Thursday 3 October 2013

சிவபிரானை வழிபட்டு உய்வு பெற்ற உயிர்கள்

சக்தி, பெருமால், பிரம்மா, இந்திரன், தேவர்கள் என சிவபெருமானை வழிபட்டு பேரு பெற்றதைப் போல பூமியில் உள்ள உயிர்களும் உய்வு பெற்றுள்ளன. கீழே உயர்களின் பெயர்களும், வழிபட்ட தலங்களும்.
சிங்கம் – திருநல்லூர்
யானை – திருக்குற்றாலம், மதுரை, காளையார் கோவில், திருவானைக்காவல், திருக்காளத்தி
காளை – திருவையாறு
பசு – ஆவூர், செய்யாறு, ஆவடுதுறை, கரூர், பட்டீஸ்வரம்
குதிரை – சீயாத்தமங்கை
ஆடு – திருவாடானை
பன்றி – சிவபுரம்
கழுதை – கரவீரம்
குரங்கு, அணில், காகம் – குரங்கணில் முட்டம்
முயல் – திருப்பாதிரிப் புலியூர்
நாரை – நாரையூர், மதுரை
கரிக்குருவி – மதுரை, வலிவலம்
மயில் – மயிலாடுதுறை, மயிலாப்பூர்
கருடன் (ஜடாயு) – வைத்தீஸ்வரன், சிறுகுடி
நண்டு – திருந்துதேவன்குடி, திருநீடூர்
வண்டு – திருசைலம், திருண்டுறை, வாழ்கொளிபுத்தூர்
தேனீ – நன்னிலம்
ஆமை – திருமணஞ்சேரி
எறும்பு – திருவெறும்பூர்
பாம்பு – காளத்தி, திருப்பாம்புரம், குடந்தை, குடந்தைக் கீழ்க்கோட்டம்
சிலந்தி – ஆனைக்கா
எலி – திருமறைக்காடு
ஈ – திருஈங்கோய் மலை

No comments:

Post a Comment

நன்றி