Friday 20 November 2020

சோணாசல வெண்பா

சோணாசல வெண்பா(சோணாசல முதலியார் ) காப்பு வாணாளை வீணாளா வையகத்திற் போக்காமற் சோணாசல வெண்பாச் சொல்லுதற்கு - நாணாளு மீங்கழுநீ ரானைநினை யேக்கமறக் காக்குமுக்கட செங்கழுநீ ரானைநினைந் தோது . நூல் ஓங்காரப் பீடத் துறையும் பிரானினனைப் பாங்காரக் காணப் பணித்திடா - யாங்கார வெம்பிரமா நற்றிருமான் மெய்யதுமாறித் தொடாமா சம்பிரமா சோணா சலா (1) கங்கைச் சடையுங் கருணைத் திருமுகமு மங்கை மழுமாணு மரைக்கசைத்த - பொங்கரவுஞ் செந்நாளு மெந்நாளுஞ் சேவிக்க மேன்மேலுந் தந்தாளுஞ் சோணா சலா (2) எற்றைநாண் மாதுமையோ டென்முன் வருவாயோ வற்றைநா ணல்லநா ளானநாண - மற்றைநாள் கன்மநாள் வீணாள் கரிநா னிருட்டுநாள் சன்மநாள் சோணா சலா (3) தீவாய்ப் படநாகத் தீண்டினாலுந் துயர்கூர்ந் தாவாவென் றேங்கியழுங் காம - னாவால் விடாதார வென்பார்க்கு வெய்யவிட முண்டோ சடாதரா சோணா சலா (4) கோயில்வலஞ் செய்யேன் கும்பிட னின்றுருகேன் வாயிலெழுத் தஞ்சும் வழுத்துகிலே - னாயிற் கடையாளாப் பேய்போற் கவல்கின்றேன் கங்கைச் சடையாளா சோணா சலா (5) மாதேவா சங்கரா மைக்கண்டா முக்கண்ணா கோதேது மில்லாக் குணாகரா - பூதேசா வோம்பவா வோம்பவா வுள்ளவா வுள்ளவா சாம்பவா சோணா சலா (6) மெய்ந்நூலை விட்டுவிட்டு வேறுவே றுள்ளபல பொய்ந்நூலைக் கற்றுப்பு லம்புகின்றா - ரென்னோர்க்கும் பொல்லாவா தைக்குளிர்க்குப் போர்வைவுயா கம்பலமா சல்லவா சோணா சலா (7) பிறையிட்ட பொற்சடையெம் பெம்மானே நின்றா ணிறையிட்ட வன்பா நினைந்து - முறையிட்டுங் கேளாது போலிருந்தாற் கெட்டேனி னிக்கணமுந் தாளாது சோணா சலா (8) வேதாகமந் தெரிந்த மேலோ ருடன்கலந்து மாதாகமான் புன்றகாண மாண்பினுளப் - போதாகச் சத்துவா னந்த சகசநிட்டை தந்தருளாய் தத்துவா சோணா சலா (9) மண்ணேறு பல்வகையா மன்பதைக ளத்தனையுங் கண்ணேறு நீங்கிக் களிப்பதற்கோ - புண்ணேறு சிந்தனையே னென்னையுமோர் சீவனென விவ்வுலகிற் றந்தனையே சோணா சலா (10) தண்டா மறையிலைமேற் றண்ணீரா வென்றனுள மண்டாத் துயரா வலைகின்ற - கண்டாய் சிலையெழுத்தா வோர்மொழியுஞ் செப்பகிலா யீதென் றலையெழுத்தா சோணா சலா (11) பேயுடனே நட்டம் பிரியமுடன் செய்பவனிச் சேயுடனே சேராதென் செப்புவா - யாயுலக மாமகண்டா வேதண்டா வண்டரண்டர் வால்முண்ட சாமகண்டா சோணா சலா (12) மாயாம லம்புணர்ந்து மாதவமாஞ் சைவநெறித் தோயாம லம்புவியிற் சோர்கின்றேன் - றாயாகி வேண்டவர் வின்படியே மெய்ஞ்ஞானப் பால்கொடுப்பாய தாண்டவர் சோணா சலா (13) துன்பக் கடல்வீழ்ந்த தொண்டனேன் றன்னைநீ யின்பக் கடலாட்ட வெண்ணினா - லன்பா தடுப்பாரோ வைராரோ கம்மியிவ னென்று தடுப்பாரோ சோணா சலா (14) தெய்வமுண் டென்றோவேளை தெய்வமின் றென்றோர்வேளை மைவளருந் துட்டமன மிருந்தா - லுய்வதெவன் ஈசனானென் றானூர்ந் தீண்டவர் வாணடானீ தாசனான் சோணா சலா (15) எத்தனைதான் கற்றென்ன வெத்தனைதான் கேட்டென்ன வத்தனையு மற்றோர்க் கவர்ந்தென்ன - சித்தந் தராசனார்க் கல்லாலுன் றாளுண்டோ மேருச சராசனா சோணா சலா (16) அன்புவளா தொண்டருள மாலயமா வெப்பொழுதுந் தென்புவளர் தேவியுடன் சேர்ந்துவளர் - நின்புகழைப் பாடுவேன் பந்தவினைப் பாசத்தை வேரறவே சாடுவேன் சோணா சலா (17) கருநிறத்த காகங் கனகமலை சார்ந்தாற் றிருநிறத்த வாகுஞ் செயல்போ - லிருநிறத்த வாகாரநா னுனைச்சார்ந் தன்பனாவேன் கருணா சாகரா சோணா சலா (18) வன்பா தகஞ்செய்யும் வஞ்சர்தமைச் சேராம னின்பா தகஞ்ச நினைத்துவா - ழன்பா நிதானந்தா மந்தாகினிக் குவந்தா யெந்தாய சதானந்தா சோணா சலா (19) மான்செய்த கண்ணியொடும் வால்வடி வேலனொடும் வான்செய்த காட்சி வழங்கென்றால் - யான்செய்த கன்மமா வந்துமுகங் காட்டகிலா யீதுனக்குத் தன்மமா சோணா சலா (20) வெய்யபிறப் பீனுமுயர் வித்தாகு மாசையென வுய்யநல்லோர் சொற்றறி நெறியோராயன் - மையலிலே யாழ்கின்றே னின்சீரரு ளெள்ளளவுமின்றித் தாழ்கின்றேன் சோணா சலா (21) முற்றா விளஞ்சேய்க்கு மூண்டநோய்க் காமருந்து பெற்றா ளருந்துகின்ற பெற்றிபோற் - சிற்றம் பலசதுவந்த மன்பதைக் காப்பார நடஞ்செய்தித் தலத்துவந்த சோணா சலா (22) ஆட்டுகின்றா யாடுகின்றா யாடலையுங் காண்கின்றாய் கூட்டுகின்றாய் கூடுகின்றாய் கொள்கைபல - நாட்டுகின்றாய் ஞாலமெலா மிவ்வகையே நானறியே னின்னுடைய சாலமெலாஞ் சோணா சலா (23) என்னைப்போ லேழையிலை யெவ்வெவ் வுலகத்து நின்னைப்போல் வள்ளலிலை நிச்சயமே - பின்னையே யென்றொழிலே யாசித்த தில்லையெனா தீவதுநின் றன்றொழிலே சோணா சலா (24) நறும்பூவுடன் சேர்ந்த நாருமண மெய்து மிறும்பூ தன்றைய வெளியேன் - பெறும்பே றதுவே தானாக வடியருடன் சேர்வேன் சதுவேதா சோணா சலா (25) பத்தருக்குஞ் சித்தருக்கும் பண்ணவர்க்கும் விண்ணவர்க்கு முத்தருக்கு மற்றவர்க்கு மூவரெனுங் - கத்தருக்கு நற்றுரையாய் வாழ்கின்றாய் நாயேற்கு நாயகனா சற்றுரையாய் சோணா சலா (26) வணங்காத் தலையும் வழுத்தாத நாவு மிணங்கா மனமு மெனக்கே - யணங்கா மிகுதியா வின்னம விளம்புவதே னந்தோ தகுதியா சோணா சலா (27) என்னேநீ ராடப்போ யெண்ணமறந் தொருவன் பின்னேசே றாடுகின்ற பெற்றிபோற் - கொன்னேவெங் கன்மத்தைச் செய்து கழிக்கின்றே னல்லநர சன்மத்தைச் சோணா சலா (28) அண்ணா மலையென்று மண்டமெலாம் பெற்றெடுத்த வுண்ணா முலையென்று முள்ளத்தே - யெண்ணாத நாளில்லை நாயேற்கு னற்றாள லாதடையுந் தாளில்லை சோணா சலா (29) இலவுதனைக் காத்தே யிருக்குங் கிளிபோற் குலவுகுடும் பத்தையே கோரி - விலகினேன் மாதுரியா னந்தசுகம் வாய்க்குமோ வேழைக்குச் சாதுரியா சோணா சலா (30) நாட்டைவிட்டுக் காட்டையுற்று நற்கனிதேரோர் சிறுவன் வேட்டையிற்றப் புங்கொடிய வேங்கைகண்டு - கோட்டை யரண்புகுந்தே யுய்ந்ததென யானுய்ய நின்பூஞ் சரண்புகுந்தேன் சோணா சலா (31) வானே முகவட்ட மாமூர்த்தி யாவிளங்கும் கோனே நினதுபதங் கூடாமல் - யானே தனித்தேனோ விளங்குத் தளரலிதற கென்றே சனித்தேனோ சோணா சலா (32) தேவாரந் தன்னைச் சிரத்தையா நாயடியே னாவாரப் பயந்து விழிக - கோவாரக கன்னிகரு முள்ளங் களித்துருகும் வாழ்வருளாய தன்னிகருஞ் சோணா சலா (33) ஞாயிறு திங்கண யனஞ்செவ் வாயுமைமெய் மேயபுத னின்மெய் வியாழமுறை - வாய தனியா மோர்வெற் புதழை வெள்ளியற்குச் சனியாமோ சோணா சலா (34) பெண்ணாசை யாதியாப் பேசுகின்ற மூவாசை யெண்ணாசை வையகத்தி லேறகாதோ - அண்ணா மலையானே கொண்டவர் யார்மற் றாசைதம்மிற் றலையானே சோணா சலா (35) ஓர்தனிரு தாண்முமல மோவுறவே நாற்கரணஞ் சேர்தரவஞ் சக்கரமுஞ் சிந்தித்தா - றார்பொழுது மேழுவேதத் திசையி னேத்தரு ளெட்டங்கமுறத் தாழுவேள் சோணா சலா (36) காலத்தே சென்றுசிவ கங்கையிலே நீராடிப் பாலத்தே நீற்றைப் பரிந்தணிந்து - மூலமர மந்திரமே யோதிநினை மன்னிவலஞ் செய்வதுய்யுந் தந்திரமே சோணா சலா (37) நின்னைச் சதமா நினைக்குஞ் சிறியேற்கும் பின்னை வுறுமைப் பிணியுண்டோ - பொன்னைச் சதாசிவா வென்றழைக்குந் தோகைபுணர் சாம்ப சதாசிவா சோணா சலா (38) உடல்பொரு ளோடாவி யுனக்கே யளித்தேன் கடலுகங் காணவெனைக் காவர் - தடலுடனே யிங்கடத்தை நீபுரிந்தா லேவாபாற கூறுவனென சங்கடத்தைச் சோணா சலா (39) தன்னிகரில் சோண சயிலனே யென்பாச சொன்னிகழ் பாமாலையன்று சூட்டினருக - கிந்நிலத்தின் முன்மானன் றெட்டரிய முண்டகத்தா ளன்றியுண்டோ சன்மானஞ் சோணா சலா (40) வாக்கின் வருகவென்றால் வாய்நோமோ தாழ்ந்தேனைத் தூக்கின் மலர்க்கை துவளுமோ - நோக்கின் வலிக்குமோ நின்கடைக்கண் வள்ளலுக்கு முள்ளஞ் சலிக்குமோ சோணா சலா (41) நன்னெஞ்சு கடனுன்ற னாணமலர்த்தாள் பூசியே னென்னெஞ் சதல்லா யிருப்பதா - னின்னெஞ்சுங் கல்லாபார் மேலென்னைக் காவாதென் காரணமோ சல்லாபா சோணா சலா (42) தஞ்சமென நின்கமலத் தாளடைந்து நானிருக்க வஞ்சநம னென்பால் வருவானோ - நஞ்சமிக்க பொங்கரா வேணிப்புனி தர்மார்க் கண்டனையாக சங்கரா சோணா சலா (43) கரங்குவித்து மெய்சிலிர்த்துக் கண்ணீ ருதிர்த்துச் சிரங்குவித்துத் தெண்டனிட்டுத் தேம்பி - யிரங்குணர்க்கு வந்திடுவாய் கேட்ட வரந்தருவாய் நாயேற்கென் தந்திடுவாய் சோணா சலா (44) ஒருவனொ ருத்தியுட னோகை பெறக்கூடும் யருவம் பனித்துளிபோற பாய்ந்து - கருவுற் றுருவஞ்சார்ந் துறபவித் திங்கோடி யுழலாதான் சருவஞ்சா சோணா சலா (45) வன்பிறவி நோய்க்கு மருந்தா விருந்தடியார் துன்பிறவி ழிக்குநினைச் சூழ்ந்தவருக் - கென்பிறசீர் சிற்பரா வம்பலத்திற் றெய்வநடஞ் செய்தருளுந் தற்பரா சோணா சலா (46) ஓரூரென் றில்லாம லோடெடுத்துப் பிச்சைக்கா வூரூராச் சுற்றி யலைகின்றாய் - பேரூரி லேற்றுவாயென் றுன்னை யெப்படி யானம்புவது சாற்றுவாய் சோணா சலா (47) அன்பார வுன்ற னடிக்கமலம் பூசித்த லென்பார மென்னை பிரசித்த - லுன்பாரங் காரணாதீதா கருணாகரா மழுமான தாரணா சோணா சலா (48) பந்தக்கா னென்னப் பருத்தவுடல் சுமப்பே னந்தக்காலன் வெருண்டெ னாவிகொள - வந்தக்கா லஞ்சிலிப் பேனீவந் தருளாயே லென்செய்வேன் சஞ்சலிப்பேன் சோணா சலா (49) ஒருமணத்தை நீக்கி யுயர்நா வலூரர்க் கிருமணத்தைச் செய்தாண்ட தென்னீ - வருமணத்தோர் மாட்சியோ வெண்பாரேல் மங்கையுமை கங்கையிவர் சாட்சியோ சோணா சலா (50) ஞாதுரு மெய்ஞ்ஞான நவிலரிய நேயமென வோதுருமம் முப்புருளி னுண்மைதனைப் - பேதுறுவேன் றேர்வேனோ தேர்ந்துன் றிருவாளர் தஞ்சபையிற் சார்வேனோ சோணா சலா (51) ஞானமிட லோடருந்து நாரணனே யாதியரிக் காலமிடர் தீர்த்தெம்மைக் காத்தியென - வோலமிட கஞ்சுமுண்டா வுன்னைவிட நாயேற்கு லகிலொரு தஞ்சமுண்டா சோணா சலா (52) அபய கரமு மருள்சேர் முகமு முபய பதமு முமையா - ளிபமுகன்சேய் நண்ணவா மால்விடைமே னாயேன் சரணுனக்கே தண்ணவா சோணா சலா (53) அன்பே திரியா வருளே நெய்யாமிக நன்போக மகலா நாணாளு - முன்பேமெய்ஞ் ஞானமாந் தீபமிட்டு நண்பொடுவாழ் வாழ்வருளசீர்த் தானமாஞ் சோணா சலா (54) மணமென்று கூறியதோர் வாயாலே மற்றும் பிணமென்று கூறுகின்றார் பின்பு - குணமென்ற வெம்மதியே னானானுமெய் யினைமெய்யென் றணுவுஞ் சம்மதியேன் சோணா சலா (55) மாசகன்ற வாதவூர் வள்ளல் வழங்குமணி வாசகமே மாமறைக்கு மாண்பென்றே - பேசுவே னங்கை யானீயெழுது மன்பேபெருஞ் சான்றாஞ் சங்கையா சோணா சலா (56) இரந்தும் பரிந்தே யிடுவென்று நீதி கரந்துவிடா திருக்கக் கச்சூர்ப் - பொருந்தி யுணவா தரித்து நம்பியுண்ண வளித்தாய்சீர் தணவாத சோணா சலா (57) பாலையளித் தாய்காழிப் பாலனா ரின்புறவே சூலையளித் தாயப்பர் துன்புறவே - யேலவிவை நன்மையோ வாயுண் முறைகாமத்தி னால்விளைந்த தன்மையோ சோணா சலா (58) கற்பனையெ லாங்கடந்த காரணா தீதசுக தற்பரனே நின்றாள் சரண்புகுந்தே - னற்பனெனக் கொள்ளாதே குற்றங் குறியாதே யன்னியமாக தள்ளாதே சோணா சலா (59) பூசேன் விபூதிதனைப் பூணேன் சிவமணியைப் பேசேன் பஞ்சாக்கரத்தைப் பேதமையை - வீசேன் வலவனே போற்றிரிவேன் வாழ்வேனோ வேணிச் சலவனே சோணா சலா (60) அளவை கடந்த வருளொளி யேநின்பே ரருளை யணுவு முணரேன் - களவகன்றோர் தந்நிதியே மெய்ஞ்ஞான தாண்டவா வானந்த சந்நிதியே சோணா சலா (61) தொண்டர்களு மாதலருந் தூயசிவ காமியுநல் லண்டர்களுங் காணமன்று ளாடுகின்றாய் - பண்டிருவர் காணோ மேயென்று கருதுங் கமலப்பூந் தாணோமே சோணா சலா (62) ஆணிலே பெண்ணிலே யல்லா வுயிர்களிலே வீணிலே யென்போல் விழைவர்யார் - வேணி வியாளனே பொல்லா வினையேனைக் காப்பாய் தயாளனே சோணா சலா (63) தொல்லை வறுமையினாற் சோர்ந்தாலு மென்மேனி யில்லையெனும் லோபிகளை யாசியேன் - றில்லையிலே வேம்பசிவ தைக்கழுஞ் சேய்வேண்டும் பாலாழிதந்த சாம்பசிவா சோணா சலா (64) கருணைபுரிந் தென்னைநீ காத்தியே லென்ன யருணையடைந் ததுண்டோ வன்பாத - தருணமல ரிண்டையுண்டோ தொண்டுண்டோ வென்னுண்டென் றனபாசெய்யுஞ் சண்டையுண்டோ சோணா சலா (65) திட்டுண்டு வெண்ணெய்த் திருடியுண்டு மாதராற் கட்டுண் டடியுண்டான கண்ணனே - பிட்டுண்டு வாழ்வெவர்க்கு நல்கவே மாறனடி யுண்டாயநீ தாழ்வெவர்க்குச் சோணா சலா (66) தாயுமிலை தந்தையிலை தான்றனிய னானாயநீ சேயுமிலை சேய்களுக்குத் தோந்திதனை - யாயுங்கால் வர்க்கமிலை முன்பின மரபிலைநீ வத்துவென்னத் தர்க்கமிலை சோணா சலா (67) நண்ணியவெற் போவெள்ளி நற்சிலையும் பொற்சிலையாம் புண்ணியமா தேவியன்ன பூரணியே - யுண்மையிவை நம்புமேனன்று பத்தூர் நாடியிரந் துண்டகதை சம்புவே சோணா சலா (68) விளைவான் மலிந்திடு நெல்வேலி யுனக்குண்ட விளையான் குடிமாற னின்பா - முளையதனை வாரிவருங் காலை மறுக்காயோ மால்விடைமேற் சாரிவருஞ் சோணா சலா (69) அண்ணா மலையானா யப்பநீ தாயுமையு முண்ணா முலையா னாளுண்மைசொல - வொண்ணாதா மிக்கதோ நல்லோர் வியந்து துதிசெய்யத் தக்கதோ சோணா சலா (70) சூதாடப் பொய்பேசத் தூயோரை நிந்திக்க வாதாட வஞ்சிக்க வல்லவன்யான் - வேதாவின் றோதகமோ நின்றாடு திக்கறியே னென்னுடைய சாதகமோ சோணா சலா (71) குகைநமசி வாயர் குருநமசி வாயர் தகையுறு வெண்பா மாலைசாத்திப் - புகழடைந்தா ரேத்துகின்றே னுள்ளபடி யில்லையவா போலச் சாத்துகின்றேன் சோணா சலா (72) நந்தவனம் புக்கு நறுமா மலரெடுத்துச் சந்தரப்பன் மாலைதொடுத் தணிந்தே - யெந்தை யருணேசா வென்பாரை யாபத்திற் காக்குந் தருணேசா சோணா சலா (73) முயலகன் மேல்வைக்கா முளரித் தாளிந்த மயலகன் மேல்வைத்து மகிழலா - வியல்சேர் பரதமே செய்க பகனுனக்கு முண்டு சரதமே சோணா சலா (74) பூவடிவம் வெற்பரையன் புத்திரிக்குத் தீண்டரிய தீவடிவ நின்றனக்கேற் சீர்க்கச்சி - மாவலக்கீழ்த் தந்தேகம் வாடாமற் றான்வளைத்தா ணீயிளைத்தால் சந்தேகஞ் சோணா சலா (75) நன்மார்க்க நான்மார்க்க நண்ணுஞ் சரியையுறு முன்மார்க்க மேனு முயலாத - வென்மார்க்கந் துன்மார்க்க மாதலினாற் சூழ்வதெங்கே மேலான சன்மார்க்கஞ் சோணா சலா (76) பல்லாயிரந் தரமாப் பாலன்குறை யெல்லாஞ் சொல்லா திருக்கவிலை சொல்லியுமென் - பொல்லாத புத்தியின் றோடத்தாற் பொருத்தமின்றோ வாண்டருளிச் சத்தியின்றோ சோணா சலா (77) ஆடரங்கா வன்பர்மன மானந்தக் கூத்துகந்தாய கோடரங்கா ணென்றன் கொடியமன - நீடரங்க மண்டிப்பாய்வேக மடங்கவெங்கு மோடுவதைத் தண்டிப்பாய் சோணா சலா (78) மழைகுளிர்வெங் காற்றுருமு வல்லடிதீ வெய்யில் குழைபசிநோய் கள்ளர் கொடுங்கோல் - விழைகூற்றாற் றீங்குவா ராதுவலஞ் செய்வாரை நீயிருந்து தாங்குவாய் சோணா சலா (79) பூமாலை கையும் புனன்மாலை நேத்திரமும் பாமாலை நாவும் பரிந்தணியுந் - தாமே நெடுமாலைத் தேடவைத்த நீயெனைச்சேர் பார்கூய்த் தடுமாலைச் சோணா சலா (80) முற்காசி மன்னன் முகத்தைக் குரங்காக்கிப் பிற்காசி கந்தவருள் பெய்தனையே - யெற்காசி யப்படியேன் றண்டித் தருள்புரியா யந்தோயான் றப்படியேன் சோணா சலா (81) தென்பாகத் தேவியுடன் சேர்ந்துசிறுத் தொண்டரிட்ட வன்பாங் கறியை யருந்தற்கே - யின்பாப்போய்ச் சீராளா வென்றழையுஞ் சேயையெனத் தந்தளித்த தாராளா சோணா சலா (82) ஆக்குவாய் காப்பா யழிப்பாய் மறைப்பாய்பின் னோக்குவா யாவு நொடிப்போதே - தாக்கு மிமியேற்கு நேரந்தா னெத்தனையோ கற்பந் தமியேற்குச் சோணா சலா (83) தாயிலாச் சேய்போற் றவிக்கின்றே னென்றுரைத்தா லாயிலா னானென்ற றைவையென - வாயிலா வூமனே யொத்தியா னொன்றுமுரை யேனிதழித் தாமனே சோணா சலா (84) அனங்காணா னஞ்சுண்டா னம்மை வினையாற் புனையுடம்பும் பாதியாய்ப் போனான் - றினமுந்தா னேமாந்த மானிடனென் றெள்ளாம லேத்துவதென் றாமாந்தர் சோணா சலா (85) சங்கரியத் தங்கொளலாற் சக்கரமான் மன்னுதலால் வெங்கரி பயந்தவணன் மேவலா - லிங்கரிது நிற்குருவே யென்னுருவே நீமுழுதுங் கொண்டுறைவாய் சற்குருவே சோணா சலா (86) மோன முடிவே மொழியவரு மானந்த ஞான வடிவேநின் னலமுழுதுந் - தீன னியம்புவே னெவ்வா றினியவருள் செய்யாய் சயம்புவே சோணா சலா (87) முத்தே மணியே முழுவயிரப் பொற்றூணே சித்தே யெமதுகுல தெய்வமே - சுத்தகுண மேருவே நற்கருணை மேகமே வந்தடைந்தேன் றாருவே சோணா சலா (88) சோதிக்க லாமா தொழும்பனேன் றன்னைமிக்க வாதிக்க லாமா மணியரவம் - பாதிக் கலாமதிகஞ் சேரவைத்த காரணநின் றாட்குச் சலாமதிகஞ் சோணா சலா (89) அண்டாண்ட கோடி யருளா லளித்தடிமை கொண்டாண்ட சோதிக் குருமணிநீ - கண்டாய் சமுகனே யாகவெனைத் தொண்டுகொள் வாயன்பர் சமுகனே சோணா சலா (90) திருவல கிட்டுத் திருமெழுக்கு மிட்டு மருவுதிருக் கோலமிட்டு வாழ்த்திப் - பெருகுதளி கம்பத்தே கத்துடனே கைகூப்பிச் சூழ்வதுநற் சம்பத்தே சோணா சலா (91) உருவா யருவா யுருவருவாய் நின்ற வொருவா வுபதேச மோதக் - குருவாய் வரவேண்டு முன்றன் மலர்ச்சரணத் தன்பு தரவேண்டுஞ் சோணா சலா (92) ஆரூரு மம்பலமு மானந்த கானமெனும் பேரூரங் கட்டமெனப் பேணுகிலேன் - சீரூர் நித்தியமே நின்னூர் நினைக்கின்றேன் முத்திபெறச் சத்தியமே சோணா சலா (93) பாரறியா விண்ணறியா பாதாளந் தானறியா யாரறிவா ருன்றனருஞ் சீர்த்தி - யோரணுவும் யானறியாத் தன்மையதே யெம்பெருமா னின்னமுநீ தானறியாய் சோணா சலா (94) கார்த்திகைக்குக் கார்த்திகைநாட் காட்சிபெறக் காட்டுகின்ற சீர்த்திவளர் மெய்ஞ்ஞான தீபத்தை - யேத்தி மதுரநேயத் தமிழால் வாழ்த்த வரந்தாராய் சதுரனே சோணா சலா (95) வானே முதலட்ட மாமூர்த்தி யாயமர்ந்த யேனே வுலகுய்ய வெண்ணியோ - வானே றதிபதியே ஞான வருணிதியே சீலச் சதிபதியே சோணா சலா (96) சம்புவே யென்றுனது தாணினைக்க வொட்டாம லைப்புலத்தார்கூடி யலைக்கின்ற - வெம்பிறவி வெந்தோடநீங்கு விபவமருள் வாய்மிகவுஞ் சந்தோடஞ் சோணா சலா (97) சோதனை செய்யாதே சுயவடிவா வந்தென்னை யாதரிப்பாய் காட்டி லருச்சுனனின் - பாதமலர் நாடினான் வேடுவனா நண்ணினாய் வில்லாலே சாடினான் சோணா சலா (98) வெள்ளையா வின்னும் விளம்புவதென் மென்கனிதேர் கிள்ளைமொழி போலிதனைக் கேட்டருள்க - பிள்ளைநான் மாதாநீ தொண்டனான் வணபதிநீ யேழைநான் தாதாநீ சோணா சலா (99) அருணாசலா வென்றே யன்புடனே போற்றி யிருணாச மெய்த்தீப மிட்டோர் - பெருவாழ்வைச் சிந்தையே செய்தளவு தோந்துரைக்க வொண்ணாதென் றந்தையே சோணா சலா (100) சோணாசல வெண்பா முற்றிற்று,

No comments:

Post a Comment

நன்றி