தானங்களால் பலவிதமான புண்ணிய பலன்கள் ஏற்படுகின்றன என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. எதை எதை தானம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ற விவரம் வருமாறு:-
அன்னதானம்: வறுமையும், கடன்களும்
நீங்கும்.
பூமிதானம்: பிரம்ம லோகத்தையும்
ஈசுவர தரிசனத்தையும் அளிக்கும்.
கோதானம்: ரிஷிக்கடன், தேவகடன், பித்ருக்கடன்
ஆகியவற்றை போக்கும். வஸ்திரதானம்: ஆயுளை
விருத்தி செய்யும்.
தீப தானம்: கண் பார்வையை
தீர்க்கமாக்கும். பித்ருக்களை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வரும்.
தேன் தானம்: புத்திர பாக்கியம்
உண்டாக்கும்.
அரிசி தானம்: பாவங்களை போக்கும்.
தயிர் தானம்: இந்திரிய விருத்தி
உண்டாக்கும்.
நெய் தானம்: நோய்களை நிவர்த்தி
செய்யும்.
நெல்லிக்கனி தானம்: ஞானம்
உண்டாக்கும்.
பால் தானம்: துக்கம் நீக்கும்.
தேங்காய் தானம்: பூரணநலன்
உண்டாக்கும். நினைத்த காரியத்தில் வெற்றியளிக்கும்.
தங்க தானம்: குடும்ப தோஷம்
நிவர்த்தி அடையும்.
வெள்ளி தானம்: மனக்கவலை நீங்கும்.
பழங்கள் தானம்: புத்தியும்
சித்தியும் தரும்.
இப்படி ஒவ்வொரு
பொருளுக்கும் பலன்கள் உண்டு.
No comments:
Post a Comment
நன்றி