Friday 20 November 2020

உமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்

உமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன் Thiruvarutpayan of Umapathi Sivachariyar அன்பர்களே, சைவ சித்தாந்தக் கருத்துக்களை எளிதில் மக்கள் உணரும் வகையில் உமாபதி சிவம் அருளிய நூலே குறள் வெண்பாவால் இயன்ற "திருவருட்பயன்" எனும் இந்நூலாகும். சைவ பெருமக்களால் பெரிதும் பயிலப்படும் நூற்களில் இதுவும் ஒன்றாகும். இதற்கு பண்டே பல உரைகள் தோன்றியுள்ளன, இன்றும் தோன்றிக் கொண்டிருகின்றன. இங்கு மூலத்தை மாத்திரம் தருகின்றேன். பத்துப் பத்தாக மொத்தம் 100 குறள்கள். அன்பன் கி.லோகநாதன் கணபதி வணக்கம் நற்குஞ்சரக் கன்று நண்ணில் கலைஞானம் கற்குஞ் சரக்கன்று காண். 1. பதிமுது நிலை அகர உயிர்போல் அறிவாகி எங்கும் நிகரில் இறை நிற்கும் நிறைந்து. 1 தன் நிலைமை மன் உயிர்கள் சாரத் தரும்சத்தி பின்னம் இலான் எங்கள் பிரான். 2 பெருமைக்கும் நுண்மைக்கும் பேர்அருட்கும் பேற்றின் அருமைக்கும் ஒப்புஇன்மை யான். 3 ஆக்கிஎவையும் அளித்து ஆசுடன் அடங்கப் போக்கு அவன் போகாப் புகல் . 4. அருவம் உருவம் அறிஞர்க்கு அறிவாம் உருவம் உடையான் உளன். 5. பல்ஆர் உயிர் உணரும் பான்மைஎன மேல்ஒருவன் இல்லாதான் எங்கள் இறை. 6. ஆனா அறிவாய் அகலான் அடியவர்க்கு வான்நாடர் காணாத மன். 7 எங்கும் எவையும் எரி உறு நீர்போல் ஏகம் தங்கும்அவன் தானே தனி. 8. நலம்இலன் நண்ணார்க்கு நண்ணினர்க்கு நல்லன் சலம்இலன் பேர் சங்கரன். 9. உன்னும்உளது ஐயம்இலது உணர்வாய் ஓவாது மன்னுபவம் தீர்க்கும் மருந்து 10. திருவருட்பயன் -இரண்டாம் பத்து 2. உயிரவை நிலை பிறந்தநாள் மேலும் பிறக்கும்நாள் போலும் துறந்தோர் துறப்போர் தொகை. 11. திரிமலத்தார் ஒன்றுஅதனில் சென்றார்கள் அன்றி ஒருமலத்தார் ஆயும் உளர். 12 மூன்றுதிறத்து உள்ளாரும் மூலமலத்து உள்ளார்கள் தோன்றலர்தொத்து உள்ளார் துணை. 13 கண்டவற்றை நாளும் கனவில் கலங்கியிடும் திண்திறலுக்கு என்னோ செயல் . 14 பொறிஇன்றி ஒன்றும் புணராதே புந்திக்கு அறிவுஎன்ற பேர்நன்று அற. 15 ஒளியும் இருளும் உலகும் அலர்கண் தெளிவு இல்எனில் என்செய. 16 சத்துஅசத்தைச் சாராது அசத்துஅறியாது அங்கண்இவை உய்த்தல் சத்சத்தாம் உயிர். 17 இருளில் இருளாகி எல்இடத்தில் எல்லாம் பொருள்கள் இலதோ புவி. 18 ஊமக்கண் போல ஒளியும் மிக இருளே யாம்மன்கண் காணா தவை. 19 அன்றுஅளவும் ஆற்றும் உயிர் அந்தோ அருள்தெரிவது என்றுஅளவு ஒன்றுஇல்லா இடர். 20 திருவருட்பயன் - மூன்றாம் பத்து 3. இருள்மல நிலை துன்றும் பவத்துயரும் இன்பும் துணைப்பொருளும் இன்றென்பது எவ்வாறும் இல். 21 இருளானது அன்றி இலதெவையும் ஏகப் பொருளாகி நிற்கும் பொருள். 22 ஒருபொருளும் காட்டாது இருளுருவம் காட்டும் இருபொருளும் காட்டாது இது. 23 அன்றுஅளவி உள்ளளியோடு ஆவி இடைஅடங்கி இன்றளவும் நின்றது இருள். 24 பலரைப் புணர்ந்தும் இருள்பாவைக்கு உண்டென்றும் கணவற்கும் தோன்றாத கற்பு. 25 பன்மொழிகள் என்உணரும் பான்மை தெரியாத தனமை இருளார் தந்தது. 26 இருள்இன்றேல் துன்புஎன் உயிர் இயல்பேல் போக்கும் பொருள் உண்டேல் ஒன்றாகப் போம். 27 ஆசுஆதியேல் அணைவ காரணமென் முத்திநிலை பேசாது அகவும் பிணி. 28 ஒன்று மிகினும் ஒளிகவராதேல் உள்ளம் என்றும் அகலாது இருள். 29 விடிவாம் அளவும் விளக்கனைய மாயை வடிவுஆதி கன்மத்து வந்து. 30 திருவருட்பயன் - நான்காம் பத்து 4. அருளது நிலை அருளில் பெரியது அகிலத்தில் வேண்டும் பொருளில் தலைஇலது போல். 31 பெருக்க ஒளியினை பேரொளியாய் எங்கும் அருக்கனென நிற்கும் அருள். 32 ஊனறியாது என்றும் உயிர்அறியாது ஒன்றுமிவை தானறியாதார் அறிவார் தான். 33 பால்ஆழி மீன்ஆளும் பான்மைத்து அருளுயிர்கள் மால்ஆழி ஆளும் மறித்து. 34 அணுகும் துணைஅறியா ஆற்றோனில் ஐந்தும் உணர்வை உணராது உயிர். 35 தரையை அறியாது தாமே திரிவோர் புரையை உணரார் புவி. 36 மலைகெடுத்தோர் மண்கெடுத்தோர் வான்கெட்த்தோர் ஞானம் தலைகெடுத்தோர் தற்கேடர் தாம். 37 வெள்ளத்துள் நாவாற்றி எங்கும்விடிந்து இருளாம் கள்ளத் தலைவர் கடன். 38 பரப்புஅமைந்து கேண்மின்இது பாலல்கலன்மேல் பூஞை கரப்பு அருந்த நாடும் கடன். 39 இற்றைவரை இயைந்தும் ஏதும் பழக்கமிலா வெற்று உயிர்க்கு வீடு மிகை. 40 திருவருட்பயன் -ஐந்தாம் பத்து 5. அருள் உரு நிலை அறியாமை உள்நின்று அளித்ததே காணும் குறியாக நீங்காத கோ. 41 அகத்துறு நோய்க்கு உள்ளினரை அன்றிஅதனை சகத்தவரும் காண்பரோ தான். 42 அருளா வகையால் அருள்புரிய வந்த பொருள்ஆர் அறிவார் புவி. 43 பொய்இருண்ட சிந்தைப் பொறி இலார் போதமாம் மெய்இரண்டும் காணார் மிக. 44 பார்வைஎன மாக்களைமுன் பற்றிப் பிடித்தற்காம் போர்வைஎனக் காணார் புவி. 45 எமக்குஎன் எவனுக்கு எவை தெரியும் அவ்வத் தமக்குஅவனை வேண்டத் தவிர். 46 விடம்நகுலம் மேவினும் மெய்ப்பாவகனின் மீளும் கடனில்இருள் போவதுஇவன் கண். 47 அகலத் தரும் அருளை ஆக்கும் வினைநீக்கும் சகலர்க்கு வந்துஅருளும் தான். 48 ஆர்அறிவார் எல்லாம் அகன்ற நெறிஅருளும் பேர்அறிவான் வாராத பின். 49 ஞானம் இவன்ஒழிய நண்ணியிடும் நற்கல்அனல் பானு ஒழியப் படின். 50 திருவருட்பயன் - ஆறாம் பத்து 6. அறியும் நெறி நீடும் இருவினையும் நேராக நேர்ஆதல் கூடும் இறைசத்தி கொளல். 51 ஏகன் அநேகன் இருள்கருமம் மாயைஇரண்டு ஆக இவை ஆறு ஆதி இல். 52 செய்வானும் செய்வினையும் சேர்பயனும் சேர்ப்பவனும் உய்வான் உளன்என்று உணர். 53 ஊன் உயிரால் வாழும் ஒருமைத்தெ ஊனொடு உயிர் தான் உணர்வொடு ஒன்றாம் தரம். 54 தன்நிறமும் பல்நிறமும் தானாம்கல் தன்மைதரும் பொன்நிறம்போல் மன்நிறம்இப் பூ. 55 கண்தொல்லை காணும்நெறி கண் உயிர் நாப்பண்நிலை உண்டுஇல்லை அல்லது ஒளி. 56 புன்செயலி நோடு புலன்செயல்போல் நின்செயலை மன்செயலது ஆக மதி. 57 ஓராதே ஒன்றையும்உற்று உன்னாதே நீமுந்திப் பாராதே பார்த்தனைப் பார். 58 களியே மிகுபுலனாய்க் கருதி ஞான ஒளியே ஒளியாய் ஒளி. 59 கண்டபடியே கண்டு காணாமை காணாமல் கொண்டபடியே கொண்டு இரு. 60 திருவருட்பயன் -ஏழாம் பத்து 7. உயிர் விளக்கம் தூநிழல் ஆர்தற்கு ஆரும் சொல்லார் தொகும் இதுபோல் தன்அதுவாய் நிற்கும் தரம். 61 தித்திக்கும் பால்தானும் கைக்கும் திருந்திடும்நாப் பித்தத்தில் தான் தவிர்ந்த பின். 62 காண்பான் ஒளி இருளில் காட்டிடவும் தான் கண்ட வீண்பாவம் எந்நாள் விழும். 63 ஒளியும் இருளும் ஒருமைத்துப் பன்மை தெளிவு தெரியார் செயல். 64 கிடைக்கத் தகுமேநற் கேண்மையார்க்கு அல்லால் எடுத்துச் சுமப்பானை இன்று. 65 வஞ்சமுடன் ஒருவன் வைத்த நிதிகவரத் துஞ்சினனோ போயினனோ சொல். 66 தனக்குநிழல் இன்றாம் ஒளிகவரும் தம்பம் எனக்கவர நில்லாது இருள். 67 உற்கைதரும் பொற்கை உடையவர்போல் உண்மைப்பின் நிற்க அருளார் நிலை. 68 ஐம்புலனால் தாம்கண்டது என்றால் அதுவொழிய ஐம்புலன் ஆர்தாம் ஆர்அதற்கு. 69 தாமே தருபவரைத் தம்வலியினால் கருதல் ஆமே இவன்ஆர் அதற்கு. 70 திருவருட்பயன் - எட்டாம் பத்து 8. இன்புறு நிலை இன்புறுவார் துன்பார் இருளில் எழும்சுடரின் பின்புகுவார் முன்புகுவார் பின். 71 இருவர் மடந்தையருக்கு என்பயன் இன்பு உண்டாம் ஒருவன் ஒருத்தி உறின். 72 இன்பு அதனை எய்துவார்க்கு ஈயும் அவர்க்கு உருவம் இன்பகனம் ஆதலினால் இல். 73 தாடலைபோல் கூடி அவை தான் நிகழா வேற்று இன்பக் கூடலைநீ ஏகமெனக் கொள். 74 ஒன்றாலும் ஒன்றாது இரண்டாலும் ஓசைஎழாது என்றாலும் ஓர் இரண்டும் இல். 75 உற்றாரும் பெற்றாரும் ஓவாது உரைஒழியப் பற்றாரும் அற்றார் பவம். 76 பேய் ஒன்றும் தன்மை பிறக்கும் அளவும் இனி நீ ஒன்றும் செய்யாது நில். 77 ஒண்பொருட்கண் உற்றார்க்கு உறுபயனே அல்லாது கண்படுப்பார் கைப்பொருள்போல் காண். 78 மூன்றாய தன்மை அவர் தம்மில் மிக முயங்கித் தோன்றாத இன்பம் அது என் சொல். 79 இன்பில் இனிது என்றல் இன்று உண்டேல் இன்று உண்டாம் அன்பு நிலையே அது. 80 திருவருட்பயன் - ஒன்பதாம் பத்து 9. ஐந்தெழுத்து அருள் நிலை அருள்நூலும் ஆரணமும் அல்லாதும் ஐந்தின் பொருள்நூல் தெரியப் புகின். 81 இறைசத்தி பாசம் எழில்மாயை ஆவி உறநிற்கும் ஓங்காரத்து உள். 82 ஊன நடனம் ஒருபால் ஒருபாலாம் ஞானநடம் தான்நடுவே நாடு. 83 விரியமந மேவியவ்வை மீளவிடா சித்தம் பெரியவினை தீரில் பெறும். 84 மால்ஆர் திரோதம் மலம்முதலாய் மாறுமோ மேலாகி மீளா விடின். 85 ஆராதி ஆதாரம் அந்தோ அதுமீண்டு பாராதுமேல் ஓதும் பற்று. 86 சிவமுதலே ஆம்ஆறு சேருமேல் தீரும் பவம் இதுநீ ஓதும் படி. 87 வாசி அருளியவை வாழ்விக்கும் மற்று அதுவே ஆசுஇல் உருவமும் ஆம் அங்கு. 88 ஆசில்நவா நாப்பண் அடையாது அருளினால் வாசி இடை நிற்கை வழக்கு. 89 எல்லா வகையும் இயம்பும் இவன் அகன்று நில்லா வகையை நினைந்து. 90 திருவருட் பயன் - பத்தாம் பத்து 10. அணைந்தோர் தன்மை ஓங்கு உணர்வின் உள்அடங்கி உள்ளத்துள் இன்புஒடுங்கத் தூங்குவர்மற்று ஏது உண்டு சொல். 91 ஐந்தொழிலும் காரணர்களாம் தொழிலும் போகம்நுகர் வெந்தொழிலும் மேவார் மிக. 92 எல்லாம் அறியும் அறிவுஉறினும் ஈங்குஇவர்ஒன்று அல்லாது அறியார் அற. 93 புலன் அடக்கித் தம்முதல்கண் புக்குறுவார் போதார் தலம்நடக்கும் ஆமை தக. 94 அவனைஅகன்று எங்குஇன்றாம் ஆங்குஅவனாம் எங்கும் இவனைஒழிந்து உண்டாதல் இல். 95 உள்ளும் புறம்பும் ஒருதன்மைக் காட்சியருக்கு எள்ளும் திறம் ஏதும் இல். 96 உறும்தொழிற்குத் தக்க பயன் உலகம் தத்தம் வறும்தொழிற்கு வாய்மை பயன். 97 ஏன்ற வினைஉடலொடு ஏகுமிடை ஏறும்வினை தோன்றில் அருளே சுடும். 98 மும்மை தரும்வினைகள் மூளாவாம் மூதுஅறிவார்க்கு அம்மையும் இம்மையே ஆம். 99 கள்ளத்தலைவர் துயர்கருதித் தம்கருணை வெள்ளத்து அலைவர் மிக. 100 - திருவருட்பயன் முற்றிற்று -

சோணாசல வெண்பா

சோணாசல வெண்பா(சோணாசல முதலியார் ) காப்பு வாணாளை வீணாளா வையகத்திற் போக்காமற் சோணாசல வெண்பாச் சொல்லுதற்கு - நாணாளு மீங்கழுநீ ரானைநினை யேக்கமறக் காக்குமுக்கட செங்கழுநீ ரானைநினைந் தோது . நூல் ஓங்காரப் பீடத் துறையும் பிரானினனைப் பாங்காரக் காணப் பணித்திடா - யாங்கார வெம்பிரமா நற்றிருமான் மெய்யதுமாறித் தொடாமா சம்பிரமா சோணா சலா (1) கங்கைச் சடையுங் கருணைத் திருமுகமு மங்கை மழுமாணு மரைக்கசைத்த - பொங்கரவுஞ் செந்நாளு மெந்நாளுஞ் சேவிக்க மேன்மேலுந் தந்தாளுஞ் சோணா சலா (2) எற்றைநாண் மாதுமையோ டென்முன் வருவாயோ வற்றைநா ணல்லநா ளானநாண - மற்றைநாள் கன்மநாள் வீணாள் கரிநா னிருட்டுநாள் சன்மநாள் சோணா சலா (3) தீவாய்ப் படநாகத் தீண்டினாலுந் துயர்கூர்ந் தாவாவென் றேங்கியழுங் காம - னாவால் விடாதார வென்பார்க்கு வெய்யவிட முண்டோ சடாதரா சோணா சலா (4) கோயில்வலஞ் செய்யேன் கும்பிட னின்றுருகேன் வாயிலெழுத் தஞ்சும் வழுத்துகிலே - னாயிற் கடையாளாப் பேய்போற் கவல்கின்றேன் கங்கைச் சடையாளா சோணா சலா (5) மாதேவா சங்கரா மைக்கண்டா முக்கண்ணா கோதேது மில்லாக் குணாகரா - பூதேசா வோம்பவா வோம்பவா வுள்ளவா வுள்ளவா சாம்பவா சோணா சலா (6) மெய்ந்நூலை விட்டுவிட்டு வேறுவே றுள்ளபல பொய்ந்நூலைக் கற்றுப்பு லம்புகின்றா - ரென்னோர்க்கும் பொல்லாவா தைக்குளிர்க்குப் போர்வைவுயா கம்பலமா சல்லவா சோணா சலா (7) பிறையிட்ட பொற்சடையெம் பெம்மானே நின்றா ணிறையிட்ட வன்பா நினைந்து - முறையிட்டுங் கேளாது போலிருந்தாற் கெட்டேனி னிக்கணமுந் தாளாது சோணா சலா (8) வேதாகமந் தெரிந்த மேலோ ருடன்கலந்து மாதாகமான் புன்றகாண மாண்பினுளப் - போதாகச் சத்துவா னந்த சகசநிட்டை தந்தருளாய் தத்துவா சோணா சலா (9) மண்ணேறு பல்வகையா மன்பதைக ளத்தனையுங் கண்ணேறு நீங்கிக் களிப்பதற்கோ - புண்ணேறு சிந்தனையே னென்னையுமோர் சீவனென விவ்வுலகிற் றந்தனையே சோணா சலா (10) தண்டா மறையிலைமேற் றண்ணீரா வென்றனுள மண்டாத் துயரா வலைகின்ற - கண்டாய் சிலையெழுத்தா வோர்மொழியுஞ் செப்பகிலா யீதென் றலையெழுத்தா சோணா சலா (11) பேயுடனே நட்டம் பிரியமுடன் செய்பவனிச் சேயுடனே சேராதென் செப்புவா - யாயுலக மாமகண்டா வேதண்டா வண்டரண்டர் வால்முண்ட சாமகண்டா சோணா சலா (12) மாயாம லம்புணர்ந்து மாதவமாஞ் சைவநெறித் தோயாம லம்புவியிற் சோர்கின்றேன் - றாயாகி வேண்டவர் வின்படியே மெய்ஞ்ஞானப் பால்கொடுப்பாய தாண்டவர் சோணா சலா (13) துன்பக் கடல்வீழ்ந்த தொண்டனேன் றன்னைநீ யின்பக் கடலாட்ட வெண்ணினா - லன்பா தடுப்பாரோ வைராரோ கம்மியிவ னென்று தடுப்பாரோ சோணா சலா (14) தெய்வமுண் டென்றோவேளை தெய்வமின் றென்றோர்வேளை மைவளருந் துட்டமன மிருந்தா - லுய்வதெவன் ஈசனானென் றானூர்ந் தீண்டவர் வாணடானீ தாசனான் சோணா சலா (15) எத்தனைதான் கற்றென்ன வெத்தனைதான் கேட்டென்ன வத்தனையு மற்றோர்க் கவர்ந்தென்ன - சித்தந் தராசனார்க் கல்லாலுன் றாளுண்டோ மேருச சராசனா சோணா சலா (16) அன்புவளா தொண்டருள மாலயமா வெப்பொழுதுந் தென்புவளர் தேவியுடன் சேர்ந்துவளர் - நின்புகழைப் பாடுவேன் பந்தவினைப் பாசத்தை வேரறவே சாடுவேன் சோணா சலா (17) கருநிறத்த காகங் கனகமலை சார்ந்தாற் றிருநிறத்த வாகுஞ் செயல்போ - லிருநிறத்த வாகாரநா னுனைச்சார்ந் தன்பனாவேன் கருணா சாகரா சோணா சலா (18) வன்பா தகஞ்செய்யும் வஞ்சர்தமைச் சேராம னின்பா தகஞ்ச நினைத்துவா - ழன்பா நிதானந்தா மந்தாகினிக் குவந்தா யெந்தாய சதானந்தா சோணா சலா (19) மான்செய்த கண்ணியொடும் வால்வடி வேலனொடும் வான்செய்த காட்சி வழங்கென்றால் - யான்செய்த கன்மமா வந்துமுகங் காட்டகிலா யீதுனக்குத் தன்மமா சோணா சலா (20) வெய்யபிறப் பீனுமுயர் வித்தாகு மாசையென வுய்யநல்லோர் சொற்றறி நெறியோராயன் - மையலிலே யாழ்கின்றே னின்சீரரு ளெள்ளளவுமின்றித் தாழ்கின்றேன் சோணா சலா (21) முற்றா விளஞ்சேய்க்கு மூண்டநோய்க் காமருந்து பெற்றா ளருந்துகின்ற பெற்றிபோற் - சிற்றம் பலசதுவந்த மன்பதைக் காப்பார நடஞ்செய்தித் தலத்துவந்த சோணா சலா (22) ஆட்டுகின்றா யாடுகின்றா யாடலையுங் காண்கின்றாய் கூட்டுகின்றாய் கூடுகின்றாய் கொள்கைபல - நாட்டுகின்றாய் ஞாலமெலா மிவ்வகையே நானறியே னின்னுடைய சாலமெலாஞ் சோணா சலா (23) என்னைப்போ லேழையிலை யெவ்வெவ் வுலகத்து நின்னைப்போல் வள்ளலிலை நிச்சயமே - பின்னையே யென்றொழிலே யாசித்த தில்லையெனா தீவதுநின் றன்றொழிலே சோணா சலா (24) நறும்பூவுடன் சேர்ந்த நாருமண மெய்து மிறும்பூ தன்றைய வெளியேன் - பெறும்பே றதுவே தானாக வடியருடன் சேர்வேன் சதுவேதா சோணா சலா (25) பத்தருக்குஞ் சித்தருக்கும் பண்ணவர்க்கும் விண்ணவர்க்கு முத்தருக்கு மற்றவர்க்கு மூவரெனுங் - கத்தருக்கு நற்றுரையாய் வாழ்கின்றாய் நாயேற்கு நாயகனா சற்றுரையாய் சோணா சலா (26) வணங்காத் தலையும் வழுத்தாத நாவு மிணங்கா மனமு மெனக்கே - யணங்கா மிகுதியா வின்னம விளம்புவதே னந்தோ தகுதியா சோணா சலா (27) என்னேநீ ராடப்போ யெண்ணமறந் தொருவன் பின்னேசே றாடுகின்ற பெற்றிபோற் - கொன்னேவெங் கன்மத்தைச் செய்து கழிக்கின்றே னல்லநர சன்மத்தைச் சோணா சலா (28) அண்ணா மலையென்று மண்டமெலாம் பெற்றெடுத்த வுண்ணா முலையென்று முள்ளத்தே - யெண்ணாத நாளில்லை நாயேற்கு னற்றாள லாதடையுந் தாளில்லை சோணா சலா (29) இலவுதனைக் காத்தே யிருக்குங் கிளிபோற் குலவுகுடும் பத்தையே கோரி - விலகினேன் மாதுரியா னந்தசுகம் வாய்க்குமோ வேழைக்குச் சாதுரியா சோணா சலா (30) நாட்டைவிட்டுக் காட்டையுற்று நற்கனிதேரோர் சிறுவன் வேட்டையிற்றப் புங்கொடிய வேங்கைகண்டு - கோட்டை யரண்புகுந்தே யுய்ந்ததென யானுய்ய நின்பூஞ் சரண்புகுந்தேன் சோணா சலா (31) வானே முகவட்ட மாமூர்த்தி யாவிளங்கும் கோனே நினதுபதங் கூடாமல் - யானே தனித்தேனோ விளங்குத் தளரலிதற கென்றே சனித்தேனோ சோணா சலா (32) தேவாரந் தன்னைச் சிரத்தையா நாயடியே னாவாரப் பயந்து விழிக - கோவாரக கன்னிகரு முள்ளங் களித்துருகும் வாழ்வருளாய தன்னிகருஞ் சோணா சலா (33) ஞாயிறு திங்கண யனஞ்செவ் வாயுமைமெய் மேயபுத னின்மெய் வியாழமுறை - வாய தனியா மோர்வெற் புதழை வெள்ளியற்குச் சனியாமோ சோணா சலா (34) பெண்ணாசை யாதியாப் பேசுகின்ற மூவாசை யெண்ணாசை வையகத்தி லேறகாதோ - அண்ணா மலையானே கொண்டவர் யார்மற் றாசைதம்மிற் றலையானே சோணா சலா (35) ஓர்தனிரு தாண்முமல மோவுறவே நாற்கரணஞ் சேர்தரவஞ் சக்கரமுஞ் சிந்தித்தா - றார்பொழுது மேழுவேதத் திசையி னேத்தரு ளெட்டங்கமுறத் தாழுவேள் சோணா சலா (36) காலத்தே சென்றுசிவ கங்கையிலே நீராடிப் பாலத்தே நீற்றைப் பரிந்தணிந்து - மூலமர மந்திரமே யோதிநினை மன்னிவலஞ் செய்வதுய்யுந் தந்திரமே சோணா சலா (37) நின்னைச் சதமா நினைக்குஞ் சிறியேற்கும் பின்னை வுறுமைப் பிணியுண்டோ - பொன்னைச் சதாசிவா வென்றழைக்குந் தோகைபுணர் சாம்ப சதாசிவா சோணா சலா (38) உடல்பொரு ளோடாவி யுனக்கே யளித்தேன் கடலுகங் காணவெனைக் காவர் - தடலுடனே யிங்கடத்தை நீபுரிந்தா லேவாபாற கூறுவனென சங்கடத்தைச் சோணா சலா (39) தன்னிகரில் சோண சயிலனே யென்பாச சொன்னிகழ் பாமாலையன்று சூட்டினருக - கிந்நிலத்தின் முன்மானன் றெட்டரிய முண்டகத்தா ளன்றியுண்டோ சன்மானஞ் சோணா சலா (40) வாக்கின் வருகவென்றால் வாய்நோமோ தாழ்ந்தேனைத் தூக்கின் மலர்க்கை துவளுமோ - நோக்கின் வலிக்குமோ நின்கடைக்கண் வள்ளலுக்கு முள்ளஞ் சலிக்குமோ சோணா சலா (41) நன்னெஞ்சு கடனுன்ற னாணமலர்த்தாள் பூசியே னென்னெஞ் சதல்லா யிருப்பதா - னின்னெஞ்சுங் கல்லாபார் மேலென்னைக் காவாதென் காரணமோ சல்லாபா சோணா சலா (42) தஞ்சமென நின்கமலத் தாளடைந்து நானிருக்க வஞ்சநம னென்பால் வருவானோ - நஞ்சமிக்க பொங்கரா வேணிப்புனி தர்மார்க் கண்டனையாக சங்கரா சோணா சலா (43) கரங்குவித்து மெய்சிலிர்த்துக் கண்ணீ ருதிர்த்துச் சிரங்குவித்துத் தெண்டனிட்டுத் தேம்பி - யிரங்குணர்க்கு வந்திடுவாய் கேட்ட வரந்தருவாய் நாயேற்கென் தந்திடுவாய் சோணா சலா (44) ஒருவனொ ருத்தியுட னோகை பெறக்கூடும் யருவம் பனித்துளிபோற பாய்ந்து - கருவுற் றுருவஞ்சார்ந் துறபவித் திங்கோடி யுழலாதான் சருவஞ்சா சோணா சலா (45) வன்பிறவி நோய்க்கு மருந்தா விருந்தடியார் துன்பிறவி ழிக்குநினைச் சூழ்ந்தவருக் - கென்பிறசீர் சிற்பரா வம்பலத்திற் றெய்வநடஞ் செய்தருளுந் தற்பரா சோணா சலா (46) ஓரூரென் றில்லாம லோடெடுத்துப் பிச்சைக்கா வூரூராச் சுற்றி யலைகின்றாய் - பேரூரி லேற்றுவாயென் றுன்னை யெப்படி யானம்புவது சாற்றுவாய் சோணா சலா (47) அன்பார வுன்ற னடிக்கமலம் பூசித்த லென்பார மென்னை பிரசித்த - லுன்பாரங் காரணாதீதா கருணாகரா மழுமான தாரணா சோணா சலா (48) பந்தக்கா னென்னப் பருத்தவுடல் சுமப்பே னந்தக்காலன் வெருண்டெ னாவிகொள - வந்தக்கா லஞ்சிலிப் பேனீவந் தருளாயே லென்செய்வேன் சஞ்சலிப்பேன் சோணா சலா (49) ஒருமணத்தை நீக்கி யுயர்நா வலூரர்க் கிருமணத்தைச் செய்தாண்ட தென்னீ - வருமணத்தோர் மாட்சியோ வெண்பாரேல் மங்கையுமை கங்கையிவர் சாட்சியோ சோணா சலா (50) ஞாதுரு மெய்ஞ்ஞான நவிலரிய நேயமென வோதுருமம் முப்புருளி னுண்மைதனைப் - பேதுறுவேன் றேர்வேனோ தேர்ந்துன் றிருவாளர் தஞ்சபையிற் சார்வேனோ சோணா சலா (51) ஞானமிட லோடருந்து நாரணனே யாதியரிக் காலமிடர் தீர்த்தெம்மைக் காத்தியென - வோலமிட கஞ்சுமுண்டா வுன்னைவிட நாயேற்கு லகிலொரு தஞ்சமுண்டா சோணா சலா (52) அபய கரமு மருள்சேர் முகமு முபய பதமு முமையா - ளிபமுகன்சேய் நண்ணவா மால்விடைமே னாயேன் சரணுனக்கே தண்ணவா சோணா சலா (53) அன்பே திரியா வருளே நெய்யாமிக நன்போக மகலா நாணாளு - முன்பேமெய்ஞ் ஞானமாந் தீபமிட்டு நண்பொடுவாழ் வாழ்வருளசீர்த் தானமாஞ் சோணா சலா (54) மணமென்று கூறியதோர் வாயாலே மற்றும் பிணமென்று கூறுகின்றார் பின்பு - குணமென்ற வெம்மதியே னானானுமெய் யினைமெய்யென் றணுவுஞ் சம்மதியேன் சோணா சலா (55) மாசகன்ற வாதவூர் வள்ளல் வழங்குமணி வாசகமே மாமறைக்கு மாண்பென்றே - பேசுவே னங்கை யானீயெழுது மன்பேபெருஞ் சான்றாஞ் சங்கையா சோணா சலா (56) இரந்தும் பரிந்தே யிடுவென்று நீதி கரந்துவிடா திருக்கக் கச்சூர்ப் - பொருந்தி யுணவா தரித்து நம்பியுண்ண வளித்தாய்சீர் தணவாத சோணா சலா (57) பாலையளித் தாய்காழிப் பாலனா ரின்புறவே சூலையளித் தாயப்பர் துன்புறவே - யேலவிவை நன்மையோ வாயுண் முறைகாமத்தி னால்விளைந்த தன்மையோ சோணா சலா (58) கற்பனையெ லாங்கடந்த காரணா தீதசுக தற்பரனே நின்றாள் சரண்புகுந்தே - னற்பனெனக் கொள்ளாதே குற்றங் குறியாதே யன்னியமாக தள்ளாதே சோணா சலா (59) பூசேன் விபூதிதனைப் பூணேன் சிவமணியைப் பேசேன் பஞ்சாக்கரத்தைப் பேதமையை - வீசேன் வலவனே போற்றிரிவேன் வாழ்வேனோ வேணிச் சலவனே சோணா சலா (60) அளவை கடந்த வருளொளி யேநின்பே ரருளை யணுவு முணரேன் - களவகன்றோர் தந்நிதியே மெய்ஞ்ஞான தாண்டவா வானந்த சந்நிதியே சோணா சலா (61) தொண்டர்களு மாதலருந் தூயசிவ காமியுநல் லண்டர்களுங் காணமன்று ளாடுகின்றாய் - பண்டிருவர் காணோ மேயென்று கருதுங் கமலப்பூந் தாணோமே சோணா சலா (62) ஆணிலே பெண்ணிலே யல்லா வுயிர்களிலே வீணிலே யென்போல் விழைவர்யார் - வேணி வியாளனே பொல்லா வினையேனைக் காப்பாய் தயாளனே சோணா சலா (63) தொல்லை வறுமையினாற் சோர்ந்தாலு மென்மேனி யில்லையெனும் லோபிகளை யாசியேன் - றில்லையிலே வேம்பசிவ தைக்கழுஞ் சேய்வேண்டும் பாலாழிதந்த சாம்பசிவா சோணா சலா (64) கருணைபுரிந் தென்னைநீ காத்தியே லென்ன யருணையடைந் ததுண்டோ வன்பாத - தருணமல ரிண்டையுண்டோ தொண்டுண்டோ வென்னுண்டென் றனபாசெய்யுஞ் சண்டையுண்டோ சோணா சலா (65) திட்டுண்டு வெண்ணெய்த் திருடியுண்டு மாதராற் கட்டுண் டடியுண்டான கண்ணனே - பிட்டுண்டு வாழ்வெவர்க்கு நல்கவே மாறனடி யுண்டாயநீ தாழ்வெவர்க்குச் சோணா சலா (66) தாயுமிலை தந்தையிலை தான்றனிய னானாயநீ சேயுமிலை சேய்களுக்குத் தோந்திதனை - யாயுங்கால் வர்க்கமிலை முன்பின மரபிலைநீ வத்துவென்னத் தர்க்கமிலை சோணா சலா (67) நண்ணியவெற் போவெள்ளி நற்சிலையும் பொற்சிலையாம் புண்ணியமா தேவியன்ன பூரணியே - யுண்மையிவை நம்புமேனன்று பத்தூர் நாடியிரந் துண்டகதை சம்புவே சோணா சலா (68) விளைவான் மலிந்திடு நெல்வேலி யுனக்குண்ட விளையான் குடிமாற னின்பா - முளையதனை வாரிவருங் காலை மறுக்காயோ மால்விடைமேற் சாரிவருஞ் சோணா சலா (69) அண்ணா மலையானா யப்பநீ தாயுமையு முண்ணா முலையா னாளுண்மைசொல - வொண்ணாதா மிக்கதோ நல்லோர் வியந்து துதிசெய்யத் தக்கதோ சோணா சலா (70) சூதாடப் பொய்பேசத் தூயோரை நிந்திக்க வாதாட வஞ்சிக்க வல்லவன்யான் - வேதாவின் றோதகமோ நின்றாடு திக்கறியே னென்னுடைய சாதகமோ சோணா சலா (71) குகைநமசி வாயர் குருநமசி வாயர் தகையுறு வெண்பா மாலைசாத்திப் - புகழடைந்தா ரேத்துகின்றே னுள்ளபடி யில்லையவா போலச் சாத்துகின்றேன் சோணா சலா (72) நந்தவனம் புக்கு நறுமா மலரெடுத்துச் சந்தரப்பன் மாலைதொடுத் தணிந்தே - யெந்தை யருணேசா வென்பாரை யாபத்திற் காக்குந் தருணேசா சோணா சலா (73) முயலகன் மேல்வைக்கா முளரித் தாளிந்த மயலகன் மேல்வைத்து மகிழலா - வியல்சேர் பரதமே செய்க பகனுனக்கு முண்டு சரதமே சோணா சலா (74) பூவடிவம் வெற்பரையன் புத்திரிக்குத் தீண்டரிய தீவடிவ நின்றனக்கேற் சீர்க்கச்சி - மாவலக்கீழ்த் தந்தேகம் வாடாமற் றான்வளைத்தா ணீயிளைத்தால் சந்தேகஞ் சோணா சலா (75) நன்மார்க்க நான்மார்க்க நண்ணுஞ் சரியையுறு முன்மார்க்க மேனு முயலாத - வென்மார்க்கந் துன்மார்க்க மாதலினாற் சூழ்வதெங்கே மேலான சன்மார்க்கஞ் சோணா சலா (76) பல்லாயிரந் தரமாப் பாலன்குறை யெல்லாஞ் சொல்லா திருக்கவிலை சொல்லியுமென் - பொல்லாத புத்தியின் றோடத்தாற் பொருத்தமின்றோ வாண்டருளிச் சத்தியின்றோ சோணா சலா (77) ஆடரங்கா வன்பர்மன மானந்தக் கூத்துகந்தாய கோடரங்கா ணென்றன் கொடியமன - நீடரங்க மண்டிப்பாய்வேக மடங்கவெங்கு மோடுவதைத் தண்டிப்பாய் சோணா சலா (78) மழைகுளிர்வெங் காற்றுருமு வல்லடிதீ வெய்யில் குழைபசிநோய் கள்ளர் கொடுங்கோல் - விழைகூற்றாற் றீங்குவா ராதுவலஞ் செய்வாரை நீயிருந்து தாங்குவாய் சோணா சலா (79) பூமாலை கையும் புனன்மாலை நேத்திரமும் பாமாலை நாவும் பரிந்தணியுந் - தாமே நெடுமாலைத் தேடவைத்த நீயெனைச்சேர் பார்கூய்த் தடுமாலைச் சோணா சலா (80) முற்காசி மன்னன் முகத்தைக் குரங்காக்கிப் பிற்காசி கந்தவருள் பெய்தனையே - யெற்காசி யப்படியேன் றண்டித் தருள்புரியா யந்தோயான் றப்படியேன் சோணா சலா (81) தென்பாகத் தேவியுடன் சேர்ந்துசிறுத் தொண்டரிட்ட வன்பாங் கறியை யருந்தற்கே - யின்பாப்போய்ச் சீராளா வென்றழையுஞ் சேயையெனத் தந்தளித்த தாராளா சோணா சலா (82) ஆக்குவாய் காப்பா யழிப்பாய் மறைப்பாய்பின் னோக்குவா யாவு நொடிப்போதே - தாக்கு மிமியேற்கு நேரந்தா னெத்தனையோ கற்பந் தமியேற்குச் சோணா சலா (83) தாயிலாச் சேய்போற் றவிக்கின்றே னென்றுரைத்தா லாயிலா னானென்ற றைவையென - வாயிலா வூமனே யொத்தியா னொன்றுமுரை யேனிதழித் தாமனே சோணா சலா (84) அனங்காணா னஞ்சுண்டா னம்மை வினையாற் புனையுடம்பும் பாதியாய்ப் போனான் - றினமுந்தா னேமாந்த மானிடனென் றெள்ளாம லேத்துவதென் றாமாந்தர் சோணா சலா (85) சங்கரியத் தங்கொளலாற் சக்கரமான் மன்னுதலால் வெங்கரி பயந்தவணன் மேவலா - லிங்கரிது நிற்குருவே யென்னுருவே நீமுழுதுங் கொண்டுறைவாய் சற்குருவே சோணா சலா (86) மோன முடிவே மொழியவரு மானந்த ஞான வடிவேநின் னலமுழுதுந் - தீன னியம்புவே னெவ்வா றினியவருள் செய்யாய் சயம்புவே சோணா சலா (87) முத்தே மணியே முழுவயிரப் பொற்றூணே சித்தே யெமதுகுல தெய்வமே - சுத்தகுண மேருவே நற்கருணை மேகமே வந்தடைந்தேன் றாருவே சோணா சலா (88) சோதிக்க லாமா தொழும்பனேன் றன்னைமிக்க வாதிக்க லாமா மணியரவம் - பாதிக் கலாமதிகஞ் சேரவைத்த காரணநின் றாட்குச் சலாமதிகஞ் சோணா சலா (89) அண்டாண்ட கோடி யருளா லளித்தடிமை கொண்டாண்ட சோதிக் குருமணிநீ - கண்டாய் சமுகனே யாகவெனைத் தொண்டுகொள் வாயன்பர் சமுகனே சோணா சலா (90) திருவல கிட்டுத் திருமெழுக்கு மிட்டு மருவுதிருக் கோலமிட்டு வாழ்த்திப் - பெருகுதளி கம்பத்தே கத்துடனே கைகூப்பிச் சூழ்வதுநற் சம்பத்தே சோணா சலா (91) உருவா யருவா யுருவருவாய் நின்ற வொருவா வுபதேச மோதக் - குருவாய் வரவேண்டு முன்றன் மலர்ச்சரணத் தன்பு தரவேண்டுஞ் சோணா சலா (92) ஆரூரு மம்பலமு மானந்த கானமெனும் பேரூரங் கட்டமெனப் பேணுகிலேன் - சீரூர் நித்தியமே நின்னூர் நினைக்கின்றேன் முத்திபெறச் சத்தியமே சோணா சலா (93) பாரறியா விண்ணறியா பாதாளந் தானறியா யாரறிவா ருன்றனருஞ் சீர்த்தி - யோரணுவும் யானறியாத் தன்மையதே யெம்பெருமா னின்னமுநீ தானறியாய் சோணா சலா (94) கார்த்திகைக்குக் கார்த்திகைநாட் காட்சிபெறக் காட்டுகின்ற சீர்த்திவளர் மெய்ஞ்ஞான தீபத்தை - யேத்தி மதுரநேயத் தமிழால் வாழ்த்த வரந்தாராய் சதுரனே சோணா சலா (95) வானே முதலட்ட மாமூர்த்தி யாயமர்ந்த யேனே வுலகுய்ய வெண்ணியோ - வானே றதிபதியே ஞான வருணிதியே சீலச் சதிபதியே சோணா சலா (96) சம்புவே யென்றுனது தாணினைக்க வொட்டாம லைப்புலத்தார்கூடி யலைக்கின்ற - வெம்பிறவி வெந்தோடநீங்கு விபவமருள் வாய்மிகவுஞ் சந்தோடஞ் சோணா சலா (97) சோதனை செய்யாதே சுயவடிவா வந்தென்னை யாதரிப்பாய் காட்டி லருச்சுனனின் - பாதமலர் நாடினான் வேடுவனா நண்ணினாய் வில்லாலே சாடினான் சோணா சலா (98) வெள்ளையா வின்னும் விளம்புவதென் மென்கனிதேர் கிள்ளைமொழி போலிதனைக் கேட்டருள்க - பிள்ளைநான் மாதாநீ தொண்டனான் வணபதிநீ யேழைநான் தாதாநீ சோணா சலா (99) அருணாசலா வென்றே யன்புடனே போற்றி யிருணாச மெய்த்தீப மிட்டோர் - பெருவாழ்வைச் சிந்தையே செய்தளவு தோந்துரைக்க வொண்ணாதென் றந்தையே சோணா சலா (100) சோணாசல வெண்பா முற்றிற்று,

இருபாஃ இருபது(ஆசிரியர் : அருணந்தி சிவாசாரியார்)

சைவ சித்தாந்த சாத்திரங்கள் - I : இருபாஃ இருபது (ஆசிரியர் : அருணந்தி சிவாசாரியார்) அன்பர்களே, மெய்கண்ட சாத்திரங்கள் 14-இல் தலை சிறந்தது மெய்கண்டாரின் சிவஞானபோதமாகும். தமிழ் தத்துவச் சிந்தனையின் சிகரமாய் தமிழர்களுக்கே பெருமை சேர்க்கும் ஆழத்தை கொண்டுள்ளதாகத் திகழ்கின்றது. அதற்கு அடுத்தபடியாக எண்ணத் தருவது இருபா இருபது என்னும் சிறிய நூலாகும். மெய்கண்டார் மேற்பார்வையில் எழுந்தனவாக அருணந்தியின் சிவஞானசித்தியாரும் இந்நூலும் மனவாசகங் கடந்தாரின் "உண்மை விளக்கம்" எனும் நூலும் ஆகும். அன்பன் கி.லோகநாதன் 1. கண்நுதலும் கண்டக் கறையும் கரந்துஅருளி மண்ணிடையில் மாக்கள் மலம் அகற்றும் -- வெண்ணெய் நல்லூர் மெய்கண்டான் என்று ஒருகால் மேவுவரால் வேறு இன்மை கைகண்டார் உள்ளத்துக் கண் 2. கண் அகல் ஞாலத்துக் கதிரவன் தான் என வெண்ணெய்த் தோன்றிய மெய்கண்ட தேவ! காரா கிரகக் கலி ஆழ்வேனை நின் பேரா இன்பத்து இருத்திய பெரும! வினவல் ஆனாது உடையேன் எனது உளம் நீங்கா நிலை ஊங்கும் உளையால் அறிவின்மை மலம் பிரிவு இன்மை எனின் ஓராலினை உணர்த்தும் விராய் நின்றனையேல் திப்பியம் அந்தோ பொய்ப்பகை ஆகாய் சுத்தன் அமலன் சோதி நாயகன் முத்தன் பரம்பரன் எனும் பெயர் முடியா வேறுநின்று உணர்த்தின் வியாபகம் இன்றாய்ப் வேறும் இன்றாகும் எமக்கு எம் பெரும! இருநிலம் தீநீர் இயமானன் கால் எனும் பெருநிலைத் தாண்டவம் பெருமாற்கு இலாதலின் வேறோ உடனோ விளம்பல் வேண்டும் சீறி அருளல் சிறுமை உடைத்தால். அறியாது கூறினை அபக்குவ பக்குவக் குறிபார்த்து அருளினம் குருமுதலாய் எனின் அபக்குவம் அருளினும் அறியேன் மிகத்தகும் பக்குவம் வேண்டில் பயன் இலை நின்னால் பக்குவம் அதனால் பயன்நீ வரினே நின்னைப் பருவம் நிகழ்த்தாது அன்னோ தன் ஒப்பார் இலி என்பதும் தகுமே மும்மலம் சடம் அணு மூப்பு இளமையில் நீ நின்மலன் பருவம் நிகழ்த்தியது யார்க்கோ உணர்வு எழும் நீக்கத்தை ஓதியது எனினே இணை இலி ஆயினை என்பதை அறியேன் யானே நீக்கினும் தானே நீங்கினும் கோனே வேண்டா கூறல் வேண்டும் "காண்பார் யார்கொல் காட்டாக்கால்" எனும் மாண்பு உரை உணர்ந்திலை மன்ற பாண்டியன் கேட்பக் கிளக்கும் மெய்ஞ்ஞானத்தின் "ஆட்பால் அவர்க்கு அருள்" என்பதை அறியே 3. அறிவு அறியாமை இரண்டும் அடியேன் செறிதலால் மெய்கண்ட தேவே -- அறிவோ அறியேனோ யாது என்று கூறுகேன் ஆய்ந்து குறிமாறு கொள்ளாமல் கூறு. 4. கூறிய மூன்று மலத்தின் குணக்குறி வேறு கிளக்கில் விகற்பம் கற்பம் குரோதம் மோகம் கொலை அஞர் மதம் நகை விராய் எண் குணனும் ஆணவம் என விளம்பினை அஞ்ஞானம் பொய் அயர்வே மோகம் பைசால சூனியம் மாச்சரியம் பயம் ஆயேழ் குணனும் மாயைக்கு அருளினை இருத்தலும் கிடத்தலும் இருவினை இயற்றலும் விடுத்தலும் பரநிந்தை மேவல் என்று எடுத்த அறுவகைக் குணனும் கருமத்து அருளினை ஆங்கு அவைதாமும் நீங்காது நின்று தம்வழிச் செலுத்தித் தானே தானாய் என்வழி என்பது ஒன்று இன்றாம், மன்ன! ஊரும் பேரும் உருவுங் கொண்டு என் ஊரும் பேரும் உருவுங் கெடுத்த பெண்ணை சூழ்ந்த வெண்ணெயம் பதியில் சைவ சிகாமணி! மெய்யர் மெய்ய! மும்மலம் சடம் என மொழிந்தனை அம்ம மாறுகோள் கூறல் போலும் தேறும் சடம்செயல் அதனைச் சார்ந்திடும் எனினே கடம்படம் அதனுள் கண்டிலம் விடப்படும் ஊந்நிரள் போன்றது ஆயில் தோன்றி அணைந்து ஆங்கு அகறல் வேண்டும் குணங்களும் பன்மை இன்று ஆகும் எம்மைவந்து அணையத் தானோ மாட்டாது யானோ செய்கிலன் நீயோ செய்யாய் நின்மலன் ஆயிட்டு இயல்பு எனில் போகாது என்றும் மயல்கெடப் பந்தம் வந்தவாறு இங்கு அந்தம் ஆதி இல்லாய் ! அருளே. 5. அருள் முன்பு நில்லாது அடியேற்குக் கண்ணின்று இருள்கொண்டவாறு என்கொல் எந்தாய்! -- மருள்கொண்ட மாலையாய்! வெண்ணெய்வாழ் மன்னவா! என்னுடைய மால் ஐயா மாற்ற மதி. 6. மதிநுதல் பாகன் ஆகிக் கதிதர வெண்ணெய்த் தோன்றி நணி உள் புகுந்து என் உளம்வெளி செய்து உன் அளவில் காட்சி காட்டி என் காட்டினை எனினும் நாட்டிஎன் உண்மையும் பெருமையும் நுவலில் அண்ணல் பாதாள சத்தி பரியந்தம் ஆக ஓதி உணர்ந்த யானே ஏக முழுதும் நின்றனனே, முதல்வ! முழுதும் புலன்கடைப் பூழை நுழைந்தனன் கலங்கி ஆங்கு ஐந்து அவத்தையும் அடைந்தனன் நீங்கிப் போக்கு வரவு புரிந்தனன் தூக்கி எவ்விடத்து உண்மையும் இவ்விடத்து ஆதலும் செல் இடத்து எய்தலும் தெரித்த மூன்றினும் ஒன்று எனக்கு அருளல் வேண்டும் என்றும் இல்லது இலதாய் உள்ளது உளது எனும் சொல்லே சொல்லாய்ச் சொல்லும் காலைச் சிறுத்தலும் பெருத்தலும் இலவே நிறுத்தி யானை எறும்பின் ஆனது போல் எனில் ஞானம் அன்று அவை காய வாழ்க்கை மற்றவை அடைந்தன உளவெனின் அற்றன்று விட்ட குறையின் அறிந்து தொன்று தொட்டு வந்தனன் என வேண்டும் நட்ட பெரியதில் பெருமையும் சிறியதில் சிறுமையும் உரியது நினக்கே உண்மை, பெரியோய்! எனக்கு இன்று ஆகும் என்றும் மனக்கு இனியாய்! இனி மற்றது மொழியே 7. மொழிந்த அவத்தை முதல் அடியேன் நின்றாங்கு ஒழிந்தன நான்கும் உணர -- இழிந்து அறிந்து ஏறிற்று இங்கு இல்லை எழில் வெண்ணெய் மெய்த்தேவே! தேறிற்று என் கொண்டு தெரித்து. 8. தெரித்தது என் கொண்டு எனை உருத்திர பசுபதி! செடிய னேனையும் அடிமை செய்யப் படிவம் கொண்டு வடிவுகாட்டு இல்லாப் பெண்ணை ஆளும் வெண்ணெய் மெய்ய! அவத்தையில் தெரித்தனன் ஆயின் அவத்தை தெரித்தாங்கு இருத்தலும் இலனே திருத்தும் காலம் முதலிய கருவி ஆயின் மாலும் பிரமனும் வந்து எனை அடையார் ஓதும் காலை ஒன்றை ஒன்று உணரா சேதனம் அன்று அவை பேதைச் செயலும் இச் சேதன ஆனால் செயல் கொள வேண்டும் போதம் அவற்றைப் புணர்வதை அறியேன் கருவித் திரளினும் காண்பது ஓர் ஒன்றாய் ஒருவுதல் அறியேன் உணர்வு இலன் ஆதலின் நிற்கொடு கண்டனன் ஆயின் எற்குக் கருவி ஆயினை பெருமையும் இலவே யானே பிரமம் கோனே வேண்டா இன்னும் கேண்மோ, மன்ன! நின்னின் முன்னம் என்றன் உணர்வு இலன் ஆதலின் என்னைக் காண்பினும் காண்பல உன்னோடு ஒருங்கு காண்பினும் காண்பல அரும்துணை கண்டவாறு ஏது எனது கண்ணே! அண்டவாண! அருட்பெரும் கடலே! 9. கடல் அமுதே! வெண்ணெய்க் கரும்பே! என் கண்ணே! உடலகத்து மூலத்து ஒடுங்கச் -- சடலக் கருவியாது ஆங்கு உணர்த்தக் காண்பதுதான் என்னை மருவியது என்று உரைக்க மன். 10. மன்னிய கன்மச் சமத்திடை மலங்களை அன்னியம் ஆக்கி அருள்வழி அதனால் என்னுள் புகுந்தனை எனினே முன்னைத் திரிமலம் தீர்த்த தேசிக! நின்னோடு உருவுதல் இன்றி உடந்தையே ஆகும் பெருநிலை ஆகல் வேண்டும் மருவிடும் மும்மலம் அதனால் எம்முள் நின்றிலை எனில் அம்மலத் திரிவும் செம்மலர்த் தாள்நிழல் சேர்தலும் இலவாய்ச் சார்பவை பற்றிப் பெயர்வு இலன் ஆகும், பெரும! தீர்வு இன்று அமைந்த கருமத்து இயைந்ததை அல்லது சமைந்தன இலஎனச் சாற்றில் அமைந்த மாயேயம் கன்மம் மாமலம் மூன்றும் மாயாது ஆகவே ஆர்ச்சன மாயையின் உற்பவம் தீராது ஒழுகும் ஒன்று ஒன்று நிற்சமம் ஆயின் அல்லது நிற்பெறல் இல்லென மொழிந்த தொல் அறம் தனக்கும் ஏயாது ஆகும் நாயேன் உளத்து நின்றனை என்பனோ நின்றிலை என்பனோ பொன்றிய பொன்றிற்றில மலம் என்பனோ ஒன்றினை உரைத்து அருள் மன்ற குன்றாப் பெண்ணைப் புனல்வயல் வெண்ணெய்க்கு அதிபதி! கைகண் தலைவாய் கால்செவி மூக்கு உயர் மெய்கொண்டு என்வினை வேர் அறப் பறித்த மெய்கண்ட தேவ! வினையிலி! மைகொண்ட கண்ட! வழுவிலென் மதியே! 11. மதிநின்பால் இந்த மலத்தின்பால் நிற்க விதிஎன்கொல் வெண்ணெய்வாழ் மெய்ய! -- பதிநின்பால் வந்தால் இதில்வரத்தில் வந்து இரண்டும் பற்றுகிலேன் எந்தாய் இரண்டு ஆமாறு என் 12. எண்திசை விளங்க இருட்படாம் போக்கி முண்டகம் மலர்த்தி மூதறிவு அருளும் மேதினி உதய மெய்கண்ட தேவ! கோதுஇல் அமுத! குணப்பெரும் குன்ற! என்னின் ஆர்தலும் அகறலும் என்னைகொல் உன்னில் துன்னி உனாவிடில் பெயர்குவம் என்னும் அதுவே நின் இயல்பு எனினே வியங்கோள் ஆளனும் ஆகி இயங்கலும் உண்டு எனப்படுபவை எண்தாள் முக்கண் யாங்கணும் பிரியாது ஓங்கு நின் நிலையின் யான் வந்து அணைந்து மீள்குவன் ஆயின் ஆற்றுத்துயர் உற்றோர் அணிநிழல் நசைஇ வீற்றுவீற்று இழிதர வேண்டலும் வெறுத்தலும் இன்றிச் சாயைக்கு நன்றுமன் இயல்பே அனையை ஆகுவை நினைவு அரும் காலை இந்நிலை அதனில் ஏழையேற்கு இரங்கி நின்னை வெளிப்படுத்து ஒளிப்பை நியேல் அருள்மாறு ஆகும், பெரும! அ•து அன்றியும் நிற்பெற்ற அவர்க்கும் உற்பவம் உண்டு எனும் சொற்பெறும் அ•து இத் தொலுலகு இல்லை அவ்வவை அமைவும் சோர்வும் மயர்வுஅறச் சொல்லில் சொல்லெதிர் சொல்லாச் சொல்லே சொல்லுக சொல் இறந்தோயே! 13. இறந்தோய் கரணங்கள் எல்லாம் எனக்குச் சிறந்தோய் எனினும் மெய்த் தேவே! -- பிறந்து உடனாம் காயம் கொளவும் கொளாமலும் கண்டதுநீ ஆயன்கொல் பாதவத்து அற்று 14. அற்றதுஎன் பாசம் உற்றது உன் கழலே அருள்துறை உறையும் பொருள்சுவை நாத! வேறு என்று இருந்த என்னை யான் பெற வேறு இன்மை கண்ட மெய்கண்ட தேவ! இருவினை என்பது என்னைகொல் அருளிய மனமே காயம் வாக்கு எனும் மூன்றின் இதமே அகிதம் எனும் இவை ஆயில் கணத்திடை அழியும் தினைத்துணை ஆகா காரணம் சடம் அதன் காரியம் அ•தால் ஆரணங்கு ஆம் வழி அடியேற்கு என்னைகொல் செயல் எனது ஆயினும் செயலே வாராது இயமன் செய்தி இதற்கு எனில் அமைவும் பின்னை இன்று ஆகும் அன்னதும் இங்குச் செய்திக்கு உள்ள செயல் அவை அருத்தின் மையல்தீர் இயமற்கு வழக்கு இல்லை, மன்ன! ஒருவரே அமையும் ஒருவா ஒருவற்கு இருவரும் வேண்டா இறைவனும் நின்றனை நின்னது கருணை சொல் அளவு இன்றே அமைத்தது துய்ப்பின் எமக்கு அணைவு இன்றாம் உள்ளது போகாது இல்லது வாராது உள்ளதே உள்ளது எனுமுரை அதனால் கொள்ளும் வகையால் கொளுத்திடும் ஆயின் வள்ளன்மை எலாம் உள்ளிட அமையும் ஈய வேண்டும் எனும்விதி இன்றாம் ஆயினும் என்னை அருந்துயர்ப் படுத்தல் நாயி னேற்கு நன்றுமன் மாயக் கருமமும் கரும பந்தமும் தெருள அருளும் சிவபெரு மானே! 15. மான் அமரும் செங்கை மதில்வெண்ணெய் வாழ்மன்ன! போனவினை தானே பொருந்துமோ -- யான் அதனில் ஆவனோ ஆக்காய் அமலனாம் நின் அருள்தான் தேவனே! யாதுக்கோ தேர். 16. தேராது உரைப்பன் தெருமரல் உள்ளத்தொடு பேராது அருளுதல் பெரியோர் கடனே நின்னைக் கலப்பது என் உண்மை எனில் நினது நேர்மை சொல்மனத்து இன்றே எழுவகைத் தாதுவின் ஏழ்துளை இரண்டும் பெருமுழைக் குரம்பையில் பெய்து அகத்து அடக்கி நீக்கி என்றனைப் போக்குஅற நிறுத்தி இச்சை முதலிய எழுப்பி நடத்திடும் விச்சை சாலவும் வியப்பு அது நிற்க வாக்கும் மனமும் போக்கு உள தனுவும் சொல்லும் நினைவும் செய்யும் செயலும் நல்லவும் தீயவும் எல்லாம் அறிந்து முறை பிறழாமல் குறைவு நிறைவு இன்றாய்க் காலமும் தேசமும் மால் அற வகுத்து நடுவுநின்று அருத்தலின் நடுவன் ஆகுதியே சான்றோர் செய்தி மான்று இருப்பு இன்றே சாலார் செயலே மால் ஆகுவதே அத்துவா மெத்தி அடங்கா வினைகளும் சுத்திசெய் தனையே ஒத்த கன்மத்திடை நீங்கின என்னை ஊங்கு ஊழ் வினைகளும் ஆங்கு அவை அருத்துவது ஆரைகொல் அதனால் கருமம் அருத்தும் கடன் அது இன்றாம் தருமம் புரத்தல் பெருமையது அன்றே கண்ணினுள் மணிய! கருத்தினுள் கருத்த! வெண்ணெய் வேந்த! மெய்கண்ட தேவ! இடர்படு குரம்பையில் இருத்தித் துடைப்பது இல்லா அருள் தோன்றிடச் சொல்லே. 17. சொல்தொழும்பு கொள்ள நீ சூழ்ந்ததுவும் நின்செயல்கள் மற்றவர்கள் நின்நோக்கில் மாய்ந்த உயிர்க் -- குற்றம் ஒளித்தி யாங்கு, ஐய! உயர்வெண்ணெய் நல்லூர்க் குளித்தமதுக் கொன்றை எம் கோ! 18. கோலம் கொண்ட ஆறு உணராதே ஞாலம் காவலன் யான் எனக் கொளீஇப் பொய்யை மெய்யனப் புகன்று வையத்து ஓடாப் பூட்கை நாடி நாடா என்னுள் கரந்து என் பின் வந்து அருளி என்னையும் தன்னையும் அறிவின்றி இயற்றி என்னது யான் எனும் அகந்தையும் கண்டு யாவயின் யாவையும் யாங்கணும் சென்று புக்குழிப் புக்குப் பெயர்த்துழிப் பெயர்ந்து மிக்க போகம் விதியால் விளைத்திட்டு என்பணி ஆளாய் எனைப் பிரியாதே ஓடி மீள்கென ஆடல் பார்த்திட்டு என்வழி நின்றனன் எந்தை அன்னோ அருள்மிக உடைமையின் அருள்துறை வந்து பொருள்மிக அருள்தலும் பொய்ப்பகை ஆதலும் கைகண்டு கொள்ளெனக் கடல் உலகு அறிய மெய்கண்ட தேவன் எனப்பெயர் விரீஇத் தன்னுள் கரந்து தான்முன் ஆகித் தன்னதும் தானுமாய் என்னை இன்றாக்கித் தன்னையும் என்னையும் தந்து தனது செய்யாமையும் என்செயல் இன்மையும் எம்மான் காட்டி எய்தல் அம்ம எனக்கே அதிசயம் தருமே. 19. தருமா தருமத் தலைநின்று ஆழ்வேனைக் கருமா கடல்விடம் உண் கண்டப் -- பெருமான் திருவெண்ணெய் நல்லூர்ச் சுவேத வனத்தான் உரு என்ன வந்து எடுத்தான் உற்று. 20. உற்றவர் பெற்றவர் அற்றவர் முற்றும் அற்றவர்க்கு அற்றவன் அல்லவர்க்கு அல்லவன் அந்தம் ஆதி இல்லவன் வந்து குரக்கு மனத்துக் கொடியேன் பரக்கும் பரப்பைக் குவித்து நிறுத்திப் பிடித்திட்டு இருள்வெளி ஆகும் மருளினை அறுத்து வந்து புகுதலும் சென்று நீங்கலும் இன்றி ஒன்றாய் நின்ற அந்நிலையில் ஒன்று ஆகாமல் இரண்டா காமல் ஒன்றும் இரண்டும் இன்றா காமல் தன்னது பெருமை தாக்கான் ஆயினும் என்னது பெருமை எல்லாம் எய்தித் தன்னை எனக்குத் தருவதை அன்றியும் என்னையும் எனக்கே தந்து தன்னது பேர் ஆனந்தப் பெரும் கடல் அதனுள் ஆரா இன்பம் அளித்துத் தீரா உள்ளும் புறம்பும் ஒழிவுஇன்றி நின்ற வள்ளனமை காட்டி மலர் அடி அருளிய மன்னன் எங்கோன் வார்புனல் பெண்ணை வெண்ணெய் காவலன் மெய்கண்டதேவன் அண்ணல் அருள் ஆலயத்தன் நண்ணிய மலம் முதலாயின மாய்க்கும் உலக உயிர்க் எல்லாம் ஒரு கண்ணே. (முற்றும்)