வாகனத்தின்
பின்னும் கொடிமரத்தின் முன்னும் பலிபீடம் அமைக்கப்பட வேண்டும். பலி என்பது உணவைக் குறிக்கும்
ஒரு சொல். இதைப் பிற்காலத்தில் தவறான பொருளில் உயிர்ப்பலி என்று கூறினர்.
உயிரின்
தன்முனைப்பை இறைவன்முன் ஒழித்து அதையே இறைவனுக்குச் சமர்ப்பிப்பது பின்னாளில் உயிர்ப்பலி
என்று திரிந்து விட்டது. தன்முனைப்பை எவன் இறைவன் முன் அமுதாகப் படைக்கிறானோ அவனே இறைவனை
அடைவான்.
யான்
எனதென்றும் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த
உலகம் புகும்.
என்பது
திருவள்ளுவர் இதுபற்றிக்கூறுவது.
தன்முனைப்பாகிய செறுக்கறுத்தலை கோழி அறுத்தல், ஆடறுத்தல்
என்று முற்றிலுமாக சிதைத்து விட்டனர். பலி என்றது அமுது என்பது போய், பலி என்பது உயிர்ப்பலி
என்று மக்கள் மாற்றிச் சிதைத்தது கொடுமையிலும் கொடுமை.
கோயிலில்
நாம் இறைவனுக்கு ஊட்டும் பொருட்கள் அனைத்தும் அவன் படைத்தது. எனவே அவற்றைப் படைப்பதில்
இறைவன் புதிதாகக் கொள்வது எதுவும் இல்லை. ஆனால், நம்மையே இறைவனுக்குப் படைத்தால் அதையே
இறைவன் விரும்புவான். “உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது” என்றார் விபுலானந்த அடிகள்.
இதற்கு
மாறாக, உயிர்வதை செய்தால் கருணையே வடிவான இறைவன் அதை எப்படி ஏற்றுக் கொள்வான் என்று
சான்றோர்கள் கூறுகின்றனர்.
ஏனைய
தெய்வங்களிடையே பலி இட்டு வழிபாடு நடந்திருந்தாலும், சிவலிங்கத்தின் முன் மிருகபலி இட்டு
வழிபாடு செய்ததாகச் சங்க இலக்கியத்தில் சான்றில்லை. மாறாக, சிவலிங்கத்தின் முன் மிருகபலியிட்டால்
சிவன் அங்கிருந்து மறைந்து விடுவான் என்று 52-வது புறநானூற்றுப் பாடலில் வருகிறது.
“கலிகெழு
கடவுள் கந்தம் கைவிடப்
பலிகண்
மாறிய பாழ்படு பொதியில்”
என்பன
அவ்வரிகள். கடவுள் கந்தம் என்பது நடுதறி எனப்படும் சிவலிங்கத்தைக் குறிக்கும். பொதியில்
என்பது சிவன் கோயிலைக் குறிக்கும். பலியிட்டால் சிவலிங்க ஆற்றல் மறைந்து கோயில் பாழ்படும்
என்கிறது அவ்வரி.
No comments:
Post a Comment
நன்றி