Sunday 10 September 2017

தீட்சையும் அதன் வகைகளும்!

தீ என்றால் அளித்தல் அல்லது கொடுத்தல் என்று பொருள். க்ஷ என்றால் அழித்தல்என்று பொருள். அதாவது ஞானத்தை அளித்து அஞ்ஞா னத்தை அழித்தல் தீட்சை. தீட்சையில் ஆறு வகைகள் உள்ளன. இவை பற்றிய விபரங்கள் காமிகம், காரணம் முதலா ன இருபத்தெட்டு ஆகமங்களில் விரி வாக உள்ளன. இந்த ஆகமங்களைப் பிரமாணமாகக் கொண்டு எழுதப்பட்ட பதினெட்டு பத்ததிகளிலும் தீக்ஷா விதி என்று ஒரு பகுதி உள்ளது. இவற்றுள் அகோர சிவாச்சாரியார் பத்ததி, சோம சம்பு சிவாச்சாரியார் பத்ததி என்பன முழுமையாகக் கிடைத்துள்ள நடைமு றையில் உள்ள நூல்களாகும். இவற்று ள் அகோர சிவாச்சாரியாரின் தீக்ஷா விதியிலே மேற்கோள் காட்டப் பட்ட கிரியாக்கிரம த்ஜோதி என்ற நூலுக்கு திருவாரூர் நிர்மல மணி தேசிகர் ‘ப்ரபா’ என்னும் பேருரை ஒன்றை ஆகமங்கள், உப ஆகமங் கள், பத்ததிகளில் இருந்து பல மேற்கோள்களைக் காட்டி எழுதியி ருக்கின்றார்.
இந்நூல்களில் பல வகையான தீட்சை முறைகள் பற்றிக் கூறப் படுகின்றது. இவை பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
1. நயன தீட்சை:
இதைவிட குருவானவர் தனது பார்வையால் சீடனுடைய மலங்க ளைப்பொசுக்கி அளிக்கும் தீட்சை நயன தீட்சையாகும். இது முட் டைகளை இட்ட மீன் அதைச்சுற்றி வந்து பார்த்து அதைப் பரிகரித்து குஞ் சாக்குவதற்கு ஒப்பிடுவர். மீனாக்ஷி என்றாள் மீன்போன்று நீண்ட அழகா ன கண்களை உடையவள் என்று பொருள். மீன் கண்க ளை மூடுவதில் லை. அதே போல உலக இரட்சகியா கிய அம்பாளும் தனது கண்களை மூடுவதில்லை. இதனாலும் மீனின் கண்களைப் போன்ற கண்களை உடையவள் என்றும் பொருள் கொள் ளலாம். மீன் எவ்வாறு தனது கண்க ளின் பார்வை யால் தனது முட்டை களை அடைகா த்து பக்குவமடையப் பண்ணி குஞ்சாக் குகின்றதோ அதே போல அம்பாளும் தனது குஞ்சுகளா கிய நம்மை ஓயாது தனது நயனத் தால் பரிகிரித்துப் பக்குவ மடைய வைக்கிறாள் என்று உணர்ந்து தெளிவது உத்தமமான பொ ருள். இது மாணிக்கவாசகர் சொல்லும் ” பொருள் உணர்ந்து சொல் லுவார்’ பொருள்.
2. பரிச தீட்சை-
குருவானவர் தனது கரங்களால் அல்லது திருவடிகளால் தொட்டு வழங்கும் தீட்சை யாகும். யோகர் சுவாமிகள் ஹவாய் இன்னாளில் சைவசித்தாந்த குருமடம் தாபித்த சுப்பிரமுனிய சுவாமிகளுக்கு முதுகில் ஓங்கி அறைந்து இந்த ஓசை அமெரிக்காவரை கேட்கும் என்று கூறியது பரிச தீட்சையாம்.
3. வாசக தீட்சை;-
குருவானவர் மந்திரத்தை அல்லது மகாவாக்கியத்தை சீடனுக்கு உபதேசித்தலாம். “யாரடா நீ? தீரடா பற்று” என்று செல்லப்பா சுவாமி கள் தன்னை முன்முதலில் சந்தித்த சதாசிவம் என்னும் யோகர் சுவாமிகளுக்குச் சொன்னது வாசக தீட்சையாம்.
“மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கி னர் க்கோர்
வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பாரா பரமே” என்று தாயுமானார் பாடலும்
“சாத்திரத்தை ஓதினர்க்குச் சற்குருவின் தன்வசன
மாத்திரைக்கே வாய்க்கு நலம் வந்துறு மோ” என்று திருக்களிற்றுப் படியாரும் கூறுவது இந்த வாசக தீட்சையையே. குருவானவர் சொல் லும் ஒன்றிரண்டு வார்த்தைகளுடன் பக்குவ ஆன்மாக் களுக்கு ஞான ம் கைகூடி விடும். 14ம் நூற்றாண் டில் வாழ்ந்த தில்லைத் தீட்சிதர் களில் ஒருவரான உமாபதி சிவம் பல்லக்கிலே தீவர்த்தி போன்ற ஆரவாரங் களுடன் திரும்பும் பொழு து தெருவிலே திரிந்து கொண்டிருந்த மறைஞான சம்பந்தர் கூறிய “பட்ட கட்டையிலே பகற்குருடு போகிறது” என்ற வசனம் அவருக்கு அக்கணத்திலேயே ஞானத்தைக் கொடுத்தது. இதையே “குறியறி விப்பான் குரபர னாமே” என்று திருமந்திரம் கூறுகின்றது.
4. மானச தீட்சை-
குருவானவர் தமது மனதில் சீடனை நினைந்த மாத்திரத்தில் அவன் பாசம் கெட உதவுதலாம். இது ஆமை தான் கரையில் இட்ட முட்டை யை தன் கருத்தினால் நினைந்து பரிகரித்து குஞ்சு வரச்செய்வது போல என்பர்.
5. சாத்திர தீட்சை-
வேதாந்த, சித்தாந்த சாத்திரங்க ளை, அவற்றின் தெளிவை சீடனுக்கு உபதேசித்து, விளக்க மளித்து தெளி வித்தலாம்.
6. யோக தீட்சை-
யோகநெறியின் அனுபவத்தை விளக்கி அளித்தலாம்.
இந்த ஆறு தீட்சைகள் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ செய்யப்படலாம். இவை பின்வரும் ஔத்திரி தீட்சையுடன் சேர்த்தும் செய்யப்படலாம்.
7. ஔத்திரி தீட்சை:
ஹோத்திரம் என்றால் ஹோமம் அல்லது அக்கினி என்று பொருள். ஆகவே ஔத்திரி தீட்சை என்பது அக்கினி காரியம் செய்து கொ டுக்கும் தீட்சை என்று பொருள் தரும். ‘ஹௌ த்ர்யா அஸ்ய பாசான் சஞ்சித்ய’ என்ற சித்தாந்த சாராவளி என்ற நூலின் வரிகள் இல்ல றத்தார்க்கு ஔத்திரி தீட்சையே சிறந்தது என்று உணர்த்துகின்றன. இது ஞானாவதி, கிரியாவதி என இரண்டு வகைப்படும்.
7.1. ஞானாவதி:
இது சத்தி தீட்சை என்றும் சொல்லப்படும், அக்கினி காரியத்தை அகத்தே மனதில் கற்பித்துச் செய்யும் தீட்சை யாம். இதிலும் மூன்று வகைகள் உள்ளன.
7.1.1. சமய தீட்சை அல்லது பிரவேச தீட்சை:
7.1.2. விசேட தீட்சை:
இரண்டாவது தீட்சை. இந்த தீட்சை பெற்றவ ரே சொந்தமாக வீட்டில் சிவலிங்கம் வைத் துப் பூசிப்பதற்கு உரித்து உடையவர்.
7.1.3. நிர்வாண தீட்சை:
இந்த தீட்சை பெற்றவரே யோக நெறிக்கு உரித்து உடையவராவர்.
7.2 இரண்டாவது வகையான ஔத்திரி தீட்சை கிரியாவதி;
மம் முதலிய அக்கினி காரியங்க ளைப் புறத்தே செய்து கொடுக்கும் தீட்சையாம். இதிலும் முன் போல மூன்று வகைகள் உள்ளன.
7.2.1. சமய தீட்சை
7.2.2. விசேட தீட்சை
7.2.3. நிர்வாண தீட்சை
நிர்ப்பீஜ தீட்சை:
இம்மூன்று வகையான ஔத்திரி தீட்சைகளிலும் சைவ ஆசாரத் தைக் கடைப்பிடிக்கும் வலிமையில்லாத வர்களுக்கு ஆச்சாரியார் ஓங்காரம் போ ன்ற பீஜாட்சரங்கள் கொடுக்காமல் செய்யு ம் தீட்சை நிர்ப்பீஜ தீட்சையாகும். நிர்ப் பீஜம் என்றால் பீஜம் இல்லாமல் என்று பொருள். பீஜம் என்றால் வித்து என்று பொருள், இங்கு இது பீஜ மந்திரத்தைக் குறிக்கும். ஓங்காரம் பீஜ மந்திரங்களில் ஒன்று.
சபீஜ தீட்சை:
பீஜாட்சரமும் கொடுத்து செய்யப்படும் தீட்சை.
ஆச்சாரியாபிஷேகம்:
ஞானாவதியாலோ அல்லது கிரியாவதி யாலோ இந்த மூன்று தீட்சைகளும் பெற்று முதிர்ந்தவர்களுக்குச் செய்வது ஆச்சாரியாபி ஷேகம். இது ஆசிரியராய் இருக்கும் தகுதியை அளிக்கும் பொரு ட்டுச் செய்யப்படுவதாகும். இது அந்தண ர், அரசர், வைசியர், சூத்திரர் ஆகிய நான் கு வர்ணத்தாருக்கும் உரியது. இப்போது அந்தணர்க ளில் சிலர் மட்டுமே இதைச் செய்கிறார்கள். சமீப காலத்தில் குடுமி கூட இல்லாத அந்தணர்களுக்கு ஆச்சா ரியாபிஷேகம் செய்யப்படும் அவலமும் பாரக்கிறோம்.
‘நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்’ – திருமந்திரம் பாடல் 230 & 1665
இவையெல்லாம் ஔத்திர தீட்சையின் வகைகள். இவை பற்றிய மேலதிக விளக்கங்களை சிவ ஞான சுவாமிகளின் சிவஞான போத த்து சிறப்புப்பாயிரத்துக்கான மாபாடிய உரையிலும், சிவஞான சித்தியார் பாடல் 255-262, சிவப் பிரகாசம் பாடல் 9 போன்ற தமிழ் நூல் களிலும், சோமசம்பு பத்ததி, பௌஷ்கர ஆகமம், மதங்க ஆகமம் போன்ற வடமொழி நூல்களிலும் காண்க. இது ஞானாவதி, கிரியா வதி என இரண்டு வகைப்படும்.
நிர்வாண தீட்சையில் பீஜாட்சரத்துடன் சபீஜ தீட்சை பெற்று, ஆச்சா ரியாபிக்ஷேகமும் செய்ய ப்பெற்ற, அந்தணர், அரசர், வைசியர், சூத்திரர் ஆகிய நான்குவர் ணங்களையு ம் சேர்ந்த ஆச்சாரியார் பிறர் பொருட்டு நித்திய நைமித்திக காமிய கிரி யைகளைச் செய்ய உரித் துடையர் என்று சிவஞான சுவாமிகள் சிவஞான மாபாடியத்தில் நிறுவுகின் றார். இவை பற்றிய மேல திக விபரங்களை தரும புர ஆதீனத்து ஏழாவது சன்னிதானமாகத் திகழ்ந்த ஸ்ரீலஸ்ரீ திரு வம்பல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளிய ‘வர்ணாசிரம சந்திரிகா’ என்ற நூலில் காண்க.
இந்த எல்லா வகையான தீட்சைகளிலும் சிவதர்மினி, உலக தர்மினி என்று இரண்டு வகைகள் உள்ளன. சிவதர்மினி என்பது சந்நியாச நெறியில் உள்ளவர்களுக்கு செய் யப்படும் தீட்சைகளாகும். உலக தர்மினி என்பது மற் றையோருக்குச் செய்யப்படும் தீட்சைகளா கும்.
ஆயினும் சமய தீட்சை, விசேட தீட்சை, நிர வாண தீட்சை ஆகிய மூன்று தீட்சைகளும் பெற்று ஆச்சாரியாபிக்ஷேகமும் பெற்று இல்லற மார்க்கமாகிய குடும்ப வாழ்க்கை யில் உள்ள, ஆதி சைவ மரபில் வரும் அந்த ணர்களே திருக்கோவில்களில் சிவலிங்க த் திருமே னியைத் தொட்டு உலக நன்மைக் காகவும், மக்களின் நன்மைக்காகவும் செய்யும் பரார்த்த பூசையைச் செய்யும் தகுதி உடையவர்கள் ஆவர் என்று ஆகமங்கள் கூறும். ஆலயங்களின் அமைப்பு, கிரியை கள், உற்சவங்கள், வழிபாடு என்பவற்றி ன் தத்துவ மற்றும் நடைமுறை விளக்கங்கள் ஆகமங்களிலேயே உள்ளன. இவை வேதங்களிலோ, வேதாந்தமான உபநிடதங்களிலோ அல்லது ஸ்மிருதிகளிலோ இல்லை ஆகவேதான் ஆகமவழியைச்சாராத சமார்த்த வைதிக அந்தணர்களுக்கு இந்த தகுதி இல்லை என்று கூறப்படுகின்றது. “அர்ச்சனைகள் சிவ வேதியர்க்கே உரியன” – பெரியபுராணம் பாடல் 4166.
இல்லற வாழ்வில் இருக்கும் குடும்பஸ்தர்களுக்கு அவ்வாறு இல் லற வாழ்வில் தனது மனைவியுடன் வாழும் இல்லற ஆச்சாரியாரே தீட்சை செய்வதற்கு உரியவர் என்று சிந்திய ஆகமத்தில் ‘ பௌதி கோபி விசேஷேண தர்ம்பத்னீ ஸமன்வித’ என்று கூறப்பட்ட சுலோ கத்தைக் காட்டி தமது ‘சிவாச்சிரமத்தெளிவு’ என்ற நூலில் துறவற நெறியில் நின்ற திருவாவடுதுறை ஆதீனத்தின் முப்பத்திரண்டாவது குருமகா சன்னி தானமாகத் திகழ்ந்த ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமா சாரிய சுவாமிகள் நிறுவியுள்ளார்கள். இவர் மெய்கண்ட சாத்திரங்களுக்குப் பிற்ப்பட்ட சைவ சித்தாந்த தத்துவ நூல் களான பண்டார சாத்திரங்கள் பதினான் கில் பத்து நூல்களை எழுதியவர். பண்டார சாத்திரங்கள் பதினான்கும் திருவாவடுதுறை ஆதீனத்து பண்டார சன்னிதிகளால் எழுதப்பட்டவையாகும்.
8. பாதோத்தக தீட்சை:
இதைவிட ஆச்சாரியாரின் பாதம் கழுவிய தீர்த்தத்தை அளித்தல் பாதோத்தக தீட்சையாம். சீடன் அதனைத் தனது சிரசில் புரோட்சித்து ஆசமனம் செய்ய (அருந்த) வேண்டும். வீரசைவ மரபில் இது தவறா து கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
9. சத்தியோ நிரவாணதை:
சத்யோ என்றால் விரைவாக என்று பொருள். இது தீட்சை செய்தவு டன் உடனடியாக முத்தி கொடுக்கும் தீட்சையாம். பதினாலாம் நூற்றாண்டில் உமாபதி சிவாச்சாரியார் தன்னிடம் அனுப்பப்பட்ட பெற்றான் சாம்பான் என்பவனு க்கும், அதன் பின்னர் முள்ளிச்செடி ஒன்றுகும் உடனடியாக உயிரை உடலை விட்டு நீக்கி பரமுத்தி கொடுத்தது இந்த தீட்சையாலேயாம். இது நிர்வாண தீட்சையில் அதி தீவிரத்தில் அதி தீவிரமான நிலையிலுள்ள சத்திநிபாதருக்கு வழங்கக்கூடிய தீட்சையாகும்.
10. அசத்தியோ நிர்வாணதை:
இது தீட்சையின் பின்னரும் உயிர் வாழ்ந்து, பிராரப்த வினையைக் கழித்து, உடலை விட்டு உயிர் நீங்கியதும் முத்தி அடையும் படியாகச் செய்யப்படும் நிரவாண தீட்சையா கும். இது அதி தீவிரத்தில் மந்த தரம், மந்தம், தீவிரம் முதலிய நிலைக ளிலுள்ள சத்திநிபாதர்க்குச் செய்யப்படும் தீட்சையாகும்.
11. சாம்பவீ தீட்சை:
திருக்கோயில் மகோற்சவங்களின் வழியாக இறைவன் பத்தர்களு க்கு சாம்பவீ தீட்சை செய்து வைக்கிறான். தீட்சைக்கு அத்தியாவசி யமான மண்டப மும் கும்பமும் கோயில் மகோற்சவ கால த்தில் யாகசாலையில் பிரதிஷ்டையாகி உள்ளன. அக்னி காரியம் செய்ப வர் ஆச்சா ரியர். உற்சவ காலத்தில் யாகசாலையில் இருந்து புறப் படும் சோமாஸ்கந்த மூர்த்தி யிலேயே அக்னி உள்ளது. இந்த மூர்த்த த்தில் உள்ள சிவனே வாகீசுவரர்; போக சத்தியான அம்பா ளே வாகீசு வரி; கந்தனே சிவாக்கினி என்னும் ஞானாக்கினி. சோமா ஸ்கந்த மூர்த் தமே உத்சவங்களுக்குச் சிறந்தது. சோமாஸ்கந்தர் இல்லாத ஆலயங்க ளில் நடேசர், சந்திரசேகரர், கல்யாண சுந்தரர், உமாமகே சுவரர் போன்ற மூர்த்தங்களில் ஒன்றை மத்திம பட்சமாகப் பாவிக்கலாம். வெளி யே பல விதமான சிஷ்யர் கள் உள்ளார்கள்; தீட்சை ஆனவர்கள், தீட்சை ஆகாதவர்கள், பாசத்தில் உழல்வோர், பக்குவமடைந்தோர், ஆசாரம் இல்லாதவர்கள் எனப் பல வகைப்பட்ட மக்களுமே சிஷ்யர்கள். இவ்வாறாக தீட்சைக்கு அத்தயாவசா யமான மண்டபம், கும்பம், ஆச்சாரிய ன், சீடன், அக்கினி ஆகிய ஐந்து பஞ் சாதி கரணங்களும் உள்ள கோயில் மகோற்ச வங்களினூடாக இறைவன் அருள்செய்வதே சாம்பவீ தீட்சை. (உத்தர காரண ஆகமம்).
மெய்கண்ட ஆச்சாரியாருக்கு முந்தைய சைவசித்தாந்த பாரம்பரிய த்தில் தீட்சையில்லாமல் முத்தி அடைய முடியாது என்ற தீவிரப் போக்கு இருந்தது. அகோர சிவாச்சாரியாரின் நூல்களில் இந்தப் போக்கை நாம் காணலாம். இதி லே தீட்சையால் மட்டுமே முத்திக்கு வழி யாகும் என்ற அதிதீவிரப்போக்கும் இருந் தது. சிவஞான சுவாமிகள் தனது சிவ ஞான மாபாடியத்திலே தீட்சையால் மட்டு ம் முத்தி என்ற கருத்தை மறுத்துரைத்து தீட்சையுடன் ஆத்மீக சாதனையும் வேண் டும் என்று நிறுவுகின்றார். தென்னிந்தியா விலே சோமசம்பு பத்ததி போல யாழ்ப் பாணச்சைவ மரபிலே கிரியை களுக்குப் பின் பற்றப்பட்டு வருவது அகோரசிவ பத்த தியே.
மகா பாரதத்தின் அநுசாசன பர்வத்தின் பதினான்காம் அத்தியாய தில் 374ம் சுலோகத்தில் கிருஷ்ணர் உப மன்னியு முனிவரிடம் பாசு பத தீட்சை என்னும் சிவதீட்சை பெற்று சிவபூசை செய்துவந்த வரலாறு கூறப்பட்டிருக்கின்றது. இது இதே போன்று இராமர் அகத்திய முனிவ ரிடம் பாசுபத சிவ தீட்சை பெற்றதை வால் மீகி இராமாயணமும், பத்ம புராணத்தில் உள்ள சிவகீதை மூன் றாம் அத்தியாயமும் கூறுகின்றது. இதைவிட மூல நூல்களான வால் மீகி இராமாயணமும், வியாசரின் மகாபாரதமும் இராம இலட்சுமண ர்களினதும் கிருஷ்ண பலராமர்களி னதும் ஆடை அலங்காரங்கள் பற்றி க்கூறும்போது அவர்களை விபூதி உருத்திராட்சதாரிகளாகவே வர்ணிக்கின்றன. தமிழில் உள்ள வில்லிபுத்தூராழ்வார் பாடிய மகாபாரதமும் கிருஷ்ணரை இவ்வாறே வர்ணிக்கின்றது.

No comments:

Post a Comment

நன்றி