Tuesday 20 January 2015

ஐந்தொழில் வல்லான் நிலை - 'நமச்சிவாய’ என்ற சொல்லுக்கு உரிய விளக்கம்





ஐந்தொழில் வல்லான் நிலை - 'நமச்சிவாயஎன்ற சொல்லுக்கு உரிய விளக்கம்
(
நடராசர் சிலை- ஓரு தத்துவ விளக்கம்)
_________________________________________

நடராசர் சிலை - ஆடல்வல்லான் சிலை - கூத்தர்பெருமான்சிலை - பதினெண்சித்தர்களின் செயல்நிலை சித்தாந்தத்தின் தத்துவ விளக்கமே! ஆகும்.

பதினெண்சித்தர்களின் உருவ வழிபாட்டுக் கொள்கையின் மிகப் பெரிய செயல் விளக்கச் சிலையே இந்த ஆடல்வல்லான் சிலை.

இறைவனுக்குரிய ஆக்கல், அழித்தல், காத்தல், அருளல், மறைத்தல், என்ற ஐந்தொழில்களின் விளக்கமாகத்தான் இந்த ஆடல் வல்லான் சிலை உருவாக்கப்பட்டது.

1.
வலக்கையில் உள்ள உடுக்கை ஒலி = ஆக்கல் தொழிலை விளக்குகிறது

2.
இரண்டாவது வலதுகையின் வாழ்த்துகின்ற தோற்றம் = காத்தல் தொழிலைக் குறிக்கிறது.

3.
மேல் இடைக்கையில் உள்ள சுடர் நெருப்பு = அழித்தலைக் குறிக்கிறது.

4.
கீழ் இடக்கையும், முயலகனை மிதிக்கும் வலது காலும் மறைத்தலைக் குறிக்கிறது.

குறிப்பு:- கீழ் இடக்கை மட்டும்தான் மறைத்தலைக் குறிக்கிறது என்றும், முயலகனை மிதிக்கும் வலதுகால் கொடியனவற்றை ஒடுக்குதல் என்ற தத்துவத்தைக் குறிக்கின்றது என்றும் பதினெண்சித்தர்களின் வாக்குகளிலும், வாக்கியங்களிலும், வாசகங்களிலும், நான்மறைகளிலும் மிகத் தெளிவாக குறிக்கப்படுகின்றன.

அதாவது நமசிவாய என்ற ஐந்தெழுத்து: நமச்சிவாய என்ற ஆறு எழுத்தாக வடிவப்படும்போது இந்த நடராசர் ஆறுவகை இறைமைச் செயல் நிலை விளக்கத்தை வழங்கிறது.

5.
இடக்காலின் தூக்கிய திருவடி அருளுதல் எனும் தத்துவத்தை விளக்குகிறது. இந்த இடக்கால்தூக்கிய திருவடிஅல்லதுகுஞ்சிதபாதம்எனப்படும். வலக்கால்அனைத்தையும் ஒடுக்கி மறைக்கின்ற்ஆடியபாதம்எனப்படும். சிறப்பாக, முயலகனின் (அரக்கன்) ஆட்டங்களை எல்லாம்அடக்கிய பாதம்ஒடுக்கிய பாதம்அவனால் விளந்த அச்சங்களையெல்லாம் மறைத்த பாதம் அல்லதுஅழித்த பாதம்எனப்படும்.

6.
இப்படி 1.ஆக்கல், 2. காத்தல், 3. அழித்தல், 4. ஒடுக்குதல் அல்லது மறைத்தல் 5. அருளல், என்று ஐந்தொழில்களை செய்யும் இறைவனின் நிலையை விளக்கும் இந்த நடராசர்சிலைஐந்தொழில் வல்லான் சிலைஅல்லதுஐந்தொழில் வல்லான் நிலைஎன்று சிறப்பிக்கப்படுகிறது.

நமசிவாயநமச்சிவாயஎன்ற சொல்லின் பொருள் விளக்கம்

இதே நடராசர் சிலையினைநமச்சிவாயஎன்ற சொல்லுக்கு உரிய விளக்கமாகவும் விளக்கிக் காட்டியுள்ளார்கள் பதினெண்சித்தர்கள்.

ஆக்கல்வலது மேல் கை

காத்தல்வலது கீழ்க் கை

சிஅழித்தல்மேல் இடக்கை

வாமறைத்தல்கீழ் இடக்கை

- அருளுதல்தூக்கிய இடக்கால்

ச்ஒடுக்குதல்ஊன்றிய வலதுகால்

இப்படி ஐந்தொழில் வல்லான் சிலை, ஆறு தொழில்களை விளக்கக்கூடிய ஒன்றாகவும் இருக்கிறது.

குறிப்பு:- இதைத்தான் பதினெண்சித்தர்கள் ஐந்தும் ஆறும் அறியாதவன், ஐந்தை ஆறாக்கத் தெரியாதவன், ஐந்தும் ஆறும் ஒன்றென உணரத் தெரியாதவன் .. என்று குறிக்கிறார்கள்.

ஆடல் வல்லான், கூத்தர் பெருமான், தாண்டவ மூர்த்தி, நடராசர், ஆடும்பெருமான், மன்றாடியார்,.., என்று பல பெயர்கள் பதினெண்சித்தர்களின் குருபாரம்பரியத்தில் உள்ளன.

---------------------------------------------------------
உங்களுக்குத் தெரியுமா!

நடராசர் சிலையும், ஆயிரத்தெட்டு சிவாலயங்களும்

நடராசர் சிலை ஆயிரத்தெட்டு வடிவ வேறுபாடுகளைக்கொண்டு வடிக்கப்பட்டு அமைக்கப்பட்ட ஆலயங்களே ஆயிரத்தெட்டு சீவாலயங்கள்.
---------------------------------------------

No comments:

Post a Comment

நன்றி