில் சுவாசிப்பதாக ஒரு தவறான கருத்து நம்மிடையே உள்ளது. உங்களது சுவாசத்தை உற்றுக் கவனித்துப் பாருங்கள். இதிலுள்ள உண்மை புரியும்.

ஒரு நேரத்தில் ஒரு நாசியின் வழியாகவே அதிகப்படியான காற்று உள்ளே செல்லும். (அடுத்த நாசியில் மிகச் சிறய அளவிலான காற்று உட்புகும்.) சற்று நேரத்திற்குப்பின் (இரண்டு மணி நேரத்திற்குப் பின்) அடுத்த நாசி வழியாக காற்று செல்லத் துவங்கும். இவ்வாறு ஒரு நாளில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை என மொத்தம் 12 முறை இந்த இடம் மாறுதல் நடைபெறும். எந்த நேரத்தில் எந்த நாசியில் காற்று செல்லும் என்பதையும் நம் முன்னோர் கள் கணித்து வைத்துள்ளனர்.

நேரம் நாசி

காலை 6-8 மணி வரை வலது நாசி
காலை 8-10 மணி வரை இடது நாசி
காலை 10-12 மணி வரை வலது நாசி
மதியம் 12-2 மணி வரை இடது நாசி
மதியம் 2-4 மணி வரை வலது நாசி
மாலை 4-6 மணி வரை இடது நாசி
மாலை 6-8 மணி வரை வலது நாசி
இரவு 8-10 மணி வரை இடது நாசி
இரவு 10-12 மணி வரை வலது நாசி
இரவு 12-2 மணி வரை இடது நாசி
இரவு 2-4 மணி வரை வலது நாசி
அதிகாலை 4-6 மணி வரை இடது நாசி

வலது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சூரிய கலை என்றும்; இடது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சந்திர கலை என்றும் நமது முன்னோர்கள் பெயர் சூட்டியுள்ளனர். இந்த இரண்டு சுவாசங்களுக் கும் தனித்தனிப் பண்புகளும் வெவ்வேறு வகையான செயல்பாடுகளும் உள்ளன.

வலது நாசிக் காற்று (சூரிய கலை)

* உடலுக்குத் தேவையான வெப்ப சக்தியைத் தருகின்ற பிராணன் இதுவே.
* வலது நாசியின் வழியாக சுவாசம் நடைபெறும் காலகட்டத்தில் உடலின் வெப்ப நிலை சற்றே உயரும்.
* உடல் சுறுசுறுப்படையும்; சோர்வு அகலும்.
* உடலின் வலிமை அதிகரிக்கும்.
* மூளையும் உடலும் பரபரப்பாக இயங்கும்.
* இந்த இரண்டு மணி நேரத்தில் நிதானம் குறைவாகவும், வேகம் அதிகமாகவும் இருக்கும்.

இடது நாசிக் காற்று (சந்திர கலை)

* உடலைக் குளிர்விக்கும் தன்மை கொண்டது.
* சந்திரனைப் போன்றே இந்த மூச்சுக் காற்றும் குளுமையானதாகும்.
* இடது நாசி வழியே சுவாசம் நடைபெறும் வேளையில் உடலின் வெப்ப நிலை சற்றே குறைந்து, உடல் குளிர்ச்சியடையும்.
* பரபரப்புத் தன்மை குறைந்து, மனதிலும் உடலிலும் ஒரு சாந்தத் தன்மை உருவாகும்.
* மூளை அமைதியாக சிந்திக்கத் துவங்கும்.
* அவசரத் தன்மை மறைந்து, நிதானமான மனநிலை நிலவும்.

இந்த இரண்டு வகையான மூச்சுகளையும் (குதிரைகளையும்) அடக்கி ஆளக் கற்றுக் கொண்டால், மனம், ஐம்பொறிகள், பருவுடல் ஆகிய அனைத்துமே நம் கட்டுப்பாட்டிற்குள் வரும். ஆனால் இவற்றை அடக்கும் சூட்சுமம் எவருக்கும் தெரிவதில்லை என்பதையே இந்தப் பாடலின் இரண்டாவது வரி தெரிவிக்கிறது.

"வீசிப்பிடிக்கும் விரகு (உபாயம், வழிமுறை) அறிவார் இல்லை.'

இந்த சூட்சுமங்களைக் கற்றுக்கொண்டு, பிராணன் எனும் குதிரைகளை வசப்படுத்த ஒரு குருவின் துணை வேண்டும். அந்த குருவும் நுண்ணறிவு படைத்தவராக, அந்தக் கலையில் முழுமை பெற்றவராக இருத்தல் வேண்டும். இந்தக் கருத்தே கடைசி இரு வரிகளில் வெளிப் படுகிறது.

"கூரிய நாதன் குருவின் அருள் பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படும் தானே.'

இதில் "அருள் பெற்றால்' என்ற சொற்களிலும் ஒரு சூட்சுமம் உள்ளது. குருவிடம் சென்று கற்றுக்கொள்வது வேறு; அவரது அருளைப் பெறுவதென்பது வேறு. நீங்களே இதை ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள். இதிலுள்ள சூட்சும ரகசியங்கள் புரியும்.


"புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டால்
கள்உண்ண வேண்டாம் தானே களிதரும்
துள்ளி நடப்பிக்கும் சோம்பர் தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே.'

திருமந்திரம்- பாடல் எண்: 559

"புள்' என்பது பறவையைக் குறிக்கும் சொல்லாகும். "புள்ளினும் மிக்க புரவி' என்றால் பறவையைவிட வேகமாகப் பறக்கக் கூடிய குதிரை என்பது பொருள். பிராணனைக் குறிக்க குதிரை என்ற குறியீட்டை சித்தர்கள் பயன்படுத்தினர் என்பதை ஏற்கெனவே கண்டோம். ஆக, பறவையைவிட வேகமாகச் செல்லக்கூடிய இந்த பிராண னாகிய குதிரையை நம்வசப்படுத்திக் கொண்டால் (மேற்கொண்டால்) என்னென்ன நிகழும்?

"கள் உண்ண வேண்டாம்; தானே களிதரும்.'

ஒருவித ஆனந்தமான மனநிலையை அடையவே மனிதர்கள் கள் முதலிய போதைப் பொருட்களை உண்கிறார்கள் அல்லவா? ஆனால் திருமூலரின் கூற்றுப்படி, பிராணா யாமம் எனும் மூச்சுப் பயிற்சியின் மூலமாக நமது பிராணனை நாம் வசப்படுத்திவிட்டால், கள் உண்ணாமலேயே கள் உண்ட ஆனந்த நிலை உடலிலும் மனதிலும் உருவாகிவிடும்.

மூச்சுப் பயற்சியின் மூலமாக குண்டலினி சக்தி தட்டி எழுப்பப்பட்டு நமது தலையின் மேற்பகுதி யிலுள்ள "லலான சக்கரம்' தூண்டப்பட்டால், அந்த சக்கரத்திலிருந்து உருவாகும் "அமிர்தம்' ஒரு எல்லையற்ற ஆனந்த நிலையை உருவாக்கும். இதையே "பேரானந்தம்' என்கிறார்கள். இந்த ஆனந்த நிலையும் ஒருவகையான போதையே. ஒருமுறை அனுபவித்தவர்களுக்கு அந்த நிலை யிலிருந்து வெளியில் வரவே மனம் வராது. மீண்டும் மீண்டும் அந்த ஆனந்த நிலையையே மனம் நாடும். எனவேதான் வடமொழியில் இந்த நிலையை "ஆனந்த லகரி' என்கிறார்கள்.

ஆக, பிராணனை வசப்படுத்துவதால் விளையும் முதல் பலன்- ஆனந்தமான மனநிலை உருவாகும். இது ஒரு பேரானந்த நிலை.

"துள்ளி நடப்பிக்கும், சோம்பர் தவிர்ப்பிக்கும்.'

ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கு மிகப் பெரிய தடையாக அமைவது அவனிடத்தில் காணப் படும் சோம்பல்! பலர் பல நல்ல வாய்ப்புகளைத் தவற விட்டுவிடுவதற்குக் காரணமாக அமைவது மனதில் அல்லது உடலில் ஏற்படும் சோம்பல் தான்! பிராணன் எனும் குதிரையை நமது வசப்படுத்திக் கொண்டால் சோம்பல் மறையும். மனதிலும் உடலிலும் ஒரு புதிய உற்சாகம் பிறக்கும். சுறுசுறுப்பும் துள்ளலும் தானே ஏற்படும். வாழ்க்கை சிறக்கும்.

"உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே.'

இதுவே உண்மை. அதைச் சொல்லிவிட்டோம். ஆனால் உணர்வுடையோர்க்கு மட்டுமே இந்த ரகசியம் புரியும் என்கிறார் திருமூலர். உயிரோடி ருக்கும் (மரம், செடி, கொடி, விலங்குகள் உட்பட) அனைத்துமே உணர்வு கொண்டவை தானே என்ற சந்தேகம் எழும். இந்தப் பாடலில் திருமூலர் குறிக்கும் உணர்வு என்பது "உள்ளுணர்வு' அல்லது "மெய்ஞ்ஞானம்' என்பதைக் குறிக்கிறது என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். இனி அடுத்த பாடலைக் காணலாம்.

"பிராணன் மனத்தொடும் பேராது அடங்கிப்
பிராணன் இருக்கில் பிறப்பு இறப்பு இல்லை
பிராணன் மடைமாறிப் பேச்சு அறிவித்துப்
பிராணன் நடைபேறு பெற்று உண்டீரே.'

திருமந்திரம்- பாடல் எண்: 560

ஆன்மிகப் பாதையில் செல்பவர்களுக்கும், ஞானத் தேடலில் இறங்குபவர்களுக்கும் இறுதி யான குறிக்கோள் ஒன்றேயாகும். அது பிறப்பு- இறப்பு அற்ற முக்தி நிலை! வழிகள் வெவ்வேறாக இருந்தாலும் முக்தி நிலையை அடைவதே குறிக்கோளாக இருக்கிறது.

பிராணனும் மனமும் ஒன்றாக இணைந்து, ஒன்றில் ஒன்று அடங்கி ஒடுங்கும் நிலையை அடையும்போதுதான் பிறப்பு - இறப்பு இல்லாத நிலை உருவாகும் என்கிறார் திருமூலர்.

"பிராணன் மனத்தொடும் பேராது அடங்கிப்
பிராணன் இருக்கில் பிறப்பு இறப்பு இல்லை.'

"பேராது' என்ற சொல்லுக்கு "விலகாது' என்று பொருள். பிராணன் மனத்திலிருந்து விலகாமல் இரண்டும் ஒன்றாக இணைந்து அடங்க வேண்டும். பிராணாயாமம் எனும் மூச்சுப் பயிற்சியின் வாயிலாகவே இது சாத்தியமாகும் என்கிறார் திருமூலர்.

நாம் சுவாசிக்கும்போது மூச்சுக் காற்றானது (பிராணன்) மேலிருந்து கீழாகவே செல்கிறது அல்லவா? இதுவே இயல்பான மூச்சு. ஆனால் இத்தகைய இயல்பான சுவாச முறையினால் முக்தி நிலையை அடைய இயலாது. பிராணன் தனது இயல்பான பாதையை விட்டு மாறி (மடைமாறி) மேல்நோக்கிச் சென்று ஆக்ஞை, லலானம், சகஸ்ராரம் ஆகிய உயர்நிலைச் சக்கரங்களை அடைய வேண்டும். அப்போதுதான் பிறப்பு- இறப்பு இல்லாத முக்தி நிலை உருவாகும்.

"மடைமாறி' என்ற ஒரு சொல்லில் பல சூட்சுமங்கள் உள்ளன. தண்ணீர் செல்லும் சிறிய வாய்க்காலையே (ஈட்ஹய்ய்ங்ப்) "மடை' என்பார்கள். மடை மாறி என்ற சொல்லுக்கு (மேலே கண்டபடி) கீழ்நோக்கிச் செல்லும் பிராணன் தனது பாதையிலிருந்து மாறி மேல்நோக்கிச் செல்ல வேண்டும் என்றும் பொருள் கொள்ளலாம். இது தவிர மேலும் இரு சூட்சுமங்கள் இந்த ஒற்றைச் சொல்லில் உள்ளன.

சுவாசம் என்பது இடது நாசி, வலது நாசி என மாறி மாறி வரும்; இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை இந்த மாற்றம் நிகழும் என்பதை கடந்த அத்தியாயத்தில் ஒரு திருமந்திரப் பாடலில் கண்டோம்.

இது இயல்பான சுவாச நிலை. தொடர்ந்த மூச்சுப் பயிற்சி, தியானம், யோகாசனங்கள் ஆகியவற்றின் மூலம் இந்த இயல்பான நிலை மாறி (மடை மாறி) இடது நாசியில் மட்டுமே சுவாசம் செல்லும் நிலை உருவாகும்போதுதான் பிறப்பு- இறப்பு அற்ற நிலை உருவாகும். இது ஒரு சூட்சுமம். மேலும் ஒன்று உள்ளது.

இடது நாசியில் சுவாசம் செல்லும்போது இடகலை நாடி தூண்டப்பட்டு அந்த நாடியில் அதிகப்படியான பிராணன் பாயும். வலது நாசியின் வழியாகச் சுவாசிக்கும்போது பிங்கலை நாடி தூண்டப்பட்டு அந்த நாடியில் அதிகப் படியான பிராணன் பாய்ந்து செல்லும். இதுவே இயல்பான சுவாச நடை.

இந்த இயல்பு நிலை மாறி (மடை மாறி) ஒவ்வொரு முறை சுவாசிக்கும் போதும் பிராணன் சுழுமுனை நாடியில் பாயத் துவங்கும்போதுதான் பிறப்பு- இறப்பு இல்லாத முக்தி நிலையை அடைய முடியும். தொடர்ந்து பிராணாயாமப் பயிற்சிகளை மேற்கொண்டு யோகக் கலையில் உயர்நிலையை அடைந்தவர்களுக்கு மட்டுமே இது சாத்தியமாகும். பிராணன் தனது இயல்பான பாதையிலிருந்து "மடைமாறி' (ஈட்ஹய்ஞ்ங் ர்ச் ஈட்ஹய்ய்ங்ப்) சுழுமுனை நாடியில் பாயத் துவங்கும்போது எல்லையற்ற பேரானந்த நிலை உருவாகும். யோகிகளுக்கும் ஞானிகளுக்கும் மட்டுமே இது சாத்தியமாகும்.

இந்தப் பாடலின் மூன்றாவது வரியில் "பேச்சு அறிவித்து' என்ற ஒரு சொல் வருகிறதல்லவா? அந்தச் சொல்லிலும் ஒரு மிகப் பெரிய சூட்சுமம் ஒளிந்து நிற்கிறது. அதைச் சுருக்கமாகக் காணலாம்.

சாதாரண - இயல்பான சுவாசம் நடைபெறும் வரையில் பேச்சு நிற்காது. மனம் ஒடுங்காது பிராணனிலிருந்து தனியாக நிற்பதால் மனம் அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டேயிருக்கும். வாயும் ஓயாமல் பேசிக்கொண்டேயிருக்கும். ஆனால் மூச்சு மடைமாறி பாயத் துவங்கும்போது சூட்சும உடலிலும் (சக்தி உடல்), பருவுடலிலும் சில மாற்றங்கள் நிகழும்.

* சுழுமுனை நாடியில் பிராணன் பாயும் போது மூலாதாரத்தின் அருகே உறங்கிக் கிடக்கும் குண்டலினி தட்டி எழுப்பப்படும்.
* இந்தக் குண்டலினி சக்தியானது சுழு முனை நாடி வழியே மேலெழும்பி சக்கரங்களை அதிக வலிமையுடன் இயங்கச் செய்யும்.
* முதலில் கீழ்நிலைச் சக்கரங்கள் தூண்டப் படும்.
* தொடர்ந்து யோகப் பயிற்சிகளைச் செய்து வரும்போது இடைநிலைச் சக்கரங்கள் தூண்டப் படும்.
* மேலும் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வரும்போது உயர்நிலைச் சக்கரங்கள் தூண்டப்படுகின்றன.
* ஒவ்வொரு சக்கரத்தையும் குண்டலினி இயக்கும்போது அந்த சக்கரத்தோடு தொடர்பு டைய பல சித்திகள் சாதகருக்குக் கிடைக்கும்.
* கீழேயுள்ள ஐந்து சக்கரங்களையும் கடந்து ஆறாவது சக்கரமான ஆக்ஞை சக்கரத்தைக் குண்டலினி அடையும்போது, "திரிகால ஞானம்' எனும் சித்தி கிடைக்கும். கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகிய மூன்று காலங் களையும் உணர்ந்தவர்களையே, "முக்காலமும் உணர்ந்த முனிவர்கள்' அல்லது திரிகால ஞானி என்கிறோம்.

ஆறாவது சக்கரத்தையும் கடந்து, ஏழாவது சக்கரமான சகஸ்ரார சக்கரத்தை குண்டலினி அடையும்போதுதான் பரமாத்மாவும் ஜீவாத்மா வும் இணையும் நிகழ்வு நடைபெறும். இந்த நிலையை அடைந்த மனிதன் கடவுளுக்கு இணையான சக்திகளையும் திறமைகளையும் கொண்டவனாக இருப்பான்.

இங்கே ஒரு சிக்கல் எழுகிறது. "எட்டணா இருந்தால் எட்டூருக்கு எம்பாட்டு கேக்கும்' என்பதுதானே மனிதனின் அடிப்படைத் தன்மை? அவனிடத்தில் கடவுளுக்கு இணையான சக்திகள் வந்து சேர்ந்தால் என்னவாகும்? இறைவன் அல்லது இயற்கை மனிதனைப் படைக்கும்போதே, தானே முடிவெடுத்துச் செயல்படும் தன்மையையும் (எழ்ங்ங் ஜ்ண்ப்ப்) சேர்த்தே படைத்திருக்கிறது. தன்னிடத்திலுள்ள சக்தி களை, சித்திகளை ஒரு மனிதன் நல்ல வழியிலும் பயன்படுத்தலாம்; தீய வழிகளிலும் பயன்படுத்த லாம். அப்படியானால் கடவுளுக்கு இணையான சக்திகளைப் பெற்ற ஒருவன் அவற்றைத் தீய வழிகளில் பயன்படுத்தத் துவங்கினால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்?

இங்கேதான் ஒரு அற்புதமான சூட்சுமம் உள்ளது. ஆறாவது சக்கரமான ஆக்ஞை சக்கரம் வரையில் ஒவ்வொரு சக்கரமும் குண்டலியினால் இயக்கப்படும்போது கிடைக்கப் பெறும் சித்திகளை ஒரு மனிதன் தன் விருப்பப்படி பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஆனால் ஆறாவது சக்கரத்தைத் தாண்டி குண்டலினி ஏழாவது சக்கரத்திற்குச் செல்லும் வழியில் ஒரு வேகத்தடை உள்ளது. அதன் பெயர் "தாமச நாடி'. குண்டலினி ஆறாவது சக்கரத்தைத் தாண்டிச் செல்லும்போது லலான சக்கரம் மட்டுமின்றி, இந்த தாமச நாடியும் தூண்டப் படுகிறது.

"தாமசம்' என்ற சொல்லுக்கு தாமதம், சோம்பல், சுறுசுறுப்பின்மை, உள்ளே ஒடுங்குதல் என பல அர்த்தங்கள் உண்டு. இந்த தாமச நாடி தூண்டப்படும்போது அந்த மனிதரிடம் ஒரு பற்றற்ற நிலை உருவாகி வரும். எதிலும் ஒரு ஈடுபாடு இராது. ஆரவாரங்கள் எல்லாம் அடங்கிப் போகும். சித்து விளையாட்டுகள் எல்லாம் மறைந்து, தன்னுள்ளே ஒடுங்கி, ஒரு குழந்தையைப் போன்ற தன்மை அவர்களிடம் உருவாகிவிடும். மறைந்த காஞ்சிப் பெரியவரை நினைத்துப் பாருங்கள். ஆரவாரங்கள் எதுவுமின்றி ஒடுங்கிப் போய், ஒரு குழந்தையின் சிரிப்புடன் அவர் பல வருடங்கள் இருந்தார் அல்லவா? அதுவே தாமச நாடி தூண்டப்பட்ட நிலை!

தாமச நாடி தூண்டப்பட்டு விட்டால் பேச்சும் அடங்கிப் போகும். மிகமிகத் தேவை யான தருணங்களில் மட்டுமே பேசுவார்கள். பிற மனிதர்களிடமிருந்தும் உறவுகளிடமிருந்தும் ஆசா பாசங்களிலிருந்தும் ஒதுங்கிப் போய் தன்னுள்ளே ஒடுங்கி, எல்லையற்ற ஆனந்த நிலையில் எந்நேரமும் திளைத்திருப்பார்கள். அவர்கள் நிறைந்த குடம்- இனிமேல் தளும்ப மாட்டார்கள்.

பிராணனும் மனமும் தனித்தனியே இருக்கும் வரையில்தான் "பேச்சு'. இரண்டும் ஒன்றிணைந்து தாமச நாடி தூண்டப்பட்ட பின் பேச்சு என்பதே இராது. இதையே "பேச்சு அறிவித்து' என்ற இரு சொற்களில் திருமூலர் சூட்சுமமாகக் கூறிச் சென்றுள்ளார்

கடவுள் இயல்



 சிவமயம்



1. கடவுள் இயல்


1. உலகத்துக்குக் கருத்தா யாவர்? 

சிவபெருமான்.

2. சிவபெருமான் எப்படிப்பட்டவர்? 

என்றும் உள்ளவர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் அறிபவர்; எல்லாம் வல்லவர்.

3. சிவபெருமான் ஆன்மாக்களுக்காகச் செய்யுந் தொழில்கள் யாவை? 

படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்றுமாம்.

4. சிவபெருமான் இந்த மூன்று தொழில்களையும் எதைக் கொண்டு செய்வார்? 

தமது சத்தியைக் கொண்டு செய்வார்.

5. சத்தி என்னுஞ் சொல்லுக்குப் பொருள் யாது? 

வல்லமை.

6. சிவபெருமானுக்குச் சத்தி யாவர்? 

உமாதேவியார்.

7. சிவபெருமானுடைய திருகுமாரர்கள் யாவர்? 

விநாயகக் கடவுள், வைரவக் கடவுள், வீரபத்திரக் கடவுள், சுப்பிரமணியக் கடவுள் என்னும் நால்வர்.

8. சிவபெருமான் ஆன்மாக்களுக்கு அருள்செய்யும் பொருட்டு உமாதேவியாரோடும் எழுந்தருளி இருக்கும் முக்கிய ஸ்தானம் யாது? 


திருகைலாச மலை

9. சிவபெருமான் ஆன்மாக்களுக்கு எவ்விடங்களிலே நின்று அருள் செய்வார்?


சிவலிங்கம் முதலாகிய திருமேனிகளிடத்திலும், சைவாசாரியர் இடத்திலும், சிவனடியார் இடத்திலும் நின்று அருள் செய்வார்.

புண்ணிய பாவ இயல்


2. புண்ணிய பாவ இயல்



1. சிவபெருமான் ஆன்மாகளுக்காக அருளிச் செய்த முதனூல்கள் எவை?

வேதம், சிவாகமம் இரண்டுமாம்.

2. வேத சிவாகமங்களில் விதிக்கப்பட்டவைகள் எவைகள்?

புண்ணியங்கள்.

3. புண்ணியங்கள் ஆவன யாவை?

கடவுளை வழிபடுதல், தாய் தகப்பன், உபாத்தியாயர், குரு முதலாகிய பெரியோர்களை வணங்குதல், உயிர்களுக்கு இரங்குதல், உண்மை பேசுதல், செய்ந்நன்றி அறிதல் முதலானவைகள்.

4. புண்ணியங்கள் செய்தவர் எதனை அனுபவிப்பர்?

மேல் உலகங்களாகிய புண்ணிய லோகங்களிலே போய், இன்பத்தை அனுபவிப்பர்.

5. வேத சிவாகமங்களிலே விலக்கப்பட்டவைகள் எவைகள்?

பாவங்கள்.

6. பாவங்கள் ஆவன யாவை?

கொலை, களவு, கள்ளுக் குடித்தல், மாமிசம் புசித்தல், பொய் பேசுதல், வியபிசாரம், சூதாடுதல் முதலானவைகள்.

7. பாவங்களைச் செய்தவர் எதனை அனுபவிப்பர்?
நரகங்களிலே விழுந்து, துன்பத்தை அநுபவிப்பர்.

விபூதி இயல்



3. விபூதி இயல்


1. சிவபெருமானை வழிபடுஞ் சமயத்துக்குப் பெயர் யாது?

சைவசமயம்.

2. சைவசமயிகள் சரீரத்திலே ஆவசியமாகத் தரிக்க வேண்டிய அடையாளம் யாது?

விபூதி.

3. விபூதி ஆவது யாது?

பசுவின் சாணத்தை அக்கினியாலே சுடுதலால் உண்டாக்கிய திருநீறு.

4. எந்த நிற விபூதி தரிக்கத் தக்கது?

வெள்ளை நிற விபூதி.

5. விபூதியை எதில் எடுத்து வைத்துக்கொண்டு தரித்தல் வேண்டும்?

பட்டுப் பையிலேனும், சம்புடத்திலேனும் எடுத்து வைத்துக்கொண்டு தரித்தல் வேண்டும்.

6. விபூதியை எந்தத் திக்குமுகமாக இருந்துகொண்டு தரித்தல் வேண்டும்?

வடக்கு முகமாகவேனும், கிழக்கு முகமாகவேனும் இருந்து கொண்டு தரித்தல் வேண்டும்.

7. விபூதியை எப்படி தரித்தல் வேண்டும்?

நிலத்திலே சிந்தா வண்ணம் அண்ணாந்து 'சிவசிவ' என்று சொல்லி, வலக்கையின் நடுவிரல் மூன்றினாலும் நெற்றியிலே தரித்தல் வேண்டும்.

8. விபூதி நிலத்திலே சிந்தினால் யாது செய்தல் வேண்டும்?

சிந்திய விபூதியை எடுத்துவிட்டு, அந்த இடத்தைச் சுத்தம் செய்தல் வேண்டும்.

9. நடந்து கொண்டாயினும், கிடந்துகொண்டாயினும் விபூதி தரிக்கலாமா?

தரிக்கல் ஆகாது.

10. எக்காலங்களிலே விபூதி ஆவசியமாகத் தரித்துக் கொள்ளல் வேண்டும்?

நித்திரை செய்யப் புகும் போதும், நித்திரை விட்டெழுந்த உடனும், தந்த சுத்தம் செய்த உடனும், சூரியன் உதிக்கும் போதும், அத்தமிக்கும் போதும், ஸ்நானஞ் செய்த உடனும், போசனத்துக்குப் போம் போதும், போசனஞ் செய்த பின்னும் விபூதி ஆவசியமாகத் தரித்துக் கொள்ளல் வேண்டும்.

11. ஆசாரியர் ஆயினும், சிவனடியார் ஆயினும் விபூதி தந்தால், எப்படி வாங்கல் வேண்டும்?
மூன்று தரம் ஆயினும், ஐந்து தரம் ஆயினும் நமஸ்கரித்து, எழுந்து கும்பிட்டு, இரண்டு கைகளையும் நீட்டி வாங்கல் வேண்டும்.

12. விபூதி வாங்கித் தரித்துக் கொண்ட பின் யாது செய்தல் வேண்டும்?

முன் போல் மீண்டும் நமஸ்கரித்தல் வேண்டும்.

13. சுவாமி முன்னும், குரு முன்னும், சிவனடியார் முன்னும் எப்படி நின்று விபூதி தரித்தல் வேண்டும்?


முகத்தைத் திருப்பி நின்று தரித்தல் வேண்டும்.

14. விபூதி தாரணம் எத்தனை வகைப்படும்?

உத்தூளனம், திரிபுண்டரம் என இரண்டு வகைப்படும்.

( உத்தூளனம் = நீர் கலவாது, திரிபுண்டரம் =மூன்று குறி)

15. திரிபுண்டரந் தரிக்கத் தக்க தானங்கள் யாவை?

சிரம், நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாள்கள் இரண்டு, புயங்கள் இரண்டு, முழங்கைகள் இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு, விலாப் புறம் இரண்டு, முதுகு, கழுத்து என்னும் பதினாறுமாம்.

இவைகளுள், விலாப் புறம் இரண்டையும் நீக்கிக் காதுகள் இரண்டையும் கொள்வதும் உண்டு. முழங்கைகளையும் மணிக்கட்டுகளையும் நீக்கிப் பன்னிர்ண்டு தானங் கொள்வதும் உண்டு.

16. திரிபுண்டரந் தரிக்கும் இடத்து, நெற்றியில் எவ்வளவு நீளந் தரித்தல் வேண்டும்?


இரண்டு கடைப்புருவ எல்லைவரையுந் தரித்தல் வேண்டும், அதிற் கூடினாலுங் குறைந்தாலுங் குற்றமாம்.

17. மார்பிலும் புயங்களிலும் எவ்வளவு நீளந் தரித்தல் வேண்டும்?

அவ்வாறங்குல நீளந் தரித்தல் வேண்டும்.

(அங்குலம் = 2.5 செ.மீ)

18. மற்றைத் தானங்களில் எவ்வளவு நீளந் தரித்தல் வேண்டும்.

ஒவ்வோர் அங்குல நீளந் தரித்தல் வேண்டும்.

19. மூன்று குறிகளின் இடைவெளி எவ்வளவினதாய் இருத்தல் வேண்டும்?

ஒவ்வோர் அங்குல அளவினதாய் இருத்தல் வேண்டும். ஒன்றை ஒன்று தீண்டல் ஆகாது.

சிவ மூலமந்திர இயல்




1. சைவசமயிகள் நியமமாகக் செபிக்க வேண்டிய சிவமூலமந்திரம் யாது?

ஸ்ரீபஞ்சாக்ஷரம்.(திருவைந்தெழுத்து).

2. ஸ்ரீபஞ்சாக்ஷர செபஞ் செய்தற்கு யோக்கியர் ஆவார் யாவர்?

மது பானமும், மாமிச போசனமும் இல்லாதவராய், ஆசாரம் உடையவராய், சிவதீ?க்ஷ பெற்றவராய் உள்ளவர்.

3. ஸ்ரீபஞ்சாக்ஷரத்திலே எத்தனை உரு நியமமாகச் செபித்தல் வேண்டும்?

நூற்றெட்டு உருவாயினும், பத்து உருவாயினும் நியமமாகச் செபித்தல் வேண்டும்.

4. எந்த திக்குமுகமாக இருந்து செபித்தல் வேண்டும்?

கிழக்கு முகமாகவேனும், வடக்கு முகமாகவேணும் இருந்து செபித்தல் வேண்டும்.

5. எப்படி இருந்து செபித்தல் வேண்டும்?
முழந்தாள் இரண்டையும் மடக்கி, காலோடு காலை அடக்கி, இடத்தொடையின் உள்ளே வலபுறங்காலை வைத்து, இரண்டு கண்களும் மூக்கு நுனியைப் பொருந்த, நிமிர்ந்திருந்து கொண்டு, செபித்தல் வேண்டும்.

6. எப்படி இருந்து செபிக்கல் ஆகாது?

சட்டை இட்டுக்கொண்டும், தலையிலே வேட்டி கட்டிக் கொண்டும், போர்த்துக்கொண்டுஞ் செபிக்கல் ஆகாது.

7. செபஞ் செய்யும் பொழுது மனம் எங்கே அழுந்திக் கிடத்தல் வேண்டும்?

சிவபெருமான் இடத்திலே அழுந்திக் கிடத்தல் வேண்டும்.

8. நிற்கும் பொழுதும், நடக்கும்பொழுதும், இருக்கும் பொழுதும், கிடக்கும் பொழுதும், மற்றை எத்தொழிலைச் செய்யும் பொழுதும் மனசை எதிலே பதித்தல் வேண்டும்?
உயிருக்கு உயிராகிய சிவபெருமானுடைய திருவடிகளிலேயே மனசைப் பதித்தல் வேண்டும்.

9. மரிக்கும் பொழுது எப்படி மரித்தல் வேண்டும்?

வேறு ஒன்றிலும் பற்று வையாது, சிவபெருமான் இடத்திலே பற்று வைத்து, தமிழ் வேதத்தைக் கேட்டுக் கொண்டும் ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை உச்சரித்துக் கொண்டும் மரித்தல் வேண்டும்.

சிவாலய தரிசன இயல்




1. சிவபெருமானை வழிபடுதற்கு உரிய முக்கிய ஸ்தானம் யாது?
திருக்கோயில்.

2. திருக்கோயிலுக்கு எப்படிப் போதல் வேண்டும்?
ஸ்தானஞ் செய்து தோய்த்துலர்ந்த வஸ்திரந்தரித்து, விபூதி இட்டுக்கொண்டு, போதல் வேண்டும்.

3. திருக்கோயிலுக்குச் சமீபித்த உடனே யாது செய்தல் வேண்டும்?
தூலலிங்கமாகிய திருக்கோபுரத்தைத் தரிசித்து, இரண்டு கைகளையுஞ் சிரசிலே குவித்து, சிவநாமங்களை உச்சரித்துக் கொண்டு, உள்ளே போதல் வேண்டும்.

4. திருக்கோயிலின் உள்ளே போனவுடன் யாது செய்தல் வேண்டும்?
பலிபீடத்துக்கு இப்பால் நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.

5. கிழக்கு நோக்கிய சந்நிதானத்திலும், மேற்கு நோக்கிய சந்நிதானத்திலும், எந்தத் திக்கிலே தலைவைத்து நம்ஸ்காரம் பண்ணல் வேண்டும்?
வடக்கே தலைவைத்து நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.

6. தெற்கு நோக்கிய சந்நிதானத்திலும், வடக்கு நோக்கிய சந்நிதானத்திலும், எந்தத் திக்கிலே தலைவைத்து நமஸ்காரம் பண்ணல் வேண்டும்?
கிழக்கே தலை வைத்து நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.

7. எந்த திக்குக்களிலே கால் நீட்டி நமஸ்காரம் பண்ணல் ஆகாது?
கிழக்கிலும் வடக்கிலும் கால் நீட்டி நமஸ்காரம் பண்ணல் ஆகாது.

8. ஆடவர்கள் என்ன நமஸ்காரம் பண்ணல் வேண்டும்?
அட்டாங்க நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.

9. அட்டாங்க நமஸ்காரமாவது யாது?
தலை, கை இரண்டு, செவி இரண்டு, மோவாய், புயங்கள் இரண்டு என்னும் எட்டு அவயவமும் நிலத்திலே பொருந்தும்படி வணங்குதல்.

10. பெண்கள் என்ன நமஸ்காரம் பண்ணல் வேண்டும்?
பஞ்சாங்க நமஸ்காரம் பண்ணல் வேண்டும்.

11. பஞ்சாங்க நமஸ்காரமாவது யாது?
தலை, கை இரண்டு, முழந்தாள் இரண்டு என்னும் ஐந்து அவயவமும் நிலத்திலே பொருந்தும்படி வணங்குதல்.

12. நமஸ்காரம் எத்தனை தரம் பண்ணல் வேண்டும்?
மூன்று தரமாயினும், ஐந்து தரமாயினும், ஏழு தரமாயினும், ஒன்பது தரமாயினும் பண்ணல் வேண்டும். ஒருதரம், இருதரம் பண்ணுதல் குற்றம்.

13. நமஸ்காரம் பண்ணியபின் யாது செய்தல் வேண்டும்?
பிரதக்ஷ?ணம்(வலம் வருதல்) பண்ணல் வேண்டும்.

14. எப்படி பிரதக்ஷ?ணம் பன்னல் வேண்டும்?
இரண்டு கைகளையும் சிரசிலேனும் மார்பிலேனுங் குவித்து சிவநாமங்களை உச்சரித்துக்கொண்டு, கால்களை மெல்ல வைத்துப் பிரதக்ஷ?ணம் பண்ணல் வேண்டும்.

15. பிரதக்ஷ?ணம் எத்தனை தரம் பண்ணல் வேண்டும்?
மூன்று தரமாயினும், ஐந்து தரமாயினும், ஏழு தரமாயினும், ஒன்பது தரமாயினும் பண்ணல் வேண்டும்.

16. சுவாமி சந்நிதானங்களை எந்த முறையாகத் தரிசனஞ் செய்தல் வேண்டும்?
முன் விக்கினேசுரரைத் தரிசனஞ் செய்து, பின் சிவலிங்கப் பெருமானையும் உமாதேவியாரையுந் தரிசனஞ் செய்து, பின் சிவலிங்கப் பெருமானையும் உமாதேவியாரையுந் தரிசனஞ் செய்து, விபூதி வாங்கித் தரித்துக் கொண்டு, அதன் பின் சபாபதி, தக்ஷ?ணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், சுப்பிரமணியர் முதலிய மூர்த்திகளைத் தரிசனஞ் செய்தல் வேண்டும்.

17. விக்னேசுரரைத் தரிசிக்கும் பொழுது யாது செய்தல் வேண்டும்?
முட்டியாகப் பிடித்த இரண்டு கைகளினாலும் நெற்றியிலே மூன்று முறை குட்டி, வலக்காதை இடக்கையினாலும், இடக்காதை வலக்கையினாலும் பிடித்துக் கொண்டு, மூன்று முறை தாழ்ந்தெழுந்து, கும்பிடல் வேண்டும்.

18. சந்நிதானங்களிலே தரிசனம் பண்ணும் பொழுதெல்லாம் யாது செய்தல் வேண்டும்?
இரண்டு கைகளையுஞ் சிரசில் ஆயினும் மார்ப்பில் ஆயினும் குவித்துக்கொண்டு, மனங் கசித்துருகத் தோத்திரஞ் செய்தல் வேண்டும்.

19. எந்தக் காலத்தில் சுவாமி தரிசனஞ் செய்யல் ஆகாது?
அபிஷேகம், நிவேதனம் முதலியவை நடக்கும் பொழுது தரிசனஞ் செய்யல் ஆகாது.

20. அபிஷேக காலத்தில் பிரதக்ஷ?ண நமஸ்காரங்களும் பண்ணல் ஆகாதா?
அப்பொழுது உட்பிரகாரத்திலே பண்ணல் ஆகாது.

21. தரிசனம் முடிந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?
சண்டேசுரர் சந்நிதியை அடைந்து கும்பிட்டு, மூன்று முறை கை கொட்டி, சிவதரிசன பலத்தைத் தரும் பொருட்டுப் பிரார்த்தித்தல் வேண்டும்.

22. சண்டேசுர தரிசனத்தின் பின் யாது செய்தல் வேண்டும்?
சிவசந்நிதானத்தை அடைந்து, நமஸ்காரம் பண்ணி, இருந்து, ஸ்ரீபஞ்சாக்ஷரத்தில் இயன்ற உருச்செபித்துக் கொண்டு, எழுந்து, வீட்டுக்குப் போதல் வேண்டும்.

23. நித்தியமும் நியமமாக ஆலய தரிசனஞ் செய்ய இயலாதவர் யாது செய்தல் வேண்டும்?
சோமவாரம், மங்களவாரம், சுக்கிரவாரம், பிரதோஷம், பெளர்ணிமை, அமாவாசை, திருவாதிரை, கார்த்திகை, மாசப்பிறப்பு, சூரியகிரகணம், சந்திர கிரகணம், சிவராத்திரி, நவராத்திரி முதலிய புண்ணிய காலங்களிலாயினும் தரிசனஞ் செய்தல் வேண்டும்.

24. திருக்கோயிலிலே செய்யத் தகாத குற்றங்கள் யாவை?
ஆசாரம் இல்லாது போதல், கால் கழுவாது போதல், எச்சில் உமிழ்தல், மலசலங் கழித்தல், மூக்குநீர் சிந்துதல், ஆசனத்து இருத்தல், சயனித்தல், காலை நீட்டிக் கொண்டு இருத்தல், மயிர் கோதி முடித்தல், சூதாடல், பாக்கு வெற்றிலை உண்டல், சிரசிலே வஸ்திரந் தரித்துக்கொள்ளுதல், தோளிலே உத்திரீயம் இட்டுக் கொள்ளுதல், சட்டை இட்டுக் கொள்ளுதல், விக்கிரகத்தைத் தொடுதல், நிருமாலியத்தைக் (பூசித்துக் கழித்த பொருள்) கடத்தல், நிருமாலியத்தை மிதித்தல், தூபி துசத்தம்பம் பலிபீடம் விக்கிரகம் என்னும் இவைகளின் நிழலை மிதித்தல், வீண் வார்த்தை பேசல், சிரித்தல், சண்டை இடுதல் விளையாடுதல், சுவாமிக்கும் பலிபீடத்துக்குங் குறுக்கே போதல் முதலியவைகளாம்.
திருசிற்றம்பலம்

ஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்:





1. ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ – சகல யோகமும் சௌபாக்யமும் உண்டாக.
2. சுத்த பஞ்சாக்ஷரீ – மனோரத இஷ்ட காம்யார்த்த அபிலாக்ஷைகள் நிறைவேற.
3. சிவ அஷ்டாக்ஷரீ - ஸர்வ சத்ரு, மிருக, ரோக உபாதிகள் நீங்க.
4. சிவ பஞ்ச தசாக்ஷரீ – அஷ்ட ஐஸ்வர்யப் பிராப்தி அடைய.
5. சிதம்பர பஞ்சாக்ஷரீ – ஞான வைராக்யம், சிவ கடாக்ஷம் பெற.
6. குரு தாரக பஞ்சாக்ஷரீ – ஸகல ஜன வசீகரணம், ராஜாங்க வெற்றி, தேவதா ப்ரீதி உண்டாக.
7. ம்ருத்யுஞ்ஜய த்ரயக்ஷரீ – அகால, அபம்ருத்யு பயம் நீங்க, ஆயுள் விருத்தியடைய.
8. சிதம்பர சபாநடன மந்த்ரம் – அனைத்து பாப தோஷ பரிகாரம், ரக்ஷா பந்தனம்.
9. நீலகண்ட மந்த்ரம் – எதிர்பாராத கொடிய ஆபத்தினின்று மீளல், தவிர்த்துக் கொள்ள.
10. மஹா நீலகண்ட மந்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம்.
11. த்வனி மந்த்ரம் – மன சாந்தி, சந்தி, சந்துஷ்டி, சிவானந்த அநுபூதி பெற.
12. சிவ காயத்ரீ – நினைவுத்திறன், சமயோசித புத்தி, புதிய யுக்தி, வாக்சாதூர்யம் கூட.
13. மார்கதர்சீ சிவ மந்த்ரம் – பிரயாண சௌகர்யம், எவ்வித ஆபத்துகளும் விபத்துகளும் நேராதிருக்க.
14. ருணமோசன சிவ மந்த்ரம் – கடன் நீங்க, தேவ, பித்ரு ரிஷி கடன் அடைதல், பணவரவு, சேகரிப்பு அதிகரிக்க.
15. பசுபதி காயத்ரீ – ஸகல வித திருஷ்டி விலக, வழக்கில் வெற்றி, குடும்ப மகிழ்ச்சி ஏற்பட.
16. சிவ நவாக்ஷரீ - கார்யா தடைகள், தேக்கநிலை தீர்வு, நிர்வாகத் திறன் கூடுதல், புது முயற்சிகள் பலிதம்.
17. பாசுபதாஸ்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம், ஆபிசார தோஷம், செய்வினைகள் அகல.
18. ருத்ர காயத்ரீ – பாப தோஷ விமோசனம், நிரந்தர ஜயம்.
19. வித்யாப்ரத சிவமந்த்ரம் – புத்திகூர்மை, மேதா விலாஸம், சொல் வசீகரணம், ஸரஸ்வதி கடாக்ஷம் பெற.
20. உமாமஹேஸ்வர மந்த்ரம் – குடும்ப ஒற்றுமை அன்யோன்யம், மட்டற்ற மகிழ்ச்சி, குதூகலம் பெற.
21. ஆபத்துத்தாரக கௌரீவல்லப மந்த்ரம் – எல்லா ஆபத்துக்களும் தடைகளும் நீங்கி, நிரந்தர ஜயம் உண்டாக.
22. ஸர்வபாபஹர பவ மந்த்ரம் – அனைத்து பாப தோஷங்களும், அனாசார பாதிப்பும் விலகுதல்.
23. ரக்ஷாப்ரத கௌரீ சிவ மந்த்ரம் – சீரான உடல் நலம், முகப்பொலிவு, மறுமலர்ச்சி, ஆரோக்கியம் கூடுதல்.
24. ம்ருத் ஸஞ்சீவினி – அகால, அபம்ருத்யு பயம் நீங்கல், ஆயுள் விருத்தி.
25. பஞ்சதசீ சிவ மந்த்ரம் – ஸகல கார்ய சித்தி, செயற்கரிய செயல் செய்தல், வாழ்வில் ஏற்றம்.
26. சுதர்ஸன மந்த்ரம் – செய்வினை, சத்ருக்களின் தொல்லை, வியாபாரத் தடை நீங்குதல், மனச்சாந்தி அடைய.
27. லக்ஷ்மி ந்ருஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி.
28. சுதர்ஸன நரஸிம்ஹ மந்த்ரம் – எதிரிகள் தொல்லை, வழக்கு வியாஜ்யம், குடும்ப-தொழில் குழப்பங்கள் நீங்க.
29. வாஸுதேவ மந்த்ரம் – வறுமை, கிலேசம், சந்தேகம், தீவினைகள் அகன்று இம்மை மறுமை நலன்கள் கொழிக்க.
30. விஸ்வரூப மந்த்ரம் – சதுர்வித புருஷார்த்தங்கள், மனோபலம், ஜயம், அசைகள் பூர்த்தியாக.
31. கந்தர்வராஜ மந்த்ரம் – தடை நீங்கி திருமணம், குடும்ப சூழ்நிலைச் சிக்கல்கள் நிவர்த்தி, சுப கார்யங்கள் நடைபெற.
32. ஹயக்ரீவ மந்த்ரம் – புத்தியும் சக்தியும் தூண்டப்படுதல், கல்வியில் ஏற்றம், மஹாவித்வத்வம், இனிய சொல் மெய்யுணர்வு.
33. நாமத்ரயம் – அனைத்து பாப விமோசனம், சுமுக சூழ்நிலை ஏற்பட.
34. சுதர்ஸன அபரோ மந்த்ரம் – ரக்ஷா ப்ரதானம், அடிமன பயம் நீங்குதல், மனநிறைவு, நிம்மதி.
35. நரஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி, நோய் வறுமை நீங்கி ஸகல சம்பத்துகள் அடைய.
36. கருட மந்த்ரம் – விஷம், ஸர்ப்ப தோஷம், துஷ்ட மிருக பயம் விலக.
37. மஹா கருட மந்த்ரம் - அதைர்யம், பாபம், விஷக்ரஹ தோஷங்கள், துஷ்டர் பயம் ஆகியன விலக.
38. தன்வந்த்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை ஏற்பட.
39. கருட காயத்ரீ மந்த்ரம் – தாமதம் நீங்கி எண்ணிய காரியம் முடிதல், சீக்ர கார்யசித்தி பெற.
40. சுதர்ஸன காயத்ரீ மந்த்ரம் – ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ் பெற்று சௌகர்யம் ஏற்பட.
41. தன்வந்த்ரீ காயத்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை, மன்மதஸ்வரூபம் ஏற்பட.
42. வித்யா கோபால மந்த்ரம் – வித்யா பிராப்தி, நினைவாற்றல், வாக்குவன்மை, மேதா விலாசம் கூடுதல்.
43. அன்ன கோபால மந்த்ரம் – அன்னபானாதி சம்விருத்தி, தன்னிறைவு பெற.
44. சௌபாக்யலக்ஷ்மீ மந்த்ரம் – லக்ஷ்மி கடாக்ஷம், தாபத்ரய நிவர்த்தி, அஞ்ஞான நிவர்த்தி.
45. க்ஷேத்ர ப்ராப்திகர மந்த்ரம் – பூமி லாபம், குபேர சம்பத்து ஸ்திர லாபம் பெற.
46. க்ஷேத்ர ப்ராப்திகர அபேரா மந்த்ரம் – இந்த்ர பதவி, பொன் விளையும் பூமிக்கு அதிபதி, லோக பிரசித்தி, ஸ்திரத்தன்மை அடைய.
47. த்ருஷ்டி துர்கா மந்த்ரம் – ஸர்வ திருஷ்டி தோஷ பரிகாரம், முன்னேற்றம்.

சும்மா இரு

"மனம் ஒரு குரங்கு.. மனித மனம் ஒரு குரங்கு "
கண்ணதாசனின் வரிகள் பாடலாக டி.எம்.எஸ்ஸின் குரலில்  என் கணினியில் ஒலித்துக் கொண்டிருந்தது.  உண்மை தான். மனித மனம் என்றும் எப்போதும் ஒரு நிலையில் இருப்பதில்லை. எதையும் வெகு இலகுவில் நம்பிவிடுவதில்லை.  எத்தனை முயற்சித்தாலும் அது தன்னிலையில் ஒருமித்து இருப்பதில்லை. அப்படி ஒருமித்திருப்பது ஞானிகளுக்கும் யோகிகளுக்கு மட்டுமே  வாய்க்கும் போலிருக்கிறது.  இதோ இதை எழுதிக் கொண்டிருக்கும் போது கூட  பல நினைவுகள் இங்கும் அங்குமாய் அலைபாய்ந்துக் கொண்டிருக்கிறது.  


அருணகிரி நாதர், சிறுவயதிலேயே தாயை இழந்தவர். தமக்கையின் வளர்ப்பில் வளர்ந்தவர்.  போகங்களில் நாட்டம் கொண்டு தீ வழியில் சென்று தொழுநோயால் இடர்பட்டுக் கிடந்த போதும் அவரின் காமம் தணியவில்லை. ஆனால் தொழுநோய்க்காட்பவரை  எத்தனைப் பணம் கொடுத்தாலும் பரத்தையர் ஏற்கமாட்டார். இவரிடம் பணம் வேறு இல்லை. அவரின்  தமக்கையார் இவரை திருத்த  எடுத்த செயல்கள் யாவும் தோல்வியிலே முடிந்தது.  கடைசியாக  உனக்குத் தேவை பெண் தானே. நானும் பெண்தான் என்னை எடுத்துக் கொள் என்று தமக்கை அரற்றிய போது புத்தியில் தெளிவேற்பட்டது. கண்கெட்ட பின் செய்யும் சூரிய வணக்கம் போல உடல் தொழுநோயால் சிதைந்த பின் திருவண்ணாமலை மூன்றாம்  கோபுரத்தின் மேலேறி குதிக்கிறார்.


ஆனால் அவனன்றி  அணுவும் அசையாது எனும் போது இவரின் முயற்சி முருகப்  பெருமானின்  சித்தமின்றி நடைபெருமா என்ன ?  முருகா என்று கதறிக் கொண்டே விழும்  அருணகிரி நாதரை கந்தன் ஏந்தி நிற்கிறான்.  அப்போது அருணகிரியாருக்கு முருகன்  உபதேசிக்கிறான். அது என்ன என்பதை அருணைகிரியாரின் பாடல் மூலமே பார்ப்போமா ?





செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல் அற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றுமே அறிந்திலனே.


புள்ளைங்க அப்பா இல்லாட்டி அம்மாவை உரிச்சுட்டு வந்திருக்கும். இந்த முருகன் இருக்கானில்ல அப்படியே அவங்க மாமன் கிருஷ்ணனை மாதிரி. என்ன பண்ணாங்கறீங்க ? மான் வயிற்றில் பிறந்தவளான வள்ளிய களவாடிட்டான்.  அப்படி திருடும் திருடனான பெருமான் முருகனுக்கு பிறப்பு இறப்பு எதுவுமே இல்லைங்க.  அந்த  முருகன் எமக்கு  சொன்ன உபதேசம் என்ன தெரியுமா ? சும்மா இரு.. பேச்சற்றிரு. ஆனா அதற்கு பொருள்  அடியேன் அறியலையே .. என்று அருணகிரி நாதர் பாடி இருக்கிறார்.


சும்மா இருத்தல் என்றால் என்ன? செயலெதுவும் செய்யாமல் இருப்பதா ?   சும்மா இருத்தலும் சொல்லற்றிருத்தலும் நம்மில் இன்று எத்தனை சாத்தியம் ?  ஆனால் அருணகிரி நாதர் அதை சாதித்திருக்கிறார். அந்தச் சாதனைக்குப் பின் தெளிந்தவர். முழு ஞானம் அடைந்தவர். அவர் அளித்த திருப்புகழ் அத்தனைக்கும்  சாட்சியாய் நம்மிடை இருக்கிறது.


பட்டினத்தாரும் இப்படித்தான் புலம்பி இருக்கிறார்


"சும்மா இருக்கவைத்தான் சூத்திரத்தை நானறியேன்
அம்மா பொருளிதென அடைய விழுங்கினண்டி!"


தாயுமானவரும் விட்டாரா ? அவரும் "சும்மா இருக்கும் சுகம் ஒன்று அறியேன் பராபரமே" என்று புலம்பி விட்டு  பின்,சும்மா இருக்க அறிந்தால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று சொல்கிறார் கேளுங்கள்.


கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்
கரடி வெம்புலி வாயையும்
கட்டலாம் ஒரு சிங்க முதுகின் மேற் கொள்ளலாம்
கட்செவி யெடுத்தாட்டலாம்
வெந்தழலின் இரதம்வைத் தைந்துலோ கத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்
வேறொருவர் காணாமல் உலகது லாவலாம்
விண்ணவரை  யேவல் கொளலாம்
சந்ததமும் இளமையோ டிருக்கலாம் மற்றொரு
சரீரத்தி மும் புகுதலாம்
சலமேல் நடக்கலாம் கனல் மேல் இருக்கலாம்
தன்னிகரில் சித்தி பெறலாம்
சிந்தையை யடக்கியே சும்மா விருக்கிற
திறமரிது சத்தாகி யென்
சித்தமிசை குடி கொண்ட அறிவான தெய்வமே
தேசோ மயானந்தமே.


– தாயுமானவர்.




யானையை அடக்கலாம், குதிரையை அடக்கலாம், சிங்கத்தின் முதுகில் ஏறி செல்லலாம். இரசவாதம் செய்யலாம். எப்பவும் இளமையோட இருக்கலாம். தண்ணீர் மேல் நடக்கலாம்.  தீயில் நிற்கலாம்.. தன்னிகர் இல்லாத சித்தி பெறலாம். இதெல்லாம் எப்ப நடக்கும் ? சும்மா இருக்கும் திறம் அறிஞ்சா நடக்குமாம்.




உண்மையில் அலைபாயும் மனதால் எதையும் முழுமையாக சாதிக்க முடியாது.  ஒரு ஜென் கதை உண்டு.  ஜென் துறவி ஒருத்தரிடம்  சீடனாக ஒருவன் சேர விரும்பினான். ஆனால் குரு  ஒரு நிபந்தனை விதித்தார். அதாவது அங்கே இருக்கும் காலத்தில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை மட்டும் இரண்டு வார்த்தைகள் பேச அனுமதி உண்டு.   மற்ற நேரத்தில் மௌனம் மட்டுமே பயில வேண்டும் என்பதாய் அந்த நிபந்தனை இருந்தது.  சேரும் ஆர்வத்தில் அவனும் நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டு சேர்ந்து ஆறு மாதம் கழித்து அவன் பேச வேண்டிய இரண்டு வார்த்தையை குருவிடம் சென்று சொன்னான்.


" படுக்கை கரடுமுரடு " அவ்வளவு தான். மீண்டும் பாடசாலைக்கு திரும்ப அனுப்பப் பட்டான். அடுத்து ஆறு மாதம் கழித்து மீண்டும் பேச வாய்ப்பு கொடுக்கப் பட்டது. 


சீடன் சொன்னான்
" சாப்பாடு பிடிக்கல" சொல்லி  முடிந்ததும் மீண்டும் பாடசாலைக்கு திரும்பச் சென்றான். அடுத்த ஆறு மாதம் முடிந்தது குருவிடம் வேக வேகமாகச் சென்றான். இந்த தடவை அவன் பேச வேண்டிய இரண்டு வார்த்தையை வேகமாக உதிர்த்தான்


" நான் போகிறேன் "
இப்படியாக கற்கவேண்டியதை விடுத்து மாதம் முழுதும் என்ன பேசவேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்த மாணவன் என்ன கற்க முடியும் சொல்லுங்க. குரு  " போய்வா தம்பி.  நீ இங்கிருந்த காலம் முழுதும் குறை சொல்வதை மட்டுமே உன் குறிக்கோளாய் கொண்டிருந்தாய். உன்னால் இங்கே மேலும்  பயில்வது என்பது இயலாது " என்றார். 




இதைத்தான் பகவத் கீதையில் கண்ணன் அர்ஜ்ஜுனனுக்கு சொல்கிறான் யோகநிலையில் நில். யோகம் செயல்களிலே  திறமையானது என்று.  குழந்தையின் மனது நிஷ்கலங்கமற்றது.   உணவின் போது உணவு மட்டுமே அதற்கு நினைவில் இருக்கும். தூக்கத்தின் போது அலைபாயா மனமும் கொள்கிறது. அதனால் தான் குழந்தைகள்  நித்திரை என்று வரும் போது  படுத்த உடன் சட்டென்று தூங்க முடிகிறது.   பைபிளில் " நீங்கள் குழந்தைகள் போலானாலன்றி மோட்ச சாம்ராஜ்ஜியத்தை அடைய முடியாது" என்று சொல்வதும் இதைத் தான். இதயச் சுத்தி வேண்டும்.  தூய்மை இல்லா இதயத்தில் தெளிவேற்பட்டாற்போல் தெரிந்தாலும் மீண்டும்  குழம்பி விடும்.


யோகஸ்த: குரு கர்மாணி ஸங்கம் த்யக்த்வா தநம்ஜய।
ஸித்த்யஸித்த்யோ: ஸமோ பூத்வா ஸமத்வம் யோக உச்யதே॥


என்கிறான் கண்ணன். அதாவது , அர்ச்சுனா, யோகத்தில் நின்று  உன் கடமையை செய்.  வெற்றியோ தோல்வியோ அதை உன் கவனத்தில் கொள்வது வேண்டாம். மன ஒருமித்தலோடு செய்தால் அதற்குண்டான பலன் நிச்சயம் என்று அறிவுறுத்துகிறான்.


எளிய உதாரணத்தோடு  சொல்வதென்றால்  ஜென் குருவிடம் ஒருத்தர் கேட்டாராம். ஜென் என்றால் என்ன என்று. அதற்கு அவர் சொன்னார் " உண்ணும் போது உண்ணுவது, உறங்கும் போது உறங்குவது. இது தான் ஜென்" என்றார்.  யோசித்து பாருங்கள். நம்மில் எத்தனை பேர் நாம் உண்ணும் போது உணவில்  கவனமும், உறங்கும் போது வேறெதுவும் நினைவுகளின்றி உறங்கவும் செய்கிறோம்.


ஆனால் பாருங்க இந்த அடங்கா மனசு எல்லாவற்றிற்கும் ஆசைப்படும். எதிலும் திருப்தி அடையாது.  

தமிழ் கடவுள் முருகனுக்கு இரண்டு மனைவியர் ஏன்?


தமிழ் கடவுள் முருகனுக்கு இரண்டு மனைவியர் ஏன்?

ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழர் பண்பாடு. சில So called தமிழ் காவலர்கள் இதை பின்பற்றாமல் இரண்டு மூன்று என மனைவியர் வைத்துக் கொண்டாலும் பெரும்பாலான தமிழர்கள் ஒன்றே போதும்!!!! என தமிழ் பண்பாட்டைக் கட்டிக் காப்பாற்றி வருகின்றனர்.

சில பேர் என்னிடம் கேட்டதுண்டு "தமிழ் கடவுள் முருகன் என்கிறாய் ஆனால் அந்த தமிழ் கடவுளுக்கு மட்டும் ஏன் இரண்டு மனைவியர் உள்ளனர். கடவுள் ஏன் தமிழ் பண்பாட்டினை காப்பாற்றவில்லை" என முருகனைப் பற்றியும் அவர்தம் மனைவியர் பற்றியும் அறிந்து கொள்ள மானுடராகிய நமக்கு இன்னும் ஞானம் போதாது இருப்பினும் என்னால் முடிந்தவரை அவருக்கு மனைவியர் இரண்டு பேர் எதற்கு என்பதை இந்த பதிவில் சொல்லுகிறேன்.






அதை தெரிந்து கொள்வதற்கு முன்பு நாம் சுழுமுனை என்றால் என்ன என்பதினை தெரிந்து கொள்ள வேண்டும். மகான் ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் தன் கந்தகுரு கவசத்தில் சொல்வதினை பாருங்கள். 

"நடுனெற்றித்தானத்து நானுனை தியானிப்பேன்
பிரம்ம மந்திரத்தை போதித்து வந்திடுவாய்.
சுழுமுனை மார்க்கமாய் ஜோதியைக் காட்டிடுவாய்
சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா"


சுழுமுனை என்பது மானுட உடலில் உள்ள ஒரு மைய நரம்பு. நமது உடலில் இரண்டிரண்டு ஜோடிகளாக உள்ள உறுப்புகள் எவை எவை எனப் பார்த்தால் அவை புருவம், கண்கள், மூக்கின் நாசிகள், உதடுகள், மார்பகம், கைகள், சிறுநீரகம் மற்றும் கால்கள் எனச் சொல்லலாம் இவை உடலின் இடது புறமாகவும் வலது புறமாகவும் ஒரு மையத்தினைச் சுற்றி பின்னிப் பினைந்து உள்ளன. அந்த மையமே சுழுமுனை என்பது ஆகும்.


இன்னும் விரிவாக சொல்லப் போனால் நமது உடலில் இரண்டு இரண்டு ஜோடிகளாக இல்லாமல் ஒன்று மட்டும் உள்ள உறுப்புகள் எவை எனப் பார்த்தால் அவை எல்லாம் நமது உடலின் மத்தியிலேயே அமைகின்றன. இவற்றுள் தலையிலிருந்து ஆரம்பித்து பார்த்தால் மத்தியில் உள்ள ஒற்றை உறுப்புகள்

1.நெற்றி (பிரம்மந்திரா)

2.தொண்டைக் குழி (ஆங்ஞை)

3.மார்புக்குழி (விசுத்தி)

4.தொப்புள் குழி (மனிப்புரம்)

5.ஆண் /பெண் குறி (சுவாதீஸ்டன்)

6.மலக்குழி (மூலாதாரம்)


இந்த ஆறு குழிகளையும் ஒரு நேர்கோட்டால் இனைத்தால் வரும் மையக் கோடே சுழுமுனை என்பதாகும். இந்த சுழுமுனை புருவமுடிச்சிலிருந்து தலையில் விரிந்து பின் குவிந்து ஒடுங்குகிறது இந்த தலைப் பரப்பினை பெரியோர்கள் சாஹஸ்ரா எனவும் அர்ஸ் எனவும்  ழைப்பர்.மருத்துவர்களின் லோகோவான கீழுள்ள படத்தினைப் பார்த்தால் இது எளிதாக புரியும்.


முருகன் கையிலுள்ள வேலும் இந்த சுழுமுனை குறியீடே. வேலின் குவிந்த பரப்பு நமது நெற்றியையும் வேலின் கீழுள்ள தண்டானது மற்ற 6 குழிகளை இணைக்கும் சுழுமுனை கோடாகவும் உள்ளது.


மருத்துவர்களின் லோகோவில் இடது புறமாகவும் வலது புறமாகவும் சுழுமுனையைப் பின்னிப் பினைந்து செல்பவை நமது அவயங்கள். வலது புறம் இருப்பது பிங்கலை இடது புறம் இருப்பது இடகலை.

இதைத்தான் கந்தகுருகவசத்தில் ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் சொல்லுகிறார்



"இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான் 
இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நான்"


எனவே இடது புறமும் வலது புறமும் உள்ள அவயங்களை இயக்கி இயங்கச் செய்வது இந்த சுழுமுனையே சுழுமுனை தத்துவத்தினை அறிந்து கொண்டால் எல்லாம் வல்ல இறைவனையும் அறிந்திடலாம் குண்டலினி சக்தி எனச் சொல்லப் படுவதும் இந்த சுழு முனை முடிச்சான நெற்றிப் பரப்பேதான்.

ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் இறைவன் உறைகிறான். காண்பன யாவற்றிலும் இறைவன் உள்ளான்.

இதையே கந்த குரு கவசத்தில் இப்படி சொல்லுகிறார் சதானந்த சுவாமிகள்

"உள்ளொளியாய் இருந்து உன்னில் அவனாக்கிடுவான்
தன்னில் உனைக்காட்டி உன்னில் தனைக்காட்டி
எங்கும் தனைக்காட்டி எங்குமுனைக் காட்டிடுவான்"


சுழுமுனையைப் பற்றி தெரிந்து கொண்டாயிற்று இன்னும் தலைப்புக்கு வரவில்லையே என திட்ட வேண்டாம்.

ஒவ்வோரு உயிரிலும் உள்ள சுழுமுனையே முருகன்.இடகலை பிங்கலை என இடப்புறமும் வலப்புறமும் உள்ள அவயங்களே வள்ளி தெய்வானை. 

ஆக மனைவியர் என்பது ஒரு குறியீடே. ஆனால் மையத்தில் உள்ள சுழுமுனையை தியானத்தின் வாயிலாக அறிந்து கொண்டால் இந்த மனைவியர் பற்றிய குறியீடாகிய ஞானத்தினையும் அறிந்து கொள்ளலாம்.

இறுதியாக ஒன்று

கடவுள் ஒருவரே 

அவர் எவராலும் பெறப்படவும் இல்லை

அவர் எதையும் பெற்றிறுக்கவும் இல்லை.

எனவே தமிழ் கடவுள் முருகனுக்கு மனைவியர் இரண்டு என்பது

இந்த சுழுமுனையைக் குறிக்கும் ஒரு வேதாந்த ரகசியமே தவிர 
வேறொன்றும் இல்லை.